என் மலர்
நீங்கள் தேடியது "Summer"
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் வெயில் சுட்டெரித்தாலும், நகரின் பல இடங்களில் லேசான மழையும், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் கூறும்போது, ‘அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் வெப்பமும் உயர்ந்து காணப்படும். இது இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை தொடர வாய்ப்பு உள்ளது. ஜூன் மாதத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை சென்னை மீனம்பாக்கத்தில் 102.38 டிகிரியும், நுங்கம்பாக்கத்தில் 100.94 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறும்போது, ‘வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது. 1.5 கி.மீட்டர் உயரத்தில் சுழற்சி உள்ளது. இது இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு நீடிக்கும். நகரின் சில பகுதிகளில் அதிக வெப்பமும், பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடனும் காணப்படும்.
நேற்று வலுவான காற்று வீசாததால் புறநகர் பகுதிகள் மற்றும் பக்கத்து மாவட்டங்களில் மழை மேகங்கள் நகரவில்லை.
இன்று மேக கூட்டங்கள் நகரை நெருங்கி வரலாம். இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் இன்னும் 10 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரி வரை இருக்கும்’ என்றார்.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 28-ந்தேதியே முடிந்து விட்டது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்து 4 நாட்கள் ஆகியும் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை.
கோடை வெயில் தொடர்ந்து உச்சத்தில் இருப்பதால் டாஸ்மாக் மதுக்கடைகளில் தற்போது ‘பீர்’ விற்பனை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 5,380 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அந்த கடைகளை ஒட்டி 3,240 பார்கள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் ரூ.85 கோடி முதல் ரூ.90 கோடி வரை மது விற்கப்படுகிறது.
ஆனால் ‘பீர்’ மட்டும் ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பீர் விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பீர் விற்பனை வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் குடிமகன்கள் தற்போது அதிகமாக பீர் வாங்குகிறார்கள். இதன் காரணமாக அதன் விற்பனை உயர்ந்துள்ளது.
கோடை வெயில் கொளுத்துவதால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. குளிர்ந்த பீர்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகிறார்கள்.
இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் பீர் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பீர் வகைகளை தட்டுப்பாடு இல்லாமல் அதிக அளவில் இருப்பு வைக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.
- ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.
உடுமலை :
உடுமலை பகுதிக்கு ஆண்டுதோறும் சேலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை சீசனுக்கு பல லோடு தர்பூசணி கொண்டு வரப்பட்டது. எனவே கோடை சீசனை இலக்காக வைத்து புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கிணற்று ப்பாசனத்துக்கு, தர்பூசணி சாகுபடியிலும் உடுமலை பகுதி விவசாயிகள் களமிறங்கினர்.
கடந்த2 ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.நிலப்போர்வை, சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரம் பயன்பாடு காரணமாக தர்பூசணி காய்களும் திரட்சி யாக பிடித்தது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.ஆனால் கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.
அறுவடை செய்யாமல் அதை அப்படியே விளைநிலங்களில் விடும் நிலை உருவானது.இந்நிலையில் கோடை சீசன் மட்டுமல்லாது இடைப்ப ட்டத்திலும், பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கோடை சீசனில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இடைப்பட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம்.வீரிய ரக விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதால் 70 முதல் 80 நாட்களில் தர்பூசணியை அறுவடை செய்ய முடிகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. பிற மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
- கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும்.
- கோடை உழவு செய்யாதவர்கள் உடனடியாக கோடை உழவு மேற்கொண்டு பயன் பெறலாம்.
பல்லடம் :
பல்லடம் வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-பருவ மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பல்லடம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் கோடை உழவு செய்யாமல் இருக்கின்றனர். கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும். மழைக்காலத்தில் செய்யும் உழவை விட கோடை காலத்தில் உழவு செய்வதுதான் முக்கியமானது. மழைக்கால உழவில் குளுமை மட்டும் இருக்கும். கோடை உழவில் குளுமை, வெப்பம் இரண்டும் இருக்கும். இதுதான் விவசாய மண்ணுக்கு முக்கியம். மேட்டுப்பகுதியில் இருந்து, தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவு குறுக்கு வசத்தில் இருக்க வேண்டும்.
