என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலா பயணி"
- யானை சாலைக்கு வந்ததால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.
- சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தமிழ்நாடு-கர்நாடக பாதையில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த வழியாக நேற்று ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சாலைக்கு வந்தது.
அந்த வழியாக கேரட் ஏற்றி சென்ற லாரியை அந்த யானை வழிமறித்தது. டிரைவரும் உடனே வண்டியை நிறுத்தி விட்டார். பின்னர் யானை அங்கு நின்றபடியே லாரியில் இருந்த கேரட்டை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தது.
யானை சாலைக்கு வந்ததால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. அப்போது யானை நிற்பதை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் ஆர்வ மிகுதியில் யானை அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றார்.
அப்போது யானை திடீரென சுற்றுலா பயணியை நோக்கி விரட்டி வந்தது. இதனால் சுற்றுலா பயணி வாலிபரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் யானை விடாமல் துரத்தி வந்தது. அப்போது திடீரென சுற்றுலா பயணி சாலையில் தடுக்கி விழுந்தார். உடனே யானை அவரை தனது காலால் தாக்கியது. இதில் சுற்றுலா பயணி பலத்த காயம் அடைந்தார்.
இதனால் அதிர்ச்சியான சக சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்.
பின்னர் பலத்த காயம் அடைந்த சுற்றுலா பயணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணியை காட்டு யானை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ஜூலியானா மரின்ஸ் எரிமலையில் உள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
- இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்தோனேசியா எரிமலையில் சிக்கி பிரேசில் சுற்றுலா பயணி பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயதான ஜூலியானா மரின்ஸ் என்ற பெண் ஒரு குழுவுடன் சேர்ந்து இந்தோனேசியாவின் ரிஞ்சனி எரிமலையில் ஜூன் 21 ஆம் தேதி மலையேற்றம் செய்துள்ளார். அப்போது திடீரென ஜூலியானா மரின்ஸ் அங்குள்ள ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த இந்தோனேசிய மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். டிரோன் மூலம் ஜூலியானா மரின்ஸ் உயிருடன் இருப்பதை கண்டறிந்த மீட்புப்படையினர் அவரை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அவரை உயிருடன் மீட்கமுடியவில்லை. ஜூன் 24 ஆம் தேதி ஜூலியானா மரின்ஸ் சடலத்தை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.
- கடந்த நவம்பர் முதல் ஒரு வருட விசாவில் இந்தியாவில் இருக்கிறார்.
- குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார்
ராஜஸ்தானின் பிரபல சுற்றுலாத் தலமான உதய்பூரில் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன ஊழியர் ஒருவர் பிரெஞ்சு சுற்றுலாப் பயணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நகரில் சிறப்பு வாய்ந்த இடங்களை சுற்றிக் காட்டுவதாகக் கூறி, அவர் அப்பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்று இந்தக் கொடுமையைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பிரெஞ்சு பெண், மற்ற இரண்டு பெண் தோழிகளுடன் உதய்பூருக்கு ஒரு விளம்பரப் படப்பிடிப்பிற்காக வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விளம்பரப் படப்பிடிப்பை ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அப்பெண் கடந்த நவம்பர் முதல் ஒரு வருட விசாவில் இந்தியாவில் இருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, பாதிக்கப்பட்ட பிரஞ்சு பெண், அவரது நண்பர்கள் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் சில ஊழியர்கள் உதய்பூரின் புட்கான் பகுதியில் உள்ள டைகர் ஹில்ஸில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்றனர். அனைவரும் இரவு உணவு சாப்பிட்டதாகவும், அங்கு மது அருந்தியதாகவும் தெரிகிறது.
பின்னர், அந்த ஊழியர்களில் ஒருவரான சித்தார்த் நகரத்தை சுற்றிக்காட்டுவதாக கூப்பிட்ட அழைப்பில் பேரில் தான் அவருடன் காரில் சென்றதாகவும், அவர் தன்னை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி யோகேஷ் கோயல் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார் எனவும் உணவகம் மற்றும் ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.
