என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானைகள்"

    • காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
    • கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சூடசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்லப்பா (60) விவசாயி. இவருக்கு சிக்கம்மா என்ற மனைவியும் 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

    வீட்டில் 2 மாடுகளை வளர்த்து வந்த இவர், இன்று அதிகாலை வழக்கம் போல் மாட்டு கொட்ட கையில் வேலை செய்த போது ஒற்றைக் காட்டு யானை கல்லப்பாவை துரத்தி சென்று தாக்கியுள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் அறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தளி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    கல்லப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முயன்ற போது அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடலை எடுக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சூடசந்திரம், ஆச்சு பாலம், கீசனகுப்பம், சத்திரம் தொட்டி, நெல்லு மாறு, அவேறுபள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் காட்டு யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும், காட்டு யானைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் கங்கை, டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இந்த பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி அச்சுறுத்தியும் வருகிறது.

    காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • யானைகள் கூட்டம் சாலையில் இருப்பதை கண்ட பக்தர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.
    • மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    திருப்பதி:

    திருப்பதி மலைப்பாதையில்  வனப்பகுதியில் இருந்து குட்டி யானைகள் உட்பட 7 யானைகள் வந்தன.

    யானைகள் கூட்டம் சாலையில் இருப்பதை கண்ட பக்தர்கள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர்.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    யானைகள் கூட்டம் சாலையில் இருந்து விலகி செல்லாமல் அட்டகாசம் செய்தன. மலைப்பாதையில் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

    வனத்துறையினர் யானைகள் கூட்டத்தை விரட்ட தீப்பந்தங்களை ஏற்றி, அதிக ஒலி எழுப்பும் மேளம் அடித்து சைரன் ஒலித்தனர்.

    அப்போது யானைகள் வனத்துறை ஊழியர்களை தாக்க முயன்றன. வனத்துறை ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் ஒரு வழியாக யானைகள் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    இதனால் மலை பாதையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    இந்த சம்பவம் நேற்று இரவு மலைப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • யானைகள் தொரப்பள்ளி-கூடலூர் சாலைக்கு வந்தன.
    • போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சமவெளிப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் மேற்குதொடர்ச்சி மலைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் 3 யானைகள் தொரப்பள்ளி–-கூடலூர் சாலைக்கு வந்தன.

    இதனை முன்கூட்டியே கண்டறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி காட்டு யானைகள் ரோட்டை கடப்பதற்கு வழிவகைகளை ஏற்படுத்தி கொடுத்தனர்.

    தொடர்ந்து தொரப்பள்ளி–-கூடலூர் ரோட்டில் 3 யானைகளும் ஒன்றன்பின் ஒன்றாக சாலையை கடந்து வனத்துக்குள் சென்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "காடுகளை ஒட்டிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மற்றும் சாலையை கடப்பது இயல்பானவை.

    ஆனால் காட்டு யானைகள் சாலையை கடக்கும்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து உள்ளனர்.

    • ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.
    • அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் 33 குட் கிராமங்கள் உள்ளன. இந்த வனப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள்வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதிகளில் உள்ள யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி ரோட்டில் சுற்றி திரிகிறது. இதே போல் மலைலப்பகுதி வழியாக வரும் வாகனங்களை வழி மறித்து கரும்பு உள்ளிட்ட உணவுகள் உள்ளதா எனவும் யானைகள் தேடி வருகிறது. ஒரு சில நேரங்களில் யானைகள் கூட்டமாக வந்து லாரிகளில் உள்ள கரும்புகளை ருசித்தும் வருகின்றன.

    மேலும் பலாப்பழங்களை யானைகள் அதிகளவில் உண்டு வருகிறது. வனப்பகுதிகளில் வாகனங்களில் பலாப்பழங்கள் எடுத்து சென்றால் அவைகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம், கூட்டமாக குவிய தொடங்கி விடுகிறது. இதே போல் அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளில் பலா பழங்கள் உள்ளன. கிராம பகுதிகளில் யானைகள் புகுந்து அவற்றை தின்று வருகிறது.

    தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளது. இந்த சீசன் ஆனி மாதம் கடைசி வரை இருக்கும். இந்த நிலையில்ஆனி மாதம் தொடங்கி உள்ள நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் பகுதிகளில் பலாபபழங்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்து உள்ளன. பலாப்பழம் வாசனைக்காக வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்களை ருசிப்பதற்காக யானைகள் வந்து பலாபழத்தை ருசித்து செல்கிறது.