இப்படி நான்கு முறை உழ வேண்டும்.இப்படி உழுதால் மழைநீர் மண்ணுக்குள் இறங்கும்.கோடையில் முதல் மழை பெய்த உடனேயே உழவு செய்ய வேண்டும். வெப்பம் காரணமாக மண்ணின் மேற்புறத்தில் வெடிப்புகள் இருக்கும். அதனால் மண்ணின் சத்துக்கள் ஆவியாகிவிடும்.இதை தடுக்க கோடை உழவு செய்யவேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜன், நைட்ரஜன் உள்ளிட்ட உயிர் சத்துக்கள் இரவு நேரத்தில் பூமி உள்வாங்கி குளிர்ச்சியாகும். மேலும் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட பயிர்களை தாக்கிய பல்வேறு பூச்சிகள், புழுக்கள், அவைகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள் மண்ணில் இருக்கும். கோடை உழவு செய்வதால் அவை கட்டுப்படுத்தப்பட்டு,ஏற்கனவே இருந்த களைகளும் அழிக்கப்படும். எனவே இதுவரை கோடை உழவு செய்யாதவர்கள் உடனடியாக கோடை உழவு மேற்கொண்டு பயன் பெறலாம் .இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உடன்குடியில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
- குளிர்பானங்களை குறைந்த விலையில் விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை
உடன்குடி:
உடன்குடி வட்டார பகுதியில்கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாகவே உள்ளது. கோடையை மிஞ்சும் அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
காலை 10 மணிக்குமேல்மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியேவர மக்கள் தயங்குகின்றனர்.அவசர தேவைக்கு மட்டுமே வெளியில் வருகின்றனர். குளிர்பான கடைகளில் கரும்புசாறு, பழச்சாறு, எலுமிச்சை சாறு என பல வகையான சாறுகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குளிர்பானங்களை குறைந்த விலையில்விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை இதனால் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
- பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் கோடை கால கூடைபந்து பயிற்சி நடைபெற்றது.
- பயிற்சியில் கலந்து கொண்ட 50 வீரர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.
நெல்லை:
கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் நெல்லையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் நடைபெற்றது. பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் கோடை கால கூடைபந்து பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
அதன் நிறைவு நாளையொட்டி நடந்த விழாவில் கல்லூரி முதல்வர் மரியதாஸ், செயலாளர் புஷ்பராஜ், சீனிக்குமார், பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் தினகரன், நெலலை மாவட்ட கூடைப்பந்தாட்ட பொருளாளர் செல்வகோபால், முன்னாள் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் சரவணமுத்து, கிருஷ்ணபிரபு, சாக்ரடீஸ், ஜேம்ஸ் ஜெப்ரி, சீனிவாசன், நித்திஷ், பாக்கியவதி, அருணாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பயிற்சியில் கலந்து கொண்ட 50 வீரர்களுக்கு இலவச விளையாட்டு சீருடை வழங்கப்பட்டது.
- 5- ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது.
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப் படுத்தி ஆலோசனை வழங்கினார்.
நாசரேத்:
குரும்பூர் அருகே உள்ள நாலுமா வடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்க விளையாட்டு துறை சார்பில் நடைபெறும் 5- ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் ஜூன் 1-ந் தேதி தொடங்கியது. நாளை (10-ந் தேதி)வரை நடைபெறுகிறது.
4-வது நாளன்று அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கழக தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப் படுத்தி ஆலோசனை வழங்கினார்.
அப்போது முகாம் பொறுப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் கணேசன், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார், ஒருங்கிணைப்பாளர் எட்வின் தி.மு.க. மாநில மாணவரணி இணை செயலாளர் எஸ்.ஆர். எஸ். உமரிசங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவீன்குமார், கபடி கந்தன், வழக்கறிஞர் கிருபாகரன், ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்துவந்த நிலையில், 5-ந்தேதி முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. கோடை வெயிலுக்கே நொந்து போயிருந்த மக்கள், தகிக்கும் ‘கத்திரி’ வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளாகினர்.

