என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FBI"

    • மனம் நலம் குன்றிய மகனை கொலை செய்ததாக குற்றச்சாட்டு.
    • விசாரணையில் இருந்து தப்பிப்பதற்கான இந்தியா வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அமெரிக்காவின் FDI-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 (Top 10 Most Wanted) பட்டியலில் இருந்த பெண், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் மற்றும் இன்டர்போல் ஒத்துழைப்புடன் FBI சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் (வயது 40) என்ற பெண்ணை, மகனை கொலை செய்து விட்டு விசாரணையின் இருந்து தப்பிக்க இந்தியாவுக்கு தப்பி வந்த நிலையில் கைது செய்துள்ளது.

    சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் பற்றி தகவல் தெரிவித்தால் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்க புலனாய்வு பிரிவு (FBI) தெரிவித்திருந்தது.

    சிண்டி ரோட்ரிக்ஸ் சிங்கிற்கு உடல்நலம் குன்றிய (மாற்றுத்திறனாளி) மகன் இருந்துள்ளான். இவனை 2022ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் இருந்து காணவில்லை. இது தொடர்பாக சிண்டி ரோட்ரிக்ஸிடம் கேட்டபோது, அவரது தந்தையுடன் (Biological father) மெக்சிகோவில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், 2023 மார்ச் மாதம் டெக்சாஸ் அதிகாரிகள் சிண்டி ரோட்ரிக்ஸ் கூறிய முகவரில் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அங்கு இல்லை.

    இதற்கிடையே சிண்டி அவரது கணவன் மற்றும் அந்த பையனின் இந்தியாவைச் சேர்ந்த வளர்ப்பு தந்தை மற்றும் 6 சிறுவர்கள் ஆகியோருடன் இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளார். இந்தியாவுக்கு ஏறிய விமானத்தில் அந்த சிறுவன் இல்லை. இதனால் கொலை செய்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்தனர்.

    இந்த வழக்கில் 2023 அக்டோபர் மாதம் சிண்டி ரோட்ரிக்ஸ் சிங் மீது முறையாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த வருடம் இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. சட்ட விசாரணையை தவிர்க்க சட்டவிரோதமாக வெளியேறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    • புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு அவர் கடத்தி வந்துள்ளார்.
    • இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அமெரிக்க எப்.பி.ஐ இயக்குனர் காஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார்.

    அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் சீனாவை சேர்ந்த யுன்கிங் ஜியான் என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவரது காதலரும் சீனாவில் ஆராய்ச்சியாளருமான ஜூன்யோங் லியு, தனது காதலியை பார்க்க அமெரிக்காவுக்கு வந்து உள்ளார்.

    அப்போது அவர் புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளார். இந்த நோய்க்கிருமியை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆய்வு செய்து மேலும் மேம்படுத்த திட்டமிட்டு இருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த நோய்க்கிருமி விவசாய பயங்கரவாத ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புசேரியம் கிராமினேரமின் நச்சுகள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.

    இதுகுறித்து எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் கூறியதாவது:-

    யுன்கிங் ஜியான் என்பவர் தான் பணிபுரியும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக புசாரியம் கிராமிநேரம் என்ற ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்தி உள்ளார். இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கோடிக் கணக்கான டாலர்கள் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திவிடும். ஜியானின் காதலன் சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். அங்கு அவர் இந்த நோய்க்கிருமி குறித்து ஆராய்ச்சி நடத்துகிறார்.

    முதலில் குற்றச்சாட்டை மறுத்த அவர் பின்னர் அமெரிக்காவுக்கு நோய்க் கிருமியை கடத்தியதை ஒப்புக்கொண்டார். யுன்கிங் ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்துள்ளார். அவர் இந்த நோய்க்கிருமி குறித்த ஆராய்ச்சிக்காக சீன அரசாங்கத்திடமிருந்து நிதி பெற்ற ஆதாரங்கள் உள்ளன என்றார்.

    சீன ஆராய்ச்சியாளர்கள் மீது சதித்திட்டம், அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், தவறான கருத்துக்களை வெளியிட்டது மற்றும் விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள

    • அரசின் அதிமுக்கிய, ரகசிய ஆவணங்கள் அதிபர் ஜோ பைடனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் சோதனை.
    • ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் ஆகும்.