    இந்த நிலையில் பர்கூரை அடுத்த துருசன்னம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பலா மரத்தில் பலாப்பழங்கள் பழுத்து தொங்கிக்கொண்டு இருந்தன. இதனை ருசிப்பதற்காக வனப்பகுதியில் இருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக வருகிறது. இதை தொடர்ந்து யானைகள் பலாப்பழத்தை அங்கேயே பறித்து உண்டு ருசித்துச் சென்றது.

    அப்போது யானை மிகுந்த சத்தத்தோடு பிளிரிய படி சென்றது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்கள் குடியிருப்புக்குள் யானை வந்துவிடுமோ என்ற ஒரு வித அச்சத்தோடு இருந்து வருகிறார்கள்.

    • யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
    • காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரைப்பள்ளம் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திடீரென வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் கடந்து சென்றது. திடீரென யானை கூட்டம் வந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டனர்.

    சாலையை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலமாகும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது.

    கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஹாரன்களை அடித்தால் யானைகள் கோபமடையும். தற்போது ஆசனூர் வனப்பகுதியில் காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • காட்டு யானைகள் சாலையை கடக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
    • மனித-வனஉயிரின மோதலின் நெருக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில், கடந்த சில நாட்களாக குட்டியுடன் கூடிய காட்டு யானைகள் இரவிலும் பகலிலும் கூட்டம்-கூட்டமாக சாலையை கடந்து செல்லும் காட்சிகள், வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

    நேற்று இரவு முதலில் ஒரு யானை வந்தது. பின்னர் 2-3 யானைகள் வரிசையாக வந்து சாலையை கடந்தன. இதனை பார்த்த நாங்கள் வாகனத்தை நிறுத்தி அதிர்ச்சியுடன் பார்த்தோம்" என்கிறார் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற பயணி.

    "ஒரு பக்கம் இதுஒரு அரிய காட்சி. ஆனால் இன்னொரு பக்கம், யானைகள் திடீரென சாலைமீது வரும்போது எதையும் கணிக்க முடியாது என்பதால் பயமாக உள்ளது" என்கிறார் பஸ் டிரைவர் ஒருவர்.

    மேலும் காட்டு யானைகள் சாலையை கடக்கும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. வனத்துறையினரும் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    "யானைக் கூட்டங்கள். உணவு மற்றும் குடிநீரை தேடி இடம்பெயருவது சகஜம். பர்லியார் அருகே உள்ள காட்டுப் பகுதிகள் தற்போது பசுமையாக இருப்பதால் காட்டு யானைகள் அங்கு இடம்பெயர்ந்து வருகின்றன" என்று வனஅதிகாரி ஒருவர் கூறினார்.

    இதற்கிடையே வனவிலங்குகள் சாலைகளைக் கடப்பது அவர்களின் இயற்கை வாழ்விடங்கள் குறைந்துவிட்டதற்கான வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. யானைகளுக்கான இடைநிலைக்காடுகள் குறைந்தது, சாலைகள் விரிவாக்கம், வனப்பகுதியில் மனித நடமாட்டம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக யானைகள் தற்போது வேறுபட்ட பாதைகளை தேடத் தொடங்கி உள்ளன.

    பர்லியார் பகுதியில் கூட்டமாக சாலையை கடக்கும் யானைகள், இயற்கையின் உண்மையான அசைவைக் காட்டும் அரிய தருணமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில், இது மனித-வனஉயிரின மோதலின் நெருக்கத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

    வனவிலங்குகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், சாலைகளில் கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசியம். காட்டு உயிர்களுக்கு அவற்றின் வலசைப்பாதை என்பது மிகவும் அவசியம் என்று ஊட்டி வனஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அங்குள்ள காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன.
    • காபி, வாழை தோட்டங்களை அந்த காட்டு யானைகள் நாசப்படுத்தி உள்ளன.

    சிக்கமகளூரு:

    சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோனிபீடு, மாக்கேனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்த வனப்பகுதி ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவை ஒட்டி உள்ளது. இதனால் சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அந்தப்பகுதி மக்கள் சொல்லொண்ணா துயரத்தை சந்தித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து 42 காட்டு யானைகள் கோனிபீடு, மாக்கேனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை ஒட்டி உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தன.

    அந்த காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அங்குள்ள காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. அவை வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கு தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காபி செடிகளை மிதித்தும், பிடுங்கி எறிந்தும் நாசப்படுத்தி உள்ளன. மேலும் அங்கிருந்த வாழை மரங்களையும் சாய்த்தன. மிளகு செடிகளையும் நாசப்படுத்தின.

