search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastics seized"

    இலுப்பூர் பேரூராட்சி பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    விராலிமலை:

    தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத் தொடரில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட தேனீர் கோப்பைகள், பிளாஸ்டிக் தூக்குபைகள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள் போன்றவை இலுப்பூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவுரையின் படி பேரூராட்சியில் அமைந்துள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் வாரச்சந்தை கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி மற்றும் பேரூராட்சி பணியாளர்களால் இன்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வின் போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வாரச்சந்தை கடைகளில் பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபராத கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

    ×