    அமெரிக்க அதிபர் ஜோபைடனின் வீடு மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் அரசின் ரகசிய ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கடந்த நவம்பர் 2-ந்தேதி, டிசம்பர் 20-ந்தேதி மற்றும் ஜனவரி 12-ந்தேதிகளில் நடந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    அந்த ஆவணங்கள் ஜோபைடன் 2009 முதல் 2017-ம் ஆண்டு வரை துணை அதிபராக பதவி வகித்த கால கட்டத்தை சேர்ந்தவை ஆகும்.

    இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரசின் ரகசிய ஆவணங்கள் ஜோபைடன் வீட்டில் இருந்தது தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க அட்டர்ரனி ஜெனரல் மெரிக் ஹார் லெண்ட் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    எப்.பி.ஐ. சோதனை

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை டெலாவேரின் வில்மிங்டனில் உள்ள ஜோ பைடன் வீட்டில் நடந்தது. சுமார் 13 மணி நேரம் நடந்த சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதில் சில ஆவணங்கள் ஜோபைடன் செனட்டராக இருந்த காலத்திலும், மற்றவை துணை அதிபராக இருந்த காலத்திலும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

    இது தொடர்பாக ஜோபைடனின் வக்கீல் பாப் பாயர் கூறும்போது, "ஜோ பைடன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 6 ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் சுற்றப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை எடுத்து சென்றனர். தனது வீட்டில் நீதித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த அதிபர் ஜோபைடன் சம்மதம் தெரிவித்தார்" என்றார்.

    அதிபர் ஜோபைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் நீதித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இண்டியானாவில் உள்ள மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • ஏற்கனவே அதிபர் ஜோ பைடன் இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடுகள் மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் கடந்த மாதம் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் ஜோ பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை ஆகும். இதுதொடர்பாக விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்காவின் இண்டியானாவில் உள்ள முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    ஏற்கனவே, கடந்த 22-ம் தேதி டேலாவேரில் உள்ள அதிபர் ஜோ பைடனின் கடற்கரை இல்லத்தில் எப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன.

    வாஷிங்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட அவரை கொல்ல முயற்சி நடந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக ஆவணங்கள், அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவின் (எப்.பி.ஐ.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. இதில் ராணி எலிசபெத்தின் அமெரிக்க பயணம் தொடர்பாக சேமிக்கப்பட்ட கோப்புகள் வெளியிட்டு உள்ளது. 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    அதற்கு முன்பாக சான்பிரான்சிஸ்கோ போலீஸ் அதிகாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், வடக்கு அயர்லாந்தில் தனது மகள் ரப்பர் புல்லட்டால் கொல்லப்பட்டதாகவும் அதற்காக ராணி எலிசபெத் படகில் செல்லும் போது கோல்டன் கேட் பாலத்தில் இருந்து ஒரு பொருளை வீசி ராணிக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பேன் அல்லது யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு அவர் வரும் போது கொல்ல முயற்சிப்பேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து ராணி எலிசபெத் படகு அருகில் வரும் போது பாலத்தின் நடைபாதைகளை மூடுவதற்கு உளவுத்துறையால் உத்தேசிக்கப்பட்டதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    யோசெமிட்டி தேசிய பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து சொல்லப்படவில்லை.

    மேலும் போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யில் பணியாற்றும் பெண்கள் விகிதம் சுமார் 24 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது
    • இந்திய பெண்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் மட்டுமே அங்கு பணியாற்றுகின்றனர்

    ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) என்பது அமெரிக்காவின் உள்நாட்டு உளவு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும்.

    அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யில் பணியாற்றும் பெண்களின் விகிதம் சுமார் 24 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

    அந்த அமைப்பின் ஸால்ட் லேக் சிட்டி அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியாக இந்திய-அமெரிக்க பெண்மணியான ஷோஹினி சின்ஹா என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் (Purdue University) உளவியலில் இளங்கலை பட்டம் மற்றும் மனநல ஆலோசனையில் முதுகலை பட்டம் பெற்ற ஷோஹினி, எஃப்.பி.ஐ-யில் பணிபுரிவதற்கு முன்பு, ஒரு சிகிச்சையாளராகவும், பின்னர் இண்டியானாவின் லஃபாயெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.