    அந்தப்பகுதியில் சுமார் 10 ஏக்கரில் உள்ள காபி, வாழை தோட்டங்களை அந்த காட்டு யானைகள் நாசப்படுத்தி உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் காட்டு யானைகள் காபி தோட்டங்களில் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள், தங்கள் விளைநிலங்களுக்கு செல்லவே பீதியில் இருந்து வருகிறார்கள். இதுபற்றி அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வனத்துறையினரும், அங்கு சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அப்போது அந்தப்பகுதி விவசாயிகள், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்ற வனத்துறையினர், சக்லேஷ்புரா வனப்பகுதியில் இருந்து 42 காட்டு யானைகள் வெளியேறி அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை மீண்டும் சக்லேஷ்புரா வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    • 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
    • காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டன.

    அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

    உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.

    இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலை சஃபாரி பூங்காவில் ஆப்பிரிக்க யானைகளின் கூட்டம் தங்கள் குட்டிகளை பாதுகாக்க செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

    நிலஅதிர்வை உணர்ந்த யானைக் கூட்டத்தின் மூத்த யானைகள் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு, கூட்டமாக தங்கள் குட்டிகளை சூழ்ந்து பாதுகாப்பு அரணாக நின்ற காட்சிகள் மெய்சிலர்க வைப்பதாக உள்ளது.

    இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காலை வெயிலில் அமைதியாக நின்றிந்த யானைகள், நிலநடுக்கம் ஏற்பட்டபோது திடுக்கிட்டு, அவை முதலில் சிதறி, பின்னர் விரைவாக மீண்டும் ஒன்றுகூடி, ஜூலி மற்றும் மக்யா ஆகிய இரண்டு யானைக்குட்டிகளை மூத்த தாய்மார்கள் நட்லுலா, உமங்கானி மற்றும் கோசி ஆகியவை சூழ்ந்து நிற்கின்றன.

    நிலநடுக்கம் நின்ற பிறகும், வயது வந்த யானைகள் தங்கள் பாதுகாப்பு வலயத்தை கலைக்காமல் காதுகளை விரித்து, எச்சரிக்கையாக, பல நிமிடங்கள் அப்படையே நின்றிருந்தன. 

    • ராஜபாளையம் அருகே தென்னந்தோப்பில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்கின்றன.
    • யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

     ராஜபாளையம் 

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியையொட்டி செல்ல பிள்ளை ஊரணி அருகே ராமகிருஷ்ண ராஜா என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்குள் நேற்றிரவு காட்டு யானைகள் புகுந்தன.

    அவை அங்கிருந்த 40-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை அடியோடு பிடுங்கி சேதப்படுத்தியது. அதே போல் அந்த பகுதியில் இருந்த பனை மரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-

    காய்ப்பு பருவத்திற்கு வந்த பாதி மரங்களும், 2 வருடங்கள் வளர்த்த தென்னங்கன்று களும் யானைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தென்னந்தோப்பில் முகாமிட்டுள்ள யானை கூட்டங்களை வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவது வழக்கம்.
    • போடிச்சி ப்பள்ளி, ஜக்கேரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    தேன்கனிகோட்டை,

    கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவது வழக்கம்.

    ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரும் இந்த யானைகள் 4 மாதங்கள் இந்த பகுதியில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகின்றன. இதேபோல இந்த ஆண்டும் 100-க்கும் மேற்பட்ட யானைகள் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வந்து முகாமிட்டு இருந்தன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் முகாமிட்டிருந்த யானைகள் 2 குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்பு 50-க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் சானமாவு காட்டிற்கு வந்தன.

    குட்டிகளுடன் 56 யானைகள் சானமாவு காட்டில் முகாமிட்டு பகல் நேரத்தில் வனப்பகுதிக்கு ள்ளும், இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களு க்குள் சென்று பயிர்களை சேதப்படுத்தி வந்தன.

    இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் சானமாவு காட்டில் முகாமிட்டு இரு ந்த யானைகளையும் ஓசூர் வனச்சரகர் ரவி தலைமை யில் வன ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் தேன்கனி க்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து யானைகள் போடிச்சி ப்பள்ளி, ஜக்கேரி வழியாக தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த யானைகள் குட்டி களுடன் அடர்ந்த வனப்பகு திக்குள் சென்றன. தற்போது ஓசூர் சானமாவு காட்டில் ஒரு யானை மட்டும் உள்ளது.

