என் மலர்
நீங்கள் தேடியது "agriculture"
- தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம்.
- இதுவரை 37 லட்சத்து 83 ஆயிரத்து 98 மரங்கள் நடப்பட்டுள்ளது.
சீர்காழி:
சீர்காழி அருகே அத்தியூர் கிராமத்தில் சுமார் 5ஏக்கர் பரப்பளவில் 2ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மரம் தங்கசாமி நினைவுதினத்தையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 100 விவசாய நிலங்களில், 605 ஏக்கர் பரப்பளவில் மொத்தம் 1,68,239 மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட உள்ளது.
அதன்படி அத்தியூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குநர் ரமேஷ் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டு தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 37லட்சத்து 83ஆயிரத்து 98 மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், மரம் சார்ந்த விவசாயம் செய்ய விவசாயிகளை காவேரி கூக்குரல் ஊக்குவித்து வருவதாக அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
- வேளாண் விளை பொருட்களை மதிப்பூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் 10 மடங்கு லாபம் பெறலாம்.
- கூட்டத்தில் உழவன் செயலி குறித்து எடுத்து கூறப்பட்டது.
அம்பை:
நெல்லை மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் சார்பில் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் மற்றும் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவனம் இணைந்து கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்த்தல் பயிற்சி முக்கிய பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்னும் தலைப்பில் அம்பையில் நடத்தப்பட்டது.
6 நாட்கள் பயிற்சியில் கிராமப்புற இளைஞர்களை வேளாண் தொழில் நுட்பத்தில் வல்லுநராக்கி, தொழில் முனைவோராக மாற்றுவதே முக்கிய நோக்கமாகும்.
2-ம் நாளாக நடத்தப்பட்ட பயிற்சியில் மாநில வேளாண் மேலாண்மை மற்றும் விரிவாக்க பயிற்சி நிறுவன இயக்குநர் சங்கர லிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி வர வேற்று பேசினார். இயக்குநர் அவர்தம் உரையில் இப்பயிற்சியில் பயிற்சி பெற்றவர்கள் தாம் பெற்ற பயிற்சியின் நன்மையினை மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டு மெனவும், வேளாண் விளை பொருட்களை மதிப்பூட்டிய பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் 10 மடங்கு லாபம் பெறலாம்.
ரசாயன மருந்துகள் மற்றும் உரங்கள் பரிந்துரைக் கப்பட்ட அளவிற்கு அதிகம் இடுவதால் ஏற்படும் தீமைகளையும், சுற்று சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு களை குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும் வேளாண் துறையில் விவசாயிகளின் நலன் கருதி உருவாக்கப் பட்டுள்ள உழவன் செயலி குறித்து எடுத்து கூறினார்.
பயிற்சியில் அம்பை நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல்துறை இணைப் பேராசிரியர் ஆல்வின், பூச்சி மேலாண்மையில் ஒட்டுண்ணிகள், சாறுண்ணி களின் பங்கு மற்றும் கவர்ச்சி பொறிகள் பயன் படுத்தும் முறை குறித்து விளக்கி கூறினார். பயிற்சிக் கான ஏற்பாடுகளை அட்மா பணியாளர்கள் ஈழவேணி, சதீஷ் , தங்கராஜ் மற்றும் பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.
- பூதலூர் ஒன்றியத்தில் ரூ.92.79 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது.
- ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டது.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் ரூ.92.79 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், திருக்காட்டு ப்பள்ளி மற்றும் அகரப்பே ட்டையில் ரூ.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டிடம், கூடநாணல் கிராமத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை அலுவலக கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன், திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன் மற்றும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- அறிவுரைகளை கடை பிடிக்காத நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- விவசாயிகள் நாற்று பண்ணைகளில் விற்பனை பட்டியலினை பெற்று நாற்றுகள் வாங்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நெல்லை:
நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதாபாய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள காய்கனி நாற்று பண்ணைகளுக்கு விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் விற்பனை உரிமம் வழங்கப்பட்டு விதை ஆய்வாளர்களால் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வின்போது காய்கனி நாற்று ரகங்கள், பழமரக்கன்றுகளின் ரகங்கள் மற்றும் தென்னங்கன்றுகளின் ரகங்கள் எவ்வாறு கொள்முதல் செய்யப்படுகிறது என்ற விபரத்துடன் அவை முறையாக இருப்புப் பதிவேட்டில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு முறையான விற்பனை பட்டியல் வழங்கி, விற்பனை செய்யப்பட்டு வருகிறதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் விற்பனை உரிமம் பெற்ற நாற்று பண்ணைகளில் விவசாயி பெயர், ஊர், காய்கனி நாற்று அல்லது பழமரக்கன்றுகளின் பெயர், ரகம் ஆகியவற்றுடன் விற்பனையாளர் மற்றும் விவசாயி கையொப்பமிட்ட விற்பனை பட்டியலினை பெற்று நாற்றுகள் வாங்கிட கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
நாற்று பண்ணையாளர்கள் தங்களிடமுள்ள காய்கனி நாற்றுகள், பழமரக்கன்றுகள் மற்றும் தென்னங்கன்றுகளை ரகம் வாரியாக கொள்முதல் பட்டியல் விபரம் குறிப்பிட்டு இருப்பு பதிவேட்டில் பதிவு செய்து முறையாக விற்பனை பட்டியல் வழங்கி விவசாயிகளுக்கு விற்பனை செய்திட அறிவுரை வழங்கப்படுகிறது.
அறிவுரைகளை கடை பிடிக்காத நாற்று பண்ணை உரிமையாளர்கள் மீது விதை கட்டுப்பாட்டு ஆணை 1983-ன் கீழ் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பவுர்ணமி யாகம் நடந்தது
- விவசாயம் செழிக்க பிரார்த்தனை செய்யப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா காரைமேடு சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 18 சித்தர்கள் ஒளிலாய பீடத்தில் பௌர்ணமி மகாயாகம் நடைபெற்றது. யாகத்தில் சந்திராயன் 3 நிலவில் செல்ல காரணமாக இருந்த விஞ்ஞானிகளுக்கு நன்றி செலுத்தியும்,விவசாயம் செழித்து வளரவும், சிறப்பு பிரார்த்தனை செய்ய ப்பட்டது.
இதில் நாடி செல்வ முத்துக்குமரன், பள்ளி தாளாளர் லெனின்,நாடி குணசேகரன், பொறியாளர் கதிரவன் தொழிலதிபர் ராகேஷ் குமார் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
- வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர்.
- மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் மோகன்ராஜ். இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால் பட்டயப்படிப்பு முடித்து விட்டு விவசாயம் செய்து வருகிறார்.
இவருக்கும் செந்தாமரைவிளை பகுதியை சேர்ந்த மாசான முத்து மகள் கலையரசிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருமணம் நடைபெற்றது. இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டி மூலம் நிலத்தை உழுதிட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மோகன்ராஜ் தனது திருமணத்திற்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று திருமணம் செய்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு மணமகள் வீட்டில் இருந்து மணமகன் வீட்டிற்கு மாட்டுவண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தார். ஊர்வலத்தில் செண்டை மேளத்துடன், உற்சாகமாக ஆட்டம், பாட்டத்துடன் காயாமொழியில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது வழிநெடுகிலும் நின்ற பொதுமக்கள் மணமக்களுக்கு ஆரவாரத்துடன் உற்சாகமாக மலர் தூவி வரவேற்றனர். மணமக்கள் மாட்டுவண்டியில் வந்து இறங்கியதும் மணமகன் வீட்டார் மணமக்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது மணமகன் மோகன்ராஜ் உற்சாகமாக நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டி பரவசப்டுத்தினார். மேலும் மக்கள் விவசாயத்திற்கு எந்திரங்களை பயன்படுத்துவதால் பாரம்பரிய விவசாயங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட கால்நடைகளும் அழிந்து வருவதாகவும் கூறிய மணமகன் காளை மாடுகளை விவசாய உழவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மாட்டு வண்டியில் ஊர்வலம் வந்ததாக தெரிவித்தார்.
- அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஒரு தொகுதியாகும்.
- தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தராமல் கால்வாய்களில் தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளது.
சிங்கை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் தமிழக அரசுக்கு அம்பை தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள ஒரு தொகுதியாகும். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டு இப்பகுதி மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் கார்பருவ சாகுபடிக்காக நான் பல்வேறு கோரிக்கைகள் வைத்ததின்பேரில் கடந்த மாதம் 19-ந்தேதி பாபநாசம் அணை மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து நீர் திறக்க அரசு ஆணை பிறப்பித்து இருந்தது.
