search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "amusement park"

    • எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
    • அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் விழுந்துள்ளான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றி உள்ளார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பூங்கா ஊழியர்களை விமர்சனம் செய்து கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பூங்காவில் சாகச சவாரி நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜாம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார்.
    • சம்பவத்தை தொடர்ந்து பூங்காவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் நீர் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு ஜம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார்.

    அப்போது பூங்காவில் படகு சறுக்கி விழுந்ததில் ஜானி குவைத் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், " பொழுதுபோக்கு சவாரியின் நீர் சறுக்கும் படகு ஜானியின் தலையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ள நர்சிங் ஹோமுக்கு கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அங்கிருந்து காட்சிலா சதார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஜானி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்" என்று கூறினர்.

    சம்பவத்தை தொடர்ந்து பூங்காவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நீர் பொழுதுபோக்கு பூங்காவின் மேலாளரை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளோம். அதை இயக்குவதற்கான சரியான ஆவணத்தைக் கூட நீர் பூங்கா ஆணையத்தால் சமர்ப்பிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

    ×