பொதுவாகவே கோடைகாலத்தில் அவ்வப்போது பெய்யும் மழை மக்களுக்கு ஆறுதலாக அமையும். ஆனால் இந்தமுறை குறிப்பிட்டு சொல்லும்படி தமிழகத்தில் மழை இல்லை. குறிப்பாக சென்னையில் மழைக்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. ‘பானி’ புயலும் திசைமாறி மழையை கொடுக்கவில்லை.
ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கத்திரி வெயில் காலம் அமைந்துவிட்டது.
கத்திரி வெயில் காரணமாக சென்னை, மதுரை, கரூர், தர்மபுரி, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர், நாகை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை வறுத்து எடுத்தது. பல நாட்களாக திருத்தணியிலேயே அதிகபட்ச வெயில் பதிவானது.
இந்நிலையில் மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் காலம் நாளையுடன் (புதன்கிழமை) விடைபெறுகிறது. இதையடுத்து வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அடிக்கிற வெயிலின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது? என்ன செய்வது என்பது தெரியாமல் நாம் அனைவரும் திணறிக் கொண்டிருக்கிறோம். வீட்டில் மின்விசிறி போதவில்லை. ஏசி, ஏர்கூலர் அறைகளில் இருந்து விட்டு, வெளியே வந்தால், ஏன் வெளியே வருகிறோம் எனும் எண்ணம் வந்து விடுகிறது. ஓரிடத்தில் வெளியில் 10 நிமிடம் கூட நிற்க முடிவதில்லை. உடலெங்கும் வியர்வை குளித்தது போன்ற பிம்பத்தையே உருவாக்கி விடுகிறது.
பைக்கில் பயணம் செய்தால் காற்று வரும் என நினைத்தால், பைக்கின் சீட் அடுப்பை போல் கொதிக்கிறது. வீசும் அனல் காற்றோ கண்களையே எரித்துவிடுவது போல இருக்கிறது. இந்த கொடுமையான வெயிலில் இருந்து விடுபட, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஷேஜல் ஷா, வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.

நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் சாணம் தெளிப்பதும், ஒரு காலத்தில் வீடுகளே சாணத்தால் மொழுகப்பட்டு கட்டப்பட்டிருந்ததற்கும் காரணம் என்ன என்பது இப்போது நமக்கு புரிந்திருக்கும்.
சென்னை நுங்கம்பாக்கம் - 96.08 டிகிரி (35.6 செல்சியஸ்)
மீனம்பாக்கம் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
கோவை - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)
குன்னூர் - 79.7 டிகிரி (26.5 செல்சியஸ்)
கடலூர் - 95.72 டிகிரி (35.4 செல்சியஸ்)
தர்மபுரி - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
கன்னியாகுமரி - 91.04 டிகிரி (32.8 செல்சியஸ்)
கரூர் - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)
கொடைக்கானல் - 71.6 டிகிரி (22 செல்சியஸ்)
மதுரை - 106.52 டிகிரி (41.4 செல்சியஸ்)
நாகை - 97.34 டிகிரி (36.3 செல்சியஸ்)
நாமக்கல் - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
புதுச்சேரி - 95.36 டிகிரி (35.2 செல்சியஸ்)
சேலம் - 104.54 டிகிரி (40.3 செல்சியஸ்)
தஞ்சை - 104 டிகிரி (40 செல்சியஸ்)
திருச்சி - 105.98 டிகிரி (41.1 செல்சியஸ்)
திருத்தணி - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)
தூத்துக்குடி - 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்)
ஊட்டி - 78.8 டிகிரி (26 செல்சியஸ்)
வால்பாறை - 84.2 டிகிரி (29 செல்சியஸ்)
வேலூர் - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)