    ஷோஹினி சின்ஹா 2001-ல் எஃப்.பி.ஐ.-யில் சிறப்பு அதிகாரியாக சேர்ந்தார். முதலில் மில்வாக்கி கள அலுவலகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளில் பணியாற்றினார். குவாண்டனாமோ விரிகுடா கடற்படைத்தளம், லண்டனில் உள்ள எஃப்.பி.ஐ.யின் சட்ட அலுவலகம் மற்றும் பாக்தாத் செயல்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தற்காலிக பணிகளில் பணியாற்றினார்.

    2009-ல் கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்று வாஷிங்டனில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். கனடாவை தளமாகக் கொண்ட விசாரணைகள் அமைப்பின் திட்ட மேலாளராக பணியாற்றினர்.

    2012-ல் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் சட்ட உதவியாளர் பதவி உயர்வு பெற்று ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் மற்றும் கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு விஷயங்களில் பணியாற்றினார்.

    2015-ல் அவர் டெட்ராய்ட் கள அலுவலகத்தில் கள மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்று சர்வதேச பயங்கரவாத விஷயங்களை விசாரிக்கும் குழுக்களை வழிநடத்தினார்.

    2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் கிரிமினல் சைபர் ஊடுருவல் விஷயங்களை துப்புதுலக்கும் சைபர் ஊடுருவல் படைக்கு மாற்றப்பட்டார். பிறகு போர்ட்லேண்ட் கள அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விஷயங்களுக்கும், பின்னர் குற்றவியல் விஷயங்களுக்கும் உதவி சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

    2021-ல், எஃப்.பி.ஐ. இயக்குநரின் நிர்வாக சிறப்பு உதவியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய பதவி உயர்வு வரும்வரை, வாஷிங்டனில் உள்ள எஃப்.பி.ஐ.யின் தலைமையகத்தில், அந்த பதவியிலேயே தொடர்ந்தார்.

    அமெரிக்காவில் இந்திய பெண்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒரு இந்திய-அமெரிக்க பெண் எஃப்.பி.ஐ.யில் பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றி உயர்வான பதவிகளை அடைந்திருப்பதை உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் பெருமையாக பார்க்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிபர் கொலைகளுக்கான நேரம் வந்து விட்டது. முதலில் ஜோ, பிறகு கமலா என குறிப்பிட்டிருந்தார்
    • அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் க்ரெய்க் வீட்டிற்கு வாரண்டுடன் சென்றனர்

    அமெரிக்காவின் மேற்கில் உள்ள மாநிலம் உடா. இங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் புலனாய்வு அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    2021 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-ஐ வென்ற ஆதரவாளர்களும், இப்போதைய அதிபர் ஜோ பைடனின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் உடா மாநிலத்தை சேர்ந்த தீவிர ட்ரம்ப் விசுவாசியான க்ரெய்க் ராபர்ட்ஸன் என்பவர் முகநூலில் பைடனை குறித்து தீவிரமாக கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

    2022-ல் தனது பதிவு ஒன்றில், "அதிபர் கொலைகளுக்கான நேரம் வந்து விட்டது. முதலில் ஜோ, பிறகு கமலா" என குறிப்பிட்டிருந்தார்.

    முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எதிராக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். அதனால் அவரையும் கொல்லப்போவதாக ராபர்ட்ஸன் கூறி வந்தார்.

    இரு தினங்களுக்கு முன், தனது முகநூல் பதிவில் அதிபர் பைடன் உடா மாநிலத்திற்கு வருகை தருவதால் தனது எம்24 ஸ்னைப்பர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தும் வேளை வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    இது மட்டுமின்றி அவரது முகநூல் கணக்கில் பலவகை துப்பாக்கிகளையும் அவர் பதிவிட்டிருந்தார்.

    இதனையடுத்து உடா மாநிலத்தில் உள்ள ப்ரோவோ எனும் இடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தேடுதல் மற்றும் கைது வாரண்டுடன் அமெரிக்க மத்திய புலனாய்வு அதிகாரிகள் சென்றனர்.

