என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொட்டபெட்டா"

    • வனத்துறையினர் யானை இருப்பிடத்தை அறிய அதிநவீன டிரோன் கேமராக்களை பயன்படுத்தி யானையை தேடுகின்றனர்.
    • கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு அங்கு வியாபாரம் நடைபெற்றது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானது தொட்டபெட்டா மலை சிகரம்.

    அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.

    இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து செல்வார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று வழிதவறி தொட்டபெட்டா மலை சிகரத்திற்குள் நுழைந்தது.

    இதையடுத்து அங்கிருந்த சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து வனத்துறையினர் யானையை கண்காணித்து வந்தனர். இந்த பணியில் 60-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் வனத்துறையினர் யானை இருப்பிடத்தை அறிய அதிநவீன டிரோன் கேமராக்களை பயன்படுத்தி யானையை தேடுகின்றனர். நேற்று 4-வது நாளாக பணி தொடர்ந்தது.

    யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகள் கடந்த 3 தினங்களாக அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று தொட்டபெட்டா மலை சிகரத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். தொட்டபெட்டா மலை சிகரம் திறந்ததை அறிந்ததும், ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வந்து சுற்றி பார்த்தனர். கடைகளும் வழக்கம் போல் திறக்கப்பட்டு அங்கு வியாபாரம் நடைபெற்றது.

    • யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது.
    • அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் மலைப்பாதையில் சுற்றி திரிந்த 8 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, அங்கிருந்து 15 கி.மீ தூரம் கடந்து, தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு நேற்று முன்தினம் வந்தது.

    யானை வந்த தகவலை அறிந்ததும் வனத்துறையினர் உடனே அங்கு சென்று அங்கிருந்த சுற்றுலா பயணிகளையும், வியாபாரிகளையும் வெளியேற்றினர்.

    மேலும் நேற்று தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்றும் நீடிக்கிறது.

    யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது. உடனடியாக வனத்துறையினர் அங்கு வந்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்குள்ள முக்கிய வீதிகளில் சுற்றி திரிந்ததால் வனத்திற்குள் விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். இதற்கிடையே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழக வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் அனுமதி வழங்கினார். இதனால் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் உதவியுடன் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

    ஆனால் இரவில் சுற்றிய யானை காலையில் எங்கு சென்றது என்பது தெரியததால் அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    இந்த பணியில் மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர், கால்நடை மருத்துவ குழு, வனத்துறையினர் என 60 பேர் ஈடுபட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் யானையை கண்காணித்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு யானை தொட்டபெட்டா மலைசிகரத்தில் தென்பட்டது. அங்கிருந்து வெளியேறிய யானை, தொட்டபெட்டா நான்கு ரோடு சாலைக்கு வந்தது.

    வனத்துறையினர் விரைந்து வந்து ஊட்டி-கோத்தகிரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி, யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடிவு செய்தனர். ஆனால் யானை, அருகே உள்ள செடிகளுக்குள் சென்று மறைந்தது. இதனால் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    அதற்குள் யானை அங்கிருந்து வேறுபகுதிக்கு சென்றது.இதையடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார். அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட வனபாதுகாவலர் கவுதம் கூறும்போது, யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது யானை இருக்கும் இடத்தை டிரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானை நடமாட்டம் இருப்பதால் இன்றும் தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

    • தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
    • மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஊட்டி:

    தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைசிகரம் விளங்குகிறது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.

    இந்த மலைசிகரத்தில் இருந்து பசுமை தவிழும் அடர்ந்த காடுகள், ஊட்டி நகரின் அழகை பார்வையிடலாம்.

    தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.

    நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியாகினர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். கடைக்காரர்களையும் கடைகளை பூட்டி விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து கடைகளும் மூடப்பட்டன.

    பின்னர் அங்கு சுற்றிய யானையை அங்கிருந்து விரட்டி விட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. அந்த யானை தான் வழிதவறி வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து அங்கு கடை வைத்திருப்பவர்கள் கூறியதாவது:-

    10 ஆண்டுகாலமாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இதுவரை காட்டு யானை வந்தது இல்லை. முதல்முறையாக இந்த பகுதிக்கு காட்டு யானை வந்துள்ளது.

    காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விடும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தொட்டபெட்டா மலைசிகர பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், இன்று ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை கழிக்க வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் நெலாக்கோ ட்டை பகுதியிலும் காட்டு யானை புகுந்தது.

    அந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கியதுடன், வீடுகளையும் சேதப்படுத்தியது. அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார்.

    இதை பார்த்த யானை, வாலிபரை துரத்த ஆரம்பித்தது. யானையிடம் இருந்து தப்பிக்க அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
    • கோடையின் ஆரம்பம் வரை பூக்கும்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடமாக தொட்டபெட்டா மலைச்சி கரம் உள்ளது.

    இந்த மலையில் பல்வேறு அரிய வகை தாவரங்கள், மலர்கள், மூலிகைகள் மற்றும் மரங்கள் உள்ளன. குறிப்பாக, ரோடோடென்ரன் மரங்கள் அதிகளவு காணப்படுகிறது. குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசம் மற்றும் நீலகிரியில் மட்டுமே இந்த வகை மரங்கள் காணப்படுகிறது.

    மிகவும் உயரம் குறைந்த, அதிக கிளைகளை கொண்ட இந்த மரத்தில் ஆண்டு தோறும் பனிக்காலமான டிசம்பர் மாதங்களில் சிவப்பு நிற ரோஜா மலரை போன்ற மலர்கள் பூக்கும். தற்போது கால மாற்றத்தால் ஜனவரி மாதம் வரை இந்த பூக்கள் பூக்கிறது. அடர் சிவப்பு மற்றும் சில இடங்களில வெளிர் சிவப்பு நிறத்தில் இந்த மலர்கள் காணப்படும்.பார்ப்பதற்கு ரோஜா மலர்களை போலவே காட்சியளிக்கும். இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இதனை ரோஜா மலர் என நினைத்து அருகில் சென்று பார்த்த பின்னரே ரோடோடென்ரன் மலர் என தெரிய வரும்.

    இது நேபாளத்தின் தேசிய மலர். அமெரிக்காவில் வாஷிங்டன் மற்றும் மேற்கு வர்ஜீனியா மாநில மலர்*. ந்தியாவில் நாகாலாந்து மாநில மலர். சீனாவில் ஜியாங்சி மாகாண மலர் மற்றும் இந்தியாவில் சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் மாநில மரம். இம்மரங்களின் பெரும்பாலான இனங்கள் பிரகாசமான வண்ண மலர்களைக் கொண்டுள்ளன, அவை குளிர்காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோடையின் ஆரம்பம் வரை பூக்கும்.

    தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா, அவலாஞ்சி, அப்பர்பவானி, வெஸ்டர்ன்கேட்ச்மென்ட், பங்கிதபால், சைலன்வேலி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் உள்ள இந்த மரங்களில் ரோடோடென்ரன் மலர்கள் அதிகளவு பூத்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். 

    ×