சம்பவம் குறித்து பிரெஞ்சு தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அன்று உணவகத்தில் இருந்த மற்றவர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
உத்தரப் பிரதேசத்தில் தாஜ்மகாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த 28 வயது பெண் சுற்றுலாப் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட செக் நாடு பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் தாஜ்மகாலை பார்வையிட ஷாம்ஷான் காட் சாலையில் நடந்து செல்லும்போது மர்ம நபரால் தகாத முறையில் தொட்டு துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சி.சி.டி.வி கேமரா பதிவை ஆராய்ந்ததில் அந்த நபர் ஆக்ராவை சேர்ந்த கரண் ரத்தோர் என்று தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை தேட பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டதாக துணை கமிஷ்னர் சையத் அரீப் அகமது தெரிவித்தார்.
- சனி, ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி குவிந்தனர்
- நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரி சீசன் காலமாக கருதப்படுகிறது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
இந்த3மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல் மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த நிலையில் சனி, ஞாயிறு தொடர்விடு முறையையொட்டி கடந்த2நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களைகட்டியது.
இந்த2நாட்கள் தொடர்விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக இருந்தனர்.அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்களில்பல்லா யிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்குவிந்தனர்.இன்றும் கன்னியாகுமரியில்முக்கடலும்சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துஇருந்தனர்.
கன்னியாகுமரி கடலில் இன்றுஅதிகாலையில் வானம் மேகமூட்டமாக இருந்ததால் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலாபயணிகள் பார்க்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாபயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ளவிவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடஇன்றுகாலை 6மணியில் இருந்தேசுற்றுலாபயணிகள் படகுத்துறையில்நீண்ட கியூவில் காத்திருந் தனர்.அவர்கள்காலை 8மணியில்இருந்து படகில்ஆர்வத்துடன் பயணம்செய்துவிவே கானந்தர்மண்டபத்தைபார்வையிட்டுவந்த னர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா,சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் விடுமுறைஇல்லாத நாட்களிலும் சுற்றுலா தளங்கள் களை கட்டியது.
இந்தசுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும்போ டப்பட்டுஇருந்தது. கடற்கரைப்பகுதியில்சுற்றுலாபோலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர்நினைவு மண்டபத்தை சனி ஞாயிறு தொடர் விடுமுறையான கடந்த2நாட்களில் மட்டும் 17ஆயிரத்து400சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 9ஆயிரத்து200 பேரும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 8ஆயிரத்து200 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.
- வெயிலுடன் இயல்பு நிலை திரும்பியதால், வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வரத் துவங்கி விட்டனர்.
- தேவையான பிலிம் ரோல்களை அமெரிக்காவில் இருந்தே அவர் கொண்டு வந்திருந்தார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் "மாண்டஸ்" புயல் மற்றும் தொடர் மழையால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. தற்போது வெயிலுடன் இயல்பு நிலை திரும்பியதால், வழக்கம்போல் பயணிகள் வரத் துவங்கி விட்டனர்.
அமெரிக்காவில் இருந்து மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணி தாமஸ் என்பவர் டிஜிட்டல் கேமரா, ஆன்ட்ராய்டு போன் எதுவும் பயன்படுத்தாமல் 1990களில் பயன்படுத்திய பிலிம்ரோல் கேமராவை பயன்படுத்தி புராதன சின்னங்களை படம் எடுத்தார். இங்கு பிலிம் ரோல் கிடைக்காது என்பதால் தேவையான ரோல்களை அமெரிக்காவில் இருந்தே அவர் கொண்டு வந்திருந்தார். அவருக்கு மதன் என்ற உள்ளூர் வழிகாட்டி உதவினார். பழமை மாறாத அமெரிக்க இளைஞர் தாமசை பார்த்து மற்ற பயணிகள் வியப்படைந்தனர்.
- குமரியில் மழை நீடிப்பு
- குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை
நாகர்கோவில்:
வங்கக் கடலில் இலங்கை அருகே நிலை கொண்டி ருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து உள்ளது. இருப்பினும் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த நிலையில் மாவட் டம் முழுவதும் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இரவும் விட்டு விட்டு மழை பெய்தது. கன்னியாகுமரி யில் இன்று அதிகாலையில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. சுசீந்திரம், கொட்டாரம், மயிலாடி, அஞ்சுகிராமம், மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகா லையில் கன மழை பெய்தது.