அந்த ஆணையில் 19-7-2023 முதல் 31-10-2023 வரை 105 நாட்கள் 3015 மில்லியன் கனஅடி நீர்பாசனத்திற்காக அதாவது கன்னடியான்கால்வாய், நதியுன்னிகால்வாய், வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான்கால் ஆகிய கால்வாயில் பாசன விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்து திறக்கப்பட்டது.
அரசின் ஆணையை நம்பி இப்பகுதி விவசாயிகள் விவசாய முன்னேற்பு பணிகளை பெரும் சிரமத்திற்குள் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் தராமல் கால்வாய்களில் தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளது. இது இப்பகுதி விவசாய மக்களை மிகவும் பாதிக்கும் சூழலில் உள்ளது. அதனால் அரசும், மாவட்ட நிர்வாகமும் விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் பாசனத்திற்காக கால்வாய்களில் தண்ணீர் திறக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- 3 கிராம பஞ்சாயத்துகள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
அம்பை:
அம்பை வட்டாரம் வெள்ளாங்குளி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அம்பை ஒன்றியக்குழு தலைவர் சிவணுபாண்டியன் என்ற பரணி சேகர் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்புரையாற்றி வேளாண்மைத் துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி திட்டங்கள் பற்றி அறிந்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் ஆலோசனை பேரில் நடைபெற்ற விழாவில் பேசிய வேளாண்மை அலுவலர் ஷாகித் முகைதீன், அம்பை வட்டாரத்தில் வெள்ளாங்குளி, அயன்திருவாலீஸ்வரம் மற்றும் அடையக்கருங்குளம் ஆகிய 3 கிராம பஞ்சாயத்துகள் இவ்வாண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று கிராம பஞ்சாயத்துகளில், ஒரு குடும்பத்திற்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் அதிக பட்சமாக ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 300 குடும்பங்களுக்கு 600 தென்னங்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. மற்ற இரு கிராம பஞ்சாயத்துகளிலும் தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். வெள்ளாங்குளி கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 22 விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கான ஆவணங்களை அளித்தனர்.
நிகழ்ச்சியில் வெள்ளாங்குளி பஞ்சாயத்து தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயலெட்சுமி, குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் தங்கசரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- 18 ஆண்டுகளில் மிக சொற்பமான ஏரி, குளங்கள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளன.
- இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது வேதனையின் உச்சகட்டம்.
திருப்பூர்:
காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் எஸ்.வி. பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2006 ல் துவங்கப்பட்டது. இத் திட்டம் மூலம் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிப்பதால் 100 நாள் வேலை திட்டம் என பெயர் மாறிவிட்டன.
இந்த திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் பயன்பெறலாம் .திட்டத்தின் நோக்கம் ஏரி ,குளம் தூர்வாருதல் ,நீர் வழி தடங்கள் புனரமைப்பு ,குட்டைகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் நிலங்களில் பாசன மேம்பாட்டிற்கு பாடுபடுதல் போன்ற பணிகளுக்காகவே இத்திட்டம் துவங்கப்பட்டன .ஆனால் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் ,லட்சத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிறைந்த நம் தமிழகத்தில் திட்டம் துவங்கப்பட்டு 18 ஆண்டுகளில் மிக சொற்பமான ஏரி, குளங்கள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு உழைக்காமலேயே ஊதியம் கிடைத்து விடுகிறது என்கிற காரணத்தினால் கிராமப்புற விவசாயிகள் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது வேதனையின் உச்சகட்டம்.
சில நகர்புறங்களில் சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன . இப்படி எதற்குமே பயன்படாமல் மக்களை சோம்பேறி கூட்டமாக மாற்றிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் நிதி உதவியோடு தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இந்த 100 நாள் வேலை திட்டத்தினை மறு பரிசீலனை செய்து சில திருத்தங்களை கொண்டு வந்து முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்தி தமிழகத்தில் விவசாயம் மேம்பட வழி வகுக்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
- எண்ணெய்ப் பனைத் திட்டத்தின் கீழ் பாமாயில் மரக்கன்றுகள் நடவை நடைபெற்றது
- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மறமடக்கியில் தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம்- எண்ணெய்ப் பனைத் திட்டத்தின் கீழ் பாமாயில் மரக்கன்றுகள் நடவை நடைபெற்றது. இதற்கான தொடக்கவிழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். பின்னர் அவர் மரக்கன்றுகளை நடத்து வைத்து நடவையை தொடங்கி வைத்தார்.