    அந்த யானையையும் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஓசூர் சானமாவு காட்டில் ஒரு யானை முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் வனப்ப குதிக்குள் ஆடு, மாடுகளை மேய்க்க செல்ல வேண்டாம் என்றும், விறகுகளை எடுக்க செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • விளை நிலங்களில் இருந்து யானைகள் வெளியேறி விட்டாலும், இன்னும் வனப்பகுதிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
    • பலாப்பழத்திற்கு அடிமையான யானைகள் அவற்றை தேடி விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காட்டு யானைகள் அடிக்கடி எஸ்டேட் பகுதிக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக இடுக்கியில் உள்ள சந்தன்பாறை மற்றும் சின்னக்கனல் கிராம பஞ்சாயத்து எல்லையோர வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊர்ப்பகுதிக்கு வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மீண்டும் யானைகளின் அட்டகாசம் தொடங்கி உள்ளது. தேவிகுளம் தாலுகாவில் உள்ள பி.எல்.ராம் கிராமத்தில் சுற்றித் திரிந்த யானைகள் கூட்டம் அங்குள்ள வீட்டை கடுமையாக தாக்கி சேதப்படுத்தி உள்ளது.

    பலாப்பழத்திற்கு அடிமையான அரிகொம்பன் மற்றும் சாக்க கொம்பன் யானைகள் தான் தற்போது விளை நிலங்களுக்குள் நுழைந்து சேதப்படுத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த யானைகள் மிகவும் ஆபத்தானவை என கூறும் அவர்கள், யானைகளை காட்டுக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

    விளை நிலங்களில் இருந்து யானைகள் வெளியேறி விட்டாலும், இன்னும் வனப்பகுதிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

    இதுகுறித்து சந்தன்பாறை பஞ்சாயத்து தலைவர் லிஜூ வர்கீஸ் கூறுகையில், 2 முரட்டு யானைகளால், எங்கள் கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இரவில் கூட அவர்கள் தூங்காமல் உள்ளனர். யானைகளுக்கு பயந்து விவசாய நிலங்களில், பலாப்பழங்கள் பயிரிடுவதை நிறுத்தி விட்டனர். இருப்பினும் பலாப்பழத்திற்கு அடிமையான யானைகள் அவற்றை தேடி விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து வருகிறது என்றார்.

    • மீண்டும் வனத்திற்குள் சொல்ல வழி தெரியாமல் தவித்து வருவது வாடிக்கையாக உள்ளது.
    • சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    வடவள்ளி,

    கோவை வனச்சரகம் அட்டுக்கல் வனப்பகுதியில் இருந்து இன்று அதிகாலை 4 யானைகள் ஒரு குட்டியுடன் கெம்பனூர் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்தது.

    அதிகாலை 6 மணிக்கு தோட்ட வேலைக்கு சென்றவர்கள் யானை இருப்பதை கண்டு வனத்து றையினருக்கு தகவல் கொடுத்தனர். நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் வரவில்லை. கதிரேசன் என்பவரது விளைநிலங்களில் நீண்ட நேரம் முகாமிட்டு இருந்த யானைக்கூட்டத்தை ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் யானைகள் வனத்தை நோக்கி செல்லாமல் போக்கு காட்டி நின்றது. ஒரு வழியாக 3 மணி நேரம் கழித்து சுமார் 9 மணி அளவில் யானை அட்டுக்கல் வனத்தை நோக்கி நகர்ந்து சென்றது. கடந்து இரு வாரங்களுக்கு முன்பு அருகில் உள்ள தாளியூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்த யானைக்கூ ட்டம் வனத்திற்குள் செல்லாமல் இருந்தது குறிப்பிட தக்கது. தொடர்ந்து வனப்பகு தியை விட்டு வெளியே வரும் யானைக்கூ ட்டம், மீண்டும் வனத்திற்குள் சொல்ல வழி தெரியாமல் தவித்து வருவது வாடிக்கை யாக உள்ளது.

    கெம்பனூர், தாளியூர் , ஓணாப்பாளையம் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து உள்ளது. மதில் சுவர்கள் கட்டி யானை வழித்தடத்தை சிலர் மறித்து இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரி வித்து உள்ளனர். எனவே யானையின் வழித்தடத்தை மீட்டு எடுக்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வ லர்களின் கோரிக்கையாக உள்ளது.  

    ×