இதைத் தொடர்ந்து வானத்தில் கருமேகங்கள் திரண்டு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப் போது மழை பெய்தது. நாகர்கோவிலிலும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. புத்தன் அணை, ஆணைக்கிடங்கு, கன்னிமார், நிலப்பாறை பகுதிகளிலும் மழை பெய் தது. நிலப்பாறையில் அதிக பட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மலையோரப் பகுதி யான பாலமோர் பகுதி யிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழை யின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. தற்பொழுது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு அருவியில் ஆனந்த குளியலிட்டு வரு கிறார்கள்.
அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அங்கு அலை மோதி வருகிறது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.38 அடியாக இருந்தது. அணைக்கு 803 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 785 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.98 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை யில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருஞ்சாணி-1.6, பாலமோர்-2.4, மயிலாடி- 6.4, கொட்டாரம்-5.2, நிலப்பாறை-8.4, கன்னி மார்-1.8, பூதப்பாண்டி-1, நாகர்கோவில்-7, ஆணைக்கிடங்கு-3.2, புத்தன் அணை-1.2.
- மனைவி கண் எதிரே பரிதாபம்
- கன்னியா குமரி போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
மத்தியபிரதேசம் மாநிலம் தார் திரியா பகுதியைச் சேர்ந்தவர் மதன்சிங் தாகூர் (வயது 72).
இவர் மனைவி நர்மதா தாகூர் உள்பட 120 பேருடன் 2 பஸ்களில் நேற்று மதியம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பார் வையிட்டனர்.
அதன்பிறகு அவர்கள் கன்னியாகுமரியி ல் உள்ள சன்செட் பாயிண்ட் கடலில் குளித்துஉள்ளனர். அப்போது "திடீர்"என்று மதன்சிங் தாகூர் தனது மனைவி கண் எதிரே மயங்கி விழுந்து உள்ளார்.
இதைப் பார்த்து அவரது மனைவி மற்றும் அவருடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் கன்னியா குமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் மதன் சிங் தாகூர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார்அங்குவிரைந்து சென்று பிணத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கன்னியா குமரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி ஆற்றுப்பகுதிகளில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.
- நீரில் மூழ்கி மரணம் அடையும் சோக சம்பவம் அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமாக உள்ளது.
தருமபுரி,
தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் ஒகேனக்கல்லில் நாள்தோறும் ஆயிர க்கணக்கான சுற்றுலா பய ணிகள் வருகை தருகின்றனர்.
இது தவிர சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாகவும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவி களும் வருகை தருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து ஒகேனக்கல் அருவியில் குளித்து பரிசலில் சவாரி செய்து காவிரியின் அழகை கண்டு ரசித்து ஒகேன க்கல்லில் மீன் உணவை உண்டு ரசித்து மகிழ்வது வழக்கம்.
குறிப்பாக இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் பிரதான அருவி பகுதிகளிலும் சினி பால்ஸ் உள்ளிட்ட காவிரி ஆற்றுப்பகுதிகளில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்து வருகின்றனர்.
இதேபோல் கடந்த மே மாதம் 16-ம் தேதி ஐந்தருவி பகுதிக்கு சென்ற பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் ஆறுமுகம் என்பவரின் மனைவி சுமதி என்பவர் பாறைகளின் மீது செல்பி எடுக்க முற்பட்டபோது கால் தவறி காவிரி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளார்.
அதேபோல் சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 2015 -ம் ஆண்டு அன்று இங்கு சுற்றுலா வந்த போது காவிரியில் பரிசலில் சென்று செல்பி எடுக்க முயன்ற போது பரிசல் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதுபோன்று இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவரது குடும்பத்தார் காவிரியின் அழகை கண்டு ரசிக்கும் ஆர்வத்தில் ஆற்றுப்பகுதிகளிலும் பிரதான அருவி ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளிலும் பாறைகளின் மீது நின்று செல்பி எடுக்கும் போது கால் தவறி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி மரணம் அடையும் சோக சம்பவம் அடிக்கடி நிகழ்வது சர்வ சாதாரணமாக உள்ளது.
