என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகள் தடை"
- அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
- பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரு மூர்த்தி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் பின்பு இயல்புநிலை திரும்புவதுமாக உள்ளது.
இந்தநிலையில் அருவியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாளான இன்று அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது.
- அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் மலைப்பாதையில் சுற்றி திரிந்த 8 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, அங்கிருந்து 15 கி.மீ தூரம் கடந்து, தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு நேற்று முன்தினம் வந்தது.
யானை வந்த தகவலை அறிந்ததும் வனத்துறையினர் உடனே அங்கு சென்று அங்கிருந்த சுற்றுலா பயணிகளையும், வியாபாரிகளையும் வெளியேற்றினர்.
மேலும் நேற்று தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்றும் நீடிக்கிறது.
யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது. உடனடியாக வனத்துறையினர் அங்கு வந்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்குள்ள முக்கிய வீதிகளில் சுற்றி திரிந்ததால் வனத்திற்குள் விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். இதற்கிடையே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழக வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் அனுமதி வழங்கினார். இதனால் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் உதவியுடன் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் இரவில் சுற்றிய யானை காலையில் எங்கு சென்றது என்பது தெரியததால் அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த பணியில் மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர், கால்நடை மருத்துவ குழு, வனத்துறையினர் என 60 பேர் ஈடுபட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் யானையை கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு யானை தொட்டபெட்டா மலைசிகரத்தில் தென்பட்டது. அங்கிருந்து வெளியேறிய யானை, தொட்டபெட்டா நான்கு ரோடு சாலைக்கு வந்தது.
வனத்துறையினர் விரைந்து வந்து ஊட்டி-கோத்தகிரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி, யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடிவு செய்தனர். ஆனால் யானை, அருகே உள்ள செடிகளுக்குள் சென்று மறைந்தது. இதனால் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதற்குள் யானை அங்கிருந்து வேறுபகுதிக்கு சென்றது.இதையடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார். அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வனபாதுகாவலர் கவுதம் கூறும்போது, யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது யானை இருக்கும் இடத்தை டிரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானை நடமாட்டம் இருப்பதால் இன்றும் தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
- அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
- வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடவள்ளி,
கோவை மாவட்டம் மேற்கு மலை தொடர்ச்சி போளுவாம்பட்டி வனச்சரகத்தில் உள்ளது கோவை குற்றாலம்.
கோவை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாக இது உள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் கோவை குற்றலாத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருந்தது.
தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதியில் இருந்தே கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களான சென்னை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவை குற்றாலத்திற்கு வந்தனர்.
நேற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவை குற்றாலத்திற்கு வந்தனர். இதன் காரணமாக சின்னார் சோதனை சாவடி முதல் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் சின்னார் சோதனை சாவடியில் நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசயைில் காத்திருந்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று, அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே கூட்டம் அதிகரித்ததால் 2 மணிக்கே நுழைவு சீட்டு கொடுப்பதை வனத்துறையினர் நிறுத்தி விட்டனர். இதனால் கோவை குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பொள்ளாச்சி ஆழியார் அணை அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து குதுகலமிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- குடிநீர் மற்றும் உணவு தேடி வரும்போது தடம்மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன.
- பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடியே பயணம் செய்யலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக வனத்துறை சோதனைச்சாவடியில் முன்அனுமதி டிக்கெட் பெற வேண்டும்.
இதனையொட்டி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை குடிநீர் மற்றும் உணவு தேடி வரும்போது தடம்மாறி பேரிஜம் ஏரிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் சுற்றுலா பயணிகள் செல்வதை தடுத்து வருகின்றனர். காட்டு யானை, காட்டுஎருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்வதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஏரிக்குள் செல்ல தடைவிதிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. அவ்வப்போது சாரல்மழை பெய்தாலும் வறண்ட நிலையே நிலவுகிறது. இதனால் அடிக்கடி காட்டுத்தீ பற்றி வருகிறது.
இதனை அணைக்கும் முயற்சியிலும் தீ தடுப்பு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். வனவிலங்குகள் இடம்பெயரும்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்துவிடுகின்றன. எனவே வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். தற்போது பேரிஜம் ஏரியில் யானைகள் கூட்டம் புகுந்துள்ளது. எனவே அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவரை சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
- மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
- கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாஞ்சோலைக்கு சூழல் சுற்றுலா செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
அதன்படி மாஞ்சோலை பகுதியில் சூழல் சுற்றுலா சேவையை நிறுத்தி வைத்துள்ளதாகவும், மறு அறிவிப்பு வரும்வரை சுற்றுலா பயணிகள் யாரும் அங்கு வர வேண்டாம் எனவும் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா அறிவித்துள்ளார்.
களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதியை ஒட்டி கனமழை பெய்ததால் தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தலையணையிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
- எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் அமைந்திருக்கும் திங்ரி பகுதியிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.
- வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பீஜிங்:
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி ரிக்டர் 6.8 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக உலகின் மிக உயரமான சிகரமாக விளங்கும் எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் அமைந்திருக்கும் திங்ரி பகுதியிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் திங்ரி முகாமில் இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், திங்ரியில் அமைந்துள்ள சீன அறிவியல் அகாடமியின் வளிமண்டல மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிலையத்தில் நிலநடுக்கத்தால் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டதாகவும், அதுதவிர வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நிலநடுக்கத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.






