என் மலர்
நீங்கள் தேடியது "காட்டு யானை நடமாட்டம்"
- யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது.
- அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் பர்லியார் மலைப்பாதையில் சுற்றி திரிந்த 8 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, அங்கிருந்து 15 கி.மீ தூரம் கடந்து, தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு நேற்று முன்தினம் வந்தது.
யானை வந்த தகவலை அறிந்ததும் வனத்துறையினர் உடனே அங்கு சென்று அங்கிருந்த சுற்றுலா பயணிகளையும், வியாபாரிகளையும் வெளியேற்றினர்.
மேலும் நேற்று தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்த தடையானது இன்றும் நீடிக்கிறது.
யானை எங்கிருக்கிறது என தேடியபோது, இரவில் அந்த யானை ஊட்டி நகருக்குள் புகுந்த தகவல் வந்தது. உடனடியாக வனத்துறையினர் அங்கு வந்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்குள்ள முக்கிய வீதிகளில் சுற்றி திரிந்ததால் வனத்திற்குள் விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். இதற்கிடையே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழக வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் அனுமதி வழங்கினார். இதனால் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் உதவியுடன் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் இரவில் சுற்றிய யானை காலையில் எங்கு சென்றது என்பது தெரியததால் அதனை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்த பணியில் மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், யானை விரட்டும் குழுவினர், கால்நடை மருத்துவ குழு, வனத்துறையினர் என 60 பேர் ஈடுபட்டனர். அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் யானையை கண்காணித்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு யானை தொட்டபெட்டா மலைசிகரத்தில் தென்பட்டது. அங்கிருந்து வெளியேறிய யானை, தொட்டபெட்டா நான்கு ரோடு சாலைக்கு வந்தது.
வனத்துறையினர் விரைந்து வந்து ஊட்டி-கோத்தகிரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்தை நிறுத்தி, யானைக்கு மயக்க ஊசி செலுத்த முடிவு செய்தனர். ஆனால் யானை, அருகே உள்ள செடிகளுக்குள் சென்று மறைந்தது. இதனால் மயக்க ஊசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதற்குள் யானை அங்கிருந்து வேறுபகுதிக்கு சென்றது.இதையடுத்து வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார். அதிநவீன டிரோன் காமிரா மூலம் யானை இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வனபாதுகாவலர் கவுதம் கூறும்போது, யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது யானை இருக்கும் இடத்தை டிரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானை நடமாட்டம் இருப்பதால் இன்றும் தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
- பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது.
- மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டையில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் பள்ளி முடிந்ததும் மாலையில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடுவது வழக்கம்.
நேற்று மாலையும் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வழக்கம் போல பள்ளியில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடினர். மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்.
பள்ளியினையொட்டி வனப்பகுதி உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் விளையாடி கொண்டிருந்த நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று பள்ளி மைதானத்திற்குள் நுழைந்தது.
யானை வேகமாக வருவதை பார்த்ததும், விளையாடி கொண்டிருந்த மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். பின்னர் வகுப்பறைகளில் சென்று பாதுகாப்பாக இருந்து கொண்டனர்.
சிறிது நேரம் யானை மைதானத்திலேயே வலம் வந்தது. அதன்பின்னர் யானை அங்கிருந்து வெளியேறி வனத்திற்குள் சென்றது. யானை சென்ற பின்னரே மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.
காட்டு யானை மைதானத்திற்குள் நுழைந்ததை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ெரயில் பாதை ஓரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாடியது.
- பயணிகள் பார்த்து உற்சாகமடைந்தனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ெரயில் பாதை அடர்ந்த வனத்திற்கு நடுவே உள்ளது. அந்த ரெயிலில் செல்லும் போது இயற்றை அழகினையும், காட்டில் வசிக்கும் யானை கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் என பல்வேறு வனவிலங்குகளையும் காண முடியும்.இதனால் இந்த பாதை வழியாக பயணிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்புவார்கள்.இந்த நிலையில் மலைரெயில் பாதையில் உள்ள ரன்னிமேடு, ஹில்குரோவ், ஆடா்லி போன்ற ெரயில் நிலையங்கள் அடா்ந்த வனப் பகுதிக்குள் உள்ளதாலும், யானைகள் வழித்தடம் என்பதாலும் இந்த ெரயில் நிலையத்துக்குள் யானைகள் வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலை ெரயில் பாதை ஓரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாடியது.
இதனை ரெயிலில் பயணித்த பயணிகள் பார்த்து உற்சாகமடைந்தனா். சிலா் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனா்.






