என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild elephant"

    • யானை காரை துரத்தும் காட்சியை வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
    • சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தமிழகம்-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சமீபகாலமாக பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி அடுத்த சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகன ஓட்டி ஹாரனை அடித்ததால் திடீரென ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை அந்த காரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி காரை பின்னோக்கி வேகமாக இயக்கினார். சிறிது தூரம் அந்த காரை விரட்டி சென்ற அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். யானை காரை துரத்தும் காட்சியை இந்த வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது. இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • காட்டு யானைகள் கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும்.
    • வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. இங்கு புலி, மான், வரையாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெயில் வாட்டி வதைப்பதால், ஆழியார் அணையில் நீர்மட்டம் வறண்டு பாறைகள் தென்படுகின்றன.

    இதனால் நீலகிரி வனத்தில் உள்ள காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக தற்போது வனத்தில் இருந்து வெளியேறி, ஆழியாரின் வறண்ட அணைப்பகுதியில் சுற்றி திரிகின்றன.

    ஆழியார்-வால்பாறை சாலையில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் முகாமிட்டு உள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக பொதுமக்களை காட்டு யானைகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    மேலும் ஆழியார் பகுதியில் உலா வரும் யானைகள் கூட்டத்தை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    இதற்கிடையே வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காட்டு யானைகள் கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும். வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம். மேலும் வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்கவோ, வனவிலங்குகளை கண்டதும் சாலையில் வாகனங்களை நிறுத்தவோ கூடாது. மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.
    • கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வனத்துக்குள் சென்று வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், முள்ளி உள்ளிட்ட பகுதியில் இருந்து 23 காட்டு யானைகள் இடம்பெயர்ந்து குன்னூர் பகுதியில் தனித்தனி குழுவாக நடமாடி வருகிறது.

    ஊட்டியில் சுற்றித்திரிந்த ஒற்றைக்கொம்பன் தற்போது தொட்டபெட்டா பகுதிக்கு சென்று லவ்டேல் பகுதியில் நடமாடி வருகிறது.

    இந்த நிலையில் சமவெளி பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை நேற்று மாலை குன்னூருக்கு வந்தது. பின்னர் அந்த ஒற்றை யானை சாலையோரம் வழியாக சென்று அங்குள்ள செங்குத்தான மலைச்சரிவில் ஏறி வனத்துக்குள் சென்றது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை வேகமாக மலையேறி செல்வதை அங்குள்ள சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் காட்டு யானைகள் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருவதால் அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர். 

    • யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
    • காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரைப்பள்ளம் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திடீரென வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் கடந்து சென்றது. திடீரென யானை கூட்டம் வந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டனர்.

    சாலையை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலமாகும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது.

    கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஹாரன்களை அடித்தால் யானைகள் கோபமடையும். தற்போது ஆசனூர் வனப்பகுதியில் காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது.
    • அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் மலைப்பாதையில் சுற்றி திரிந்த 8 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, அங்கிருந்து 15 கி.மீ தூரம் கடந்து, தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு நேற்று முன்தினம் வந்தது.

    யானை வந்த தகவலை அறிந்ததும் வனத்துறையினர் உடனே அங்கு சென்று அங்கிருந்த சுற்றுலா பயணிகளையும், வியாபாரிகளையும் வெளியேற்றினர்.

    மேலும் நேற்று தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்றும் நீடிக்கிறது.

    யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது. உடனடியாக வனத்துறையினர் அங்கு வந்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்குள்ள முக்கிய வீதிகளில் சுற்றி திரிந்ததால் வனத்திற்குள் விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். இதற்கிடையே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழக வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் அனுமதி வழங்கினார். இதனால் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் உதவியுடன் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

    ஆனால் இரவில் சுற்றிய யானை காலையில் எங்கு சென்றது என்பது தெரியததால் அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இந்த பணியில் மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர், கால்நடை மருத்துவ குழு, வனத்துறையினர் என 60 பேர் ஈடுபட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் யானையை கண்காணித்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு யானை தொட்டபெட்டா மலைசிகரத்தில் தென்பட்டது. அங்கிருந்து வெளியேறிய யானை, தொட்டபெட்டா நான்கு ரோடு சாலைக்கு வந்தது.

    வனத்துறையினர் விரைந்து வந்து ஊட்டி-கோத்தகிரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி, யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடிவு செய்தனர். ஆனால் யானை, அருகே உள்ள செடிகளுக்குள் சென்று மறைந்தது. இதனால் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    அதற்குள் யானை அங்கிருந்து வேறுபகுதிக்கு சென்றது.இதையடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார். அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட வனபாதுகாவலர் கவுதம் கூறும்போது, யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது யானை இருக்கும் இடத்தை டிரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானை நடமாட்டம் இருப்பதால் இன்றும் தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    • குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது.
    • வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி சுற்றித்திரிகின்றன.

    அந்த வகையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

    அப்போது அந்த கிராமத்தின் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது.

    அந்த குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையில் இருந்து வெளியேற முடியவில்லை.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர்.

    அதனைத்தொடர்ந்து குட்டையில் இருந்து வெளியேறிய யானை அந்த பகுதி வழியாக நடந்து சென்றது. அப்போது ஜே.சி.பி. வாகனத்தின் மீதும் அப்பகுதி பொதுமக்கள் மீதும் யானை ஆக்ரோசத்துடன் கத்தியது.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது.
    • காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியான பெரும்பாறை அருகே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட பகுதியில் கடந்த சிலநாட்களாக காட்டு யானை முகாமிட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றது.

