search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லக்காபுரத்தில் அடுத்தடுத்து 3 கடைகள்- வீட்டில் துணிகர கொள்ளை
    X

    லக்காபுரத்தில் அடுத்தடுத்து 3 கடைகள்- வீட்டில் துணிகர கொள்ளை

    ஈரோடு அருகே உள்ள லக்காபுரத்தில் அடுத்தடுத்து 3 கடைகள் மற்றும் ஒரு வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மொடக்குறிச்சி:

    லக்காபுரம் மொடக்குறிச்சி மெயின் ரோட்டில் ஒரு செல்போன் கடையும் அடுத்தடுத்து 2 மளிகை கடைகளும் உள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கோபிநாத் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 15 செல்போன்கள் மற்றும் 24 சிம் கார்டுகள் (மதிப்பு ரூ.50 ஆயிரம்) ஆகியவற்றை அள்ளி கொண்டனர்.

    அடுத்து குமார் (52) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த 6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் அடுத்துள்ள பட்டாபிராமன் என்பவரின் மளிகை கடை பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 1350 ரூபாயை எடுத்து கொண்டனர்.

    அதோடு விடாத கொள்ளையர்கள் அருகே இருந்த ஒரு வீட்டின் கதவு பூட்டை உடைத்து ரூ.8 ஆயிரம் பணமும் ½ பவுன் நகையையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இப்படி ஒரே சமயத்தில் அடுத்தடுத்து 3 கடைகள் மற்றும் ஒரு வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களையும், வியாபாரிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    Next Story
    ×