ஆகவே தருமபுரி மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தீயணைப்பு துறை மற்றும் ஊர் காவல் படையினர் ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து ஒகேனக்கல் காவிரியில் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், பிரதான நீர்வீழ்ச்சி செல்லும் நடைபா தையிலும் பாதுகாப்பை பலப்படுத்தி சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
- வார நாட்களில் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரை
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் மத்திய அரசின் கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்கு கலன்கள் இயக்குநகரத்தின் கீழ் 1971-ம்ஆண்டு கலங்கரை விளக்கம் திறக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் இதனை பார்வையிட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது கொரோனா கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட நாளை (13-ந் தேதி) முதல் அனுமதிக்கப்படுகிறார்கள்.
வார நாட்களில் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் சுற்றுலா பயணிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்
கலங்கரை விளக்கத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்லும் வகையில் முழுவதும் கண்ணாடியால் ஆன லிப்ட் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கலங்கரை விளக்க த்தின் மேல் நின்று பார்வை யாளர்கள் சுற்றி பார்க்கும் வகையில் புதிதாக கேலரியும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதில் இருந்து இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்க கடல் ஆகிய 3 கடல்களும் சங்கமிக்கும் முக்கடல் சங்கமத்தையும், கன்னியாகுமரியின் முழு அழகையும், விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றையும் பார்த்து ரசிக்கலாம்.
கலங்கரை விளக்கத்தை பார்வையிட பெரியவர் களுக்கு ரூ.10-ம், சிறியவர்களுக்கு ரூ.5-ம், கேமராவுக்கு ரூ.20-ம் வசூலிக்கப்படுகிறது. மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி கலங்கரை விளக்க அதிகாரி கே.பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க ஆரோக்கியம் சென்றார்
- நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது.
கன்னியாகுமரி :
கேரள மாநிலம் திருவ னந்தபுரம் விழிஞ்சம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது45). இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தார்.
கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே உள்ள முக்கோண பூங்கா முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சுற்றுலா இடங்களை சுற்றி பார்க்க ஆரோக்கியம் சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் திரும்பி வந்தார்.
அப்போது குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதனை பல இடங்களில் தேடியும் காணவில்லை. அதனை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதனால் திடுக்கிட்ட ஆரோக்கியம் இது குறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.
- அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது
உடுமலை :
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.இந்த அணையின் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதுடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைப்பகுதியில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் புகைப்படம் எடுத்து மகிழவும் முதலைப் பண்ணையை பார்வையிடவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமராவதிக்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மேலும் மகிழ்விக்கும் விதமாக மகளிர் சுய உதவி குழுவினர் சார்பில் அணைப்பகுதியில் படகு சவாரியும் நடைபெற்று வருகிறது. இதற்காக பத்து நிமிட பயணத்திற்கு நபர் ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அணையிலும் போதுமான அளவு நீர்இருப்பு உள்ளதால் படகு சவாரி மனதிற்கு புத்துணர்வை அளிப்பதுடன் இனிமையான நிகழ்வாக உள்ளது.கடல் போன்று காட்சி அளிக்கும் அணையில் படகில் திகிலுடன் சென்று திரும்பும் சில வினாடிகள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும். அந்த அனுபவத்தை மீண்டும் மீண்டும் பெறுவதற்காக அணைப்பகுதிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் படகில் ஏறி சவாரி செய்து வருகின்றனர். குறிப்பாக வார,கோடை,பொது விடுமுறை நாட்களில் படகு சவாரி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமராவதி அணைக்கு வருகை தந்த வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் அணைப்பகுதி, பூங்கா, முதலைப் பண்ணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.பின்பு படகு சவாரிக்கு சென்றனர். இதையடுத்து படகில் ஏறி குடும்பத்துடன் சென்று உற்சாகமாக சவாரி செய்து மகிழ்ந்தனர். அதற்கு முன்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு படகோட்டியின் சார்பில் விழிப்புணர்வும் உயிர் கவசமும் வழங்கப்பட்டது. மேலும் திருமூர்த்தி அணையில் நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் உள்ள படகு சவாரியை துவக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.