    இந்த நிலையில் நேற்று இரவு காபி தோட்டத்தை சேர்ந்த விவசாயிகளான கோவிந்தராஜ், பூபதி, காந்தி ஆகியோருக்கு சொந்தமான காபி தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு பயிர்களை நாசம் செய்தது. இன்று காலை மல்லிகைபாறை வழியாக தார்சாலைக்கு வந்து சந்தனச்சோலை வனப்பகுதிக்குள் சென்றது.

    காட்டு யானை தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மல்லிகைபாறை, காபி தோட்டம், கவுச்சிகொம்பு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • கடந்த சில வாரங்களாக முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியது.
    • சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் பகுதியில் காட்டு யானைகளால் பொதுமக்கள், விவசாயிகள் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறி தொரப்பள்ளி, குனில் வயல், புத்தூர் வயல் உள்ளிட்ட சுற்று வட்டார விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை 3 மணிக்கு குனில் வயல் பகுதியில் காட்டு யானை நுழைந்தது. பின்னர் அப்பகுதியில் பயிரிட்டு இருந்த மரவள்ளிக் கிழங்கு செடிகளை மிதித்து நாசம் செய்தது. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த அப்துல் முத்தலிப் என்பவரது கார் கதவு மற்றும் கண்ணாடியை உடைத்தது. இதை அறிந்த பொதுமக்கள், விவசாயிகள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். கேரட்டுகளை தின்றது இதனால் அங்கிருந்து முக்கிய சாலை வழியாக சென்ற காட்டு யானை தொரப்பள்ளி பஜாருக்குள் சென்றது. அப்போது ஊட்டியில் இருந்து கர்நாடகா செல்வதற்காக கேரட் மூட்டைகளை ஏற்றி வந்த சரக்கு லாரியை யானை மறித்தது. தொடர்ந்து லாரியில் இருந்த மூட்டைகளை சேதப்படுத்தி கேரட்டுகளை தின்றது. இதில் கேரட்டுகள் நாசமானது. பின்னர் டிரைவர் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் வனத்துறையினர் விரைந்து வந்து சேதமடைந்த பயிர்கள், காரை பார்வையிட்டனர். அப்போது காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். மேலும் சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

    • கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான்பத்தேரி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
    • வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் வயநாடு அருகே சுல்தான்பத்தேரி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்குள்ள தொழிலாளர்கள் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று தம்பியை தாக்கியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக தம்பி யானையிடம் இருந்து தப்பி சென்றார். எனினும் இவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருடன் சென்ற தொழிலாளர்கள் தம்பியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த யானை தமிழகத்தின் கூடலூர் வழியாக கேரளா நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • யானை புகுந்ததை அறிந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
    • யானை வருவதை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் பார்த்ததும் அதிர்ச்சியாகினர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் தற்போது 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அவ்வப்போது ஊருக்குள் புகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

    யானை நடமாட்டம் இருப்பதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறியது. வனத்தை விட்டு நேராக குடியிருப்புக்குள் புகுந்தது.

    பின்னர் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சென்று தண்ணீர் குடித்தது. தொடர்ந்து அருகில் உள்ள வாழை தோட்டத்திற்குள் சென்றது. இதனிடையே குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர்.

    யானை புகுந்ததை அறிந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை கண்காணித்து வனத்திற்கு விரட்டினர்.

    இந்நிலையில் இன்று காலை அதே ஒற்றை காட்டு யானை கணுவாய் மெயின் ரோட்டில் ஒய்யார நடைபோட்டு நடந்து வந்தது. யானை வருவதை சாலையில் நின்றிருந்த பொதுமக்கள் பார்த்ததும் அதிர்ச்சியாகினர். பயத்தில் அங்கிருந்த மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்த யானை சாலைகளில் வெகுநேரமாக சுற்றி திரிந்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனத்துறையினர் விரைந்து வந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது யானை சாலையில் சுற்றி திரியும் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியிருப்புகளுக்குள் புகுந்த யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    • கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன.
    • நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

    இங்கு காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகிறது.

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அடிக்கடி யானைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஒற்றை யானை ஒன்று கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை யானை சுற்றி திரிந்தது.

    சாலையில் வெகுநேரம் நின்று சாலை ஓரங்களில் உள்ள செடி கொடிகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதனால் சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நீண்ட நேரத்திற்கு பிறகு தானாகவே காட்டுக்குள் யானை சென்று விட்டது. அதன்பின்னரே வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

    இதுபோன்ற ஒற்றை காட்டு யானை அடிக்கடி சாலையில் நின்று வருவதால் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கூறி வருகிறார்கள்.

    • பொதுமக்கள் நவ்ஷாத் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காட்டு யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சீ போர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(வயது38). தொழிலாளி.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜமால்(28) என்பவரும் தனியார் எஸ்டேட் காபி தோட்ட பகுதியில் நடந்து வந்தனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை திடீரென 2 பேரையும் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து 2 பேரையும் தாக்கியது. இதில் நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜமால் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டி காயம் அடைந்த ஜமாலை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நவ்ஷாத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் அவர்கள் எடுக்கவிடவில்லை. யானையை இந்த பகுதியை விட்டு விரட்ட வேண்டும், யானையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டம் விடிய, விடிய நீடித்தது.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக யானை தாக்கி இறந்த நவ்ஷாத்தின் உடலை எடுக்க விடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுற்றி திரியும் யானையை உடனே பிடிக்க வேண்டும்.

    இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கிகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு யானையின் நடமாடத்தை கண்காணித்து வருகின்றனர். 

    ×