என் மலர்

    நீங்கள் தேடியது "Summer"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • சமீபத்தில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக அந்த மாதத்தின் இறுதியில் தான் தொடங்கியது.

    அனல் காற்று

    ஒரு சில நாட்கள் மட்டுமே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. மாறாக தற்போது கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுவதோடு, அனல் காற்றும் வீசுவதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். வெப்பம் அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

    பெரும்பாலானோர் சாலைகளில் நடந்து செல்லும் போது குடைகளை பிடித்தபடி செல்கின்றனர். மாநகர், புறநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள், குளிர்பா னங்களை அருந்துவதற்காக குளிர் பான கடைகளை தேடி மக்கள் கூட்டம் செல்வதை காண முடிகிறது. ஏற்கனவே கோடையில் சுட்டெரித்த வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்டவை வறண்ட நிலையில் காணப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் பாபநாசம் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. ஆனாலும் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தின் போது நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடும் விவசாயி கள் குளங்களில் தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு பயிரிடவில்லை. இதனால் தரிசு நிலங் களாக காட்சியளிக்கிறது. மேலும் குளங்களும் வறண்டு, வெடிப்பு விழுந்த நிலையில் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழை பெய்ததால் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் தண்ணீர் தேங்கியது.
    • 17 சர்வதேச விமானங்கள் மிக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    சென்னை:

    சென்னையில் நேற்றிரவு 10 மணி முதல் முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. சென்னை கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இடி மின்னலுடன் விடாமல் மழை பெய்ததால் ரோடுகளில் மழை நீர் தேங்கியது.

    அதிலும் குறிப்பாக சென்னை மீனம்பாக்கம் பகுதியில் மிக அதிகமாக 14 செ.மீ அளவுக்கு மழை பெய்ததால் விமான நிலைய ஓடுபாதை பகுதியில் தண்ணீர் தேங்கியது. இடைவிடாமல் மழை பெய்ததால் ஓடுபாதை தெரியாத அளவுக்கு நிலைமை ஏற்பட்டது.

    இதன் காரணமாக துபாய், அபுதாபி, தோகா, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர், மஸ்கட், கொழும்பு, உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 10 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. இதே போல் சென்னையில் இருந்து துபாய், லண்டன், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட வேண்டிய 17 சர்வதேச விமானங்கள் மிக தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

    காலை 7 மணிக்கு பிறகு தான் மழை பெய்வது குறைந்தது. அதன் பிறகுதான் டெல்லி, ஐதராபாத், மும்பை, கொல்கத்தா, உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டது. சென்னையில் விடிய விடிய திடீரென மழை பெய்ததால் விமான பயணிகள் பலர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வராமல் பலமணி நேரம் காத்திருந்து அதன் பிறகே வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
    • சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர்.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 10 தினங்களாக பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    இரவு பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ஏற்காடு மலை பாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது.

    சாய்ந்த மரத்தை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருந்தது.
    • ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் கடுமையாக இருந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை அதிகமாக இருந்தது. மக்கள் பகல் வேளையில் மட்டுமின்றி இரவிலும் சிரமப்பட்டனர். வெயிலின் உஷ்ணம் இரவில் கடும் புழுக்கத்தை தந்த நிலையில் நேற்று அதிகாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கியது.

    பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தில் அவதிபட்டு வந்த நிலையில் ரம்மியமான சூழல் இதமாக இருந்தது. 2 மாதத்திற்கு பிறகு மப்பும் மந்தாரமுமான சூழலுடன் மழையும் பெய்ததால் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் விடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. லேசான காற்றுடன் பெய்த மழை நள்ளிரவில் அதிகரித்து நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. காற்றுடன் பெய்ததால் ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது.

    தொடர்ந்து விடிய விடிய மழை பெய்ததால் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் திரண்டு ஓடியது. ஒரு சில நேரங்களில் லேசான தூறலாகவும், சில சமயங்களில் கனமழையாகவும் பெய்தது. வானம் இருண்டு காணப்பட்டது. பயங்கர இடி சத்தத்துடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பெரம்பூர், புளியந்தோப்பு, பட்டாளம், வேப்பேரி, கோயம்பேடு, கிண்டி கத்திபாரா, ஓ.எம்.ஆர்., திருமங்கலம், தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    கிரின்வேஸ் சாலை சந்திப்பு, நீலாங்கரை பகுதியில் பெய்த மழையால் குளம்போல் தண்ணீர் தேங்கியது. பெருங்குடி உலக வர்த்தக மையம் அருகில் 4 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது.