    அங்கு நடைபெற்ற நடவடிக்கையில் அவர் சுட்டு கொல்லப்பட்டார்.

    ராபர்ட்ஸன் மீது அச்சுறுத்தல் குற்றம், அதிபருக்கெதிரான மிரட்டல் குற்றம், தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கடமையாற்றும்போது அவர்களை இடைமறித்து கடமையை செய்ய விடாமல் தடுப்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

    அமெரிக்காவை மீண்டும் பெருமைக்குரியதாக மாற்றுவோம் என பொருள்படும் மாகா (Making America Great Again) முழக்கத்தை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இந்த முழக்கத்தை ஆதரிப்பவராகவும், தன்னை ஒரு டிரம்ப் விசுவாசியாகவும் அறிவித்து கொண்டவர் க்ரெய்க் ராபர்ட்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது.

    க்ரெய்க் சுட்டு கொல்லப்பட்ட சூழ்நிலையின் முழு விவரங்களும் இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.

    • காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது.
    • இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது.

    வாஷிங்டன்:

    கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த

    காஷ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது.
    • பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதியை உறுதி செய்யும் ஒரு FBI ஐ பெற அமெரிக்க மக்கள் தகுதியானார்கள்.

    கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

     

    இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது. 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த காஷ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளரும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைவருமான டான் ஸ்கேவினோ, காஷ் படேலை FBI இயக்குநராக உறுதி செய்த பிறகு வாழ்த்த பாலிவுட் மீம் வீடியோ ஒன்றைப் பயன்படுத்தினார்.

    அந்த மீம்ஸில் ரன்வீர் சிங் நடித்த 'பாஜிராவ் மஸ்தானி' திரைப்படத்தின் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. தனது நியமனம் குறித்து பேசியிருந்த காஸ் படேல், "வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதியை உறுதி செய்யும் ஒரு FBI ஐ பெற அமெரிக்க மக்கள் தகுதியானார்கள்" என்று தெரிவித்திருந்தார். 

    • காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது.
    • அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.

    காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை மீது சத்தியம் செய்தபடி காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.

    அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய காஷ் படேல், நான் அமெரிக்கக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அமெரிக்க கனவு இறந்துவிட்டதாக நினைக்கும் எவரும், இங்கே பாருங்கள். உலகின் மிகப் பெரிய தேசத்தின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். அது வேறெங்கும் நடக்காது. எப்.பி.ஐ-க்குள்ளும் அதற்கு வெளியேயும் பொறுப்பு இருக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோன புகழ்பெற்ற ஜூடி கார்லாண்ட் என்ற நடிகை அணிந்த மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட செருப்பை தற்போது எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்ள மின்னெசோட்டா என்ற நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு இருந்த செருப்பு காட்சி பொருளாக வைக்கப்பட்டு இருந்தது. இந்த செருப்புகள் ‘தி விசார்டு ஆப் ஓசெட்’ படத்தில் ஜூடி கார்லாண்ட் என்ற நடிகை அணிந்த செருப்பு ஆகும்.

    மின்னசோட்டா அருங்காட்சியகத்தில் இருந்த இந்த ஒரு ஜோடி செருப்பை, கடந்த 2005-ம் ஆண்டு கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இந்த செருப்புகளை கண்டறிவது மிக முக்கியமான ஒன்று என அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளாக தேடப்பட்டது.

    12 ஆண்டுகளாக இந்த செருப்பு குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நிலையில், கடந்த ஆண்டு எப்.பி.ஐ வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. உலகின் தலைசிறந்த விசாரணை கமிஷனாக கருதப்படும் எப்.பி.ஐ இந்த வழக்கை கடந்த ஓராண்டாக விசாரித்து வந்தது.

    இந்நிலையில், சமீபத்தில் ஒருவர் அளித்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த செருப்பு மீட்கப்பட்டதாக எப்.பி.ஐ அறிவித்துள்ளது. இருப்பினும் இதனை கொள்ளையடித்தவர்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே இந்த வழக்கு முடியவில்லை எனவும், கொள்ளையர்களை கண்டறிய வேண்டும் எனவும் எப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
    ×