search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை  2நாட்களில்17ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    X

    சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது எடுத்த படம் 

    கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 2நாட்களில்17ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

    • சனி, ஞாயிறு தொடர் விடுமுறையையொட்டி குவிந்தனர்
    • நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் கன்னியாகுமரி சீசன் காலமாக கருதப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    இந்த3மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல் மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.

    இந்த நிலையில் சனி, ஞாயிறு தொடர்விடு முறையையொட்டி கடந்த2நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களைகட்டியது.

    இந்த2நாட்கள் தொடர்விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற வண்ணமாக இருந்தனர்.அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்களில்பல்லா யிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்குவிந்தனர்.இன்றும் கன்னியாகுமரியில்முக்கடலும்சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துஇருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்றுஅதிகாலையில் வானம் மேகமூட்டமாக இருந்ததால் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலாபயணிகள் பார்க்கமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலாபயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ளவிவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடஇன்றுகாலை 6மணியில் இருந்தேசுற்றுலாபயணிகள் படகுத்துறையில்நீண்ட கியூவில் காத்திருந் தனர்.அவர்கள்காலை 8மணியில்இருந்து படகில்ஆர்வத்துடன் பயணம்செய்துவிவே கானந்தர்மண்டபத்தைபார்வையிட்டுவந்த னர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா,சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறைஇல்லாத நாட்களிலும் சுற்றுலா தளங்கள் களை கட்டியது.

    இந்தசுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும்போ டப்பட்டுஇருந்தது. கடற்கரைப்பகுதியில்சுற்றுலாபோலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர்நினைவு மண்டபத்தை சனி ஞாயிறு தொடர் விடுமுறையான கடந்த2நாட்களில் மட்டும் 17ஆயிரத்து400சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை 9ஆயிரத்து200 பேரும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 8ஆயிரத்து200 பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுஉள்ளனர்.

    Next Story
    ×