    புதிதாக போடப்பட்ட தார் சாலையில் பல இடங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றன.

    ஒருநாள் மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பெரும்பாலான இடங்களில் தற்போது தேங்கவில்லை என்றாலும் ஒரு சில இடங்களில் தேங்கி நின்றன. சாலைகளில் மட்டுமின்றி தெருக்களிலும் மழைநீர் தேங்கி நின்றதால் வெள்ளம் போல் காட்சி அளித்தது.

    நேற்று இரவு முதல் இன்று காலை 8 மணி வரை சென்னையில் 207 இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதாக மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தன. 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் மீது மண்டலம் வாரியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி நின்ற பகுதிக்கு மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் சென்று அதனை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    44 இடங்களில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டது. 163 இடங்களில் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. இதே போல 23 இடங்களில் மரங்கள், கிளைகள் சரிந்து விழுந்தன. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மரங்கள் வெட்டி அகற்றும் பணியும் முழு வீச்சில் நடந்தது. போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மயிலாப்பூர் முண்டக்கன்னி அம்மன் கோவில் தெரு, தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் விழுந்த மரங்களை அகற்றினர்.

    மாநகராட்சி ஊழியர்கள் மரம் வெட்டும் எந்திரங்களுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டன. பகலிலேயே வாகன ஓட்டிகள் விளக்குகளை பயன்படுத்தி சென்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கொட்டும் மழையில் நனைந்து சென்றனர்.

    கனமழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. அரசு பஸ்களில் குறைந்த அளவில் மக்கள் பயணம் செய்தனர். ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் ஓடின.

    சென்னையை போலவே புறநகர் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. தாம்பரம், மதுரவாயல், புழல், வண்ட லூர், பூந்தமல்லி, செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது.

    கோடை வெயிலின் தாக்கத்தால் 3 மாதங்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலாக இருந்தது. வறண்டு கிடந்த பூமி குளிர்ச்சி அடைந்தது போல் மக்கள் மனமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.
    • விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவை குறைந்திருக்கிறது.

    புதுடெல்லி:

    நாட்டில் தற்போது பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ளதாக தொழில்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    உதாரணமாக, நாட்டின் மொத்த எரிபொருள் பயன்பாட்டில் 5-ல் 2 பங்காக டீசல் உள்ளது.

    இதன் விற்பனை, இம்மாதத்தின் முதல் பாதியில் 30 லட்சத்து 43 ஆயிரம் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது 6.7 சதவீத சரிவு ஆகும்.

    அதேநேரம், விவசாயத்துக்கான எரிபொருள் தேவை அதிகரித்ததாலும், கோடை வெயிலை சமாளிக்க கார்களில் ஏ.சி. தொடர்ந்து இயக்கப்பட்டதாலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.7 சதவீதமும், மே மாதத்தில் 9.3 சதவீதமும் டீசல் விற்பனை கூடியிருந்தது.

    பெட்ரோல் விற்பனையும் இந்த மாத முதல் பாதியில் 10 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்ட பெட்ரோல் விற்பனையுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீத சரிவு. மாதாந்திர அடிப்படையிலான பெட்ரோல் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்துள்ளது.

    கடந்த மார்ச் மாத 2-வது பாதியில் இருந்து நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்து வந்திருக்கிறது. அதற்கு தொழில்துறை, விவசாயத்துறை செயல்பாடுகள் விறுவிறுப்பு அடைந்ததுதான் காரணம்.

    ஆனால் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை தணியத் துவங்கி இருக்கிறது. விவசாய மோட்டார் பம்புசெட்டுகள், டிராக்டர்கள் போன்றவற்றின் இயக்கத்துக்கான டீசல் தேவையும் குறைந்திருக்கிறது.

    அதேவேளையில், நாட்டில் விமான பயணிகள் போக்குவரத்து, கொரோனாவுக்கு முந்தைய நிலையை நெருங்கியிருக்கும் சூழலில், விமான எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.

    இந்த மாதம் 1 முதல் 15-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் விமான எரிபொருள் தேவை 2 லட்சத்து 90 ஆயிரம் டன்களாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலகட்ட விற்பனையுடன் ஒப்பிடும்போது இது 2.6 சதவீத அதிகரிப்பு ஆகும்.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சமையல் எரிவாயு விற்பனை 1.3 சதவீதம் சரிந்து 10 லட்சத்து 14 ஆயிரம் டன்களாக உள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது.
    • வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் வாட்டி எடுத்தது.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. சென்னையில் 106 டிகிரிக்கும் அதிகமாகவே வெயில் பதிவாகி பகல் நேரங்களில் வெளியில் நடமாடுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, வருகிற 17-ந் தேதிக்கு பின்னர் வெயில் குறையும் என்று தெரிவித்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற 18-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
    • சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி பதிவானது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று 14 இடங்களில் வெயில் சதம் அடித்து இருந்தது. இதில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரி பதிவானது.

