search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stores"

    • குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.
    • உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது.

    இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும்.

    இந்த சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

    இந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 10 வேகன்களில் 600 டன் பொட்டாஷ் உரம் தஞ்சைக்கு வந்து இறங்கியது.

    பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த தனியார் உர விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன

    • கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி உத்தரவின்பேரில் கோட்டை ஹபீப் தெருவில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டு அப்சரா சாலையில் மாற்று இடம் வழங்கப்பட்டது. மாற்று இடத்தில் மாநகராட்சி அனுமதியுடன் 41 கடைகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே இடத்தில் அனுமதியின்றி சிலர் கடைகள் அமைத்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகள் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    41 கடைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு இருப்பதாக வியாபாரிகள் குற்றசாட்டினர். எந்த அடிப்படையில் கடைகள் ஒதுக்கப்பட்டன என்பது குறித்து வியாபாரிகள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மாமன்ற கூட்டம் ஒப்புதல் படியே கடைகள் ஒதுக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    இதையடுத்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட 6 கடைகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சென்னிமலை பகுதியில் உள்ள இனிப்பு, கார வகைகள் கடைகளில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.
    • பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலத்தின் அளவு, சைவ மற்றும் அசைவ குறியீடு அவசியம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் உள்ள இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு கடைகளில் சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வில் இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பத ற்கான தரமான மூலப் பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

    உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்கள், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நிறமிகளை உபயோகி க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்களை மறுமுறை சூடுபடுத்தி உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச் சீட்டில் முழு முகவரி, உணவு பொருட்களின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, பயன்பாட்டு காலத்தின் அளவு, சைவ மற்றும் அசைவ குறியீடு அவசியம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    • உடன்குடியில் சுட்டெரிக்கும் வெயிலால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.
    • குளிர்பானங்களை குறைந்த விலையில் விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில்கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிக மிக அதிகமாகவே உள்ளது. கோடையை மிஞ்சும் அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    காலை 10 மணிக்குமேல்மாலை 4 மணி வரை வீட்டை விட்டு வெளியேவர மக்கள் தயங்குகின்றனர்.அவசர தேவைக்கு மட்டுமே வெளியில் வருகின்றனர். குளிர்பான கடைகளில் கரும்புசாறு, பழச்சாறு, எலுமிச்சை சாறு என பல வகையான சாறுகள் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    குளிர்பானங்களை குறைந்த விலையில்விற்பனை செய்தாலும் வாங்குவதற்கு ஆள் இல்லை இதனால் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

    ஈரோடு அருகே உள்ள லக்காபுரத்தில் அடுத்தடுத்து 3 கடைகள் மற்றும் ஒரு வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொடக்குறிச்சி:

    லக்காபுரம் மொடக்குறிச்சி மெயின் ரோட்டில் ஒரு செல்போன் கடையும் அடுத்தடுத்து 2 மளிகை கடைகளும் உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கோபிநாத் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 15 செல்போன்கள் மற்றும் 24 சிம் கார்டுகள் (மதிப்பு ரூ.50 ஆயிரம்) ஆகியவற்றை அள்ளி கொண்டனர்.

    அடுத்து குமார் (52) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த 6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் அடுத்துள்ள பட்டாபிராமன் என்பவரின் மளிகை கடை பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 1350 ரூபாயை எடுத்து கொண்டனர்.

    அதோடு விடாத கொள்ளையர்கள் அருகே இருந்த ஒரு வீட்டின் கதவு பூட்டை உடைத்து ரூ.8 ஆயிரம் பணமும் ½ பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இப்படி ஒரே சமயத்தில் அடுத்தடுத்து 3 கடைகள் மற்றும் ஒரு வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களையும், வியாபாரிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    திருப்பத்தூர் அருகே நெற்குப்பையில் மின் கசிவால் 3 கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் ஓட்டல்-3 கடைகள் நாசமானது.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையை சேர்ந்தவர் சேகர். இவர் ராஜவீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் சேகர் ஓட்டலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் ஓட்டலில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொருட்கள் மீது தீப்பற்றியது.

    ஓட்டல் சமையல் அறையில் 3 சிலிண்டர்கள் வைக்கப்பட்டு இருந்தன. எதிர் பாராதவிதமாக அதிலும் தீ பரவியது. சிறிது நேரத்தில் 3 சிலிண்டர்களும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில் ஓட்டல் இடிந்து தரைமட்டமானது. மேலும் அருகில் இருந்த குமார் என்பவரின் சலூன் கடையும், காஜாமுகமதுவின் பெட்டிக்கடை, கதிர்வேல் என்பவரின் அடகு கடை ஆகியவையும் சேதம் அடைந்தது.

    சிலிண்டர்கள் வெடித்த சத்தத்தை கேட்ட தூங்கி கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். தகவல் அறிந்த நெற்குப்பை போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிலிண்டர் வெடித்ததில் 4 கடைகளில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் ஆகும்.

    விபத்து குறித்து நெற்குப்பை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    அறந்தாங்கியில் ஒரே நாளில் 3 கடைகளில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் குளிர்பான நிறுவன ஏஜென்சி நடத்தி வருபவர் திருநாவுக்கரசு (வயது 39). இவர் நேற்று காலை தனது நிறுவனத்திற்கு சென்ற போது, நிறுவனத்தின் கதவும், சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. 

    இதேபோல் அப்பகுதியில் உள்ள சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான மாவு மில்லின் பூட்டை உடைத்து, உள்ளே பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம், 1 சவரன் தங்க நகை ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள மற்றொரு ஏஜென்சி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் அங்கு பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர்.

    பணம் கொள்ளை போன சம்பவங்கள் குறித்து திருநாவுக்கரசு,சின்னச்சாமி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    இலுப்பூர் பேரூராட்சி பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    விராலிமலை:

    தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத் தொடரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேனீர் கோப்பைகள், பிளாஸ்டிக் தூக்குபைகள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள் போன்றவை இலுப்பூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவுரையின் படி பேரூராட்சியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வாரச்சந்தை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி மற்றும் பேரூராட்சி பணியாளர்களால் இன்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வாரச்சந்தை கடைகளில் பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபராத கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

    ×