    100 டிகிரிக்கு மேல் பதிவான இடங்கள் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 104 டிகிரி (40 செல்சியஸ்)

    கடலூர் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)

    ஈரோடு - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

    கரூர் - 101.3 டிகிரி (38.5 செல்சியஸ்)

    மதுரை விமானநிலையம் - 103.28 டிகிரி (39.6 செல்சியஸ்)

    நாகப்பட்டினம் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்)

    தஞ்சாவூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

    திருச்சி - 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்)

    திருத்தணி - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 104 டிகிரி (40 செல்சியஸ்)

    வேலூர் - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)

    இதுதவிர, புதுச்சேரியில் 102.56 டிகிரி (39.2 செல்சியஸ்), காரைக்கால் 100.94 டிகிரி (38.3 செல்சியஸ்) பதிவாகியிருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
    • கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில்கள் நிறைந்தும், சுற்றுலா தலங்கள் நிறைந்தும் காணப்படும் பகுதியாகும்.

    இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

    குறிப்பாக ஏப்ரல், மே உள்ளிட்ட கோடை மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனையொட்டி ஆண்டுதோறும் கோடை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடைவிழா கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி பழ கண்காட்சியுடன் முடிவடைந்து விட்டது.

    கோடைவிடுமுறை முடிந்த பின்னரும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று கூட விடுமுறையை கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்திருந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு மலர் மாடத்தில் காட்சி வைக்கப்பட்டு இருந்த பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அதன் பின்னணியில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுதவிர சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகைக்குள் சென்று பல்வேறு வகையான பெரணி செடிகளை அருகில் சென்று பார்த்து கண்டு ரசித்து செல்கின்றனர். இதே போன்று ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் தலையாகவே காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நேற்று ஊட்டி சாலை, குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை, தொட்டபெட்டா மலைசிகரம் செல்லும் சாலை, தாவரவியல் பூங்கா சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் மெல்ல மெல்லவே அடியெடுத்து வாகனத்தை ஓட்ட முடிந்தது.

    கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
    • கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் நகர் பகுதியில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கினர்.

    மேலும் பள்ளிகள் திறப்பும் தள்ளி வைக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் கோடை விழா மலர் கண்காட்சி முடிந்த பின்னரும் நகர் பகுதியில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    இன்றுடன் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.

    இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். கொரோனா ஊரடங்கால் சிறு குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த ஆண்டு கோடை விழாவின்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று மாலையில் மழை மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
    • 4 அல்லது 5 நாட்களுக்கு பின்னர் படிப்படியாக வெயில் குறையலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு கோடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது.

    அவ்வப்போது திடீரென பெய்த மழை சற்று ஆறுதல் அளித்த போதிலும் கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே பதிவாகி உள்ளது. குறிப்பாக நேற்று சென்னையில் 105 டிகிரியை தாண்டி வெயில் வறுத்தெடுத்தது.

    இந்த நிலையில் மேலும் 2 நாட்கள் சென்னையில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்று தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சென்னையில் வெயிலின் தாக்கம் இன்றும், நாளையும் அதிகமாகவே இருக்கும். அதே நேரத்தில் நேற்று பதிவானதை விட சற்று குறைவான அளவிலேயே வெயில் பதிவாக வாய்ப்புகள் உள்ளன.

    நேற்று 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. இன்றும் நாளையும் ஒரு டிகிரி அளவுக்கு வெயில் குறையலாம்.

    திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் இன்று மாலையில் மழை மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த மழை மேகங்களால் சென்னை மாநகரிலும் சில இடங்களில் மழை பெய்யலாம். ஒருவேளை அப்படி பெய்தால் சூடு குறைய வாய்ப்புள்ளது.

    அடுத்த வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. 4 அல்லது 5 நாட்களுக்கு பின்னர் படிப்படியாக வெயில் குறையலாம். அப்போதுதான் 100 டிகிரிக்கும் குறைவாக வெயில் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மேலும் 2 நாட்கள் வெயில் வாட்டி எடுக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் அந்த 2 நாட்களும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo