என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kash Patel"

    • இந்திய வாமாசாவளியை சேர்ந்த அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்
    • க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார்.

     ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 இல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பல உலக தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என இந்திய வாமாசாவளியை சேர்ந்த அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்

    காஷ் பட்டேல் கூறியதாவது,

    காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எப்.பி.ஐ இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் இந்திய அரசாங்கத்திற்கு எங்கள் முழு ஆதரவையும் தொடர்ந்து வழங்குவோம். பயங்கரவாதத்தின் தீமைகளால் உலகம் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை இந்த தாக்குதல் நினைவூட்டுகிறது என்றார்.

    ஏற்கனவே இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    • காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது.
    • இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்தது.

    வாஷிங்டன்:

    கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த

    காஷ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது.
    • பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதியை உறுதி செய்யும் ஒரு FBI ஐ பெற அமெரிக்க மக்கள் தகுதியானார்கள்.

    கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

     

    இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது. 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த காஷ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளரும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைவருமான டான் ஸ்கேவினோ, காஷ் படேலை FBI இயக்குநராக உறுதி செய்த பிறகு வாழ்த்த பாலிவுட் மீம் வீடியோ ஒன்றைப் பயன்படுத்தினார்.

    அந்த மீம்ஸில் ரன்வீர் சிங் நடித்த 'பாஜிராவ் மஸ்தானி' திரைப்படத்தின் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. தனது நியமனம் குறித்து பேசியிருந்த காஸ் படேல், "வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதியை உறுதி செய்யும் ஒரு FBI ஐ பெற அமெரிக்க மக்கள் தகுதியானார்கள்" என்று தெரிவித்திருந்தார். 

    • காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது.
    • அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.

    காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை மீது சத்தியம் செய்தபடி காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.

    அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய காஷ் படேல், நான் அமெரிக்கக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அமெரிக்க கனவு இறந்துவிட்டதாக நினைக்கும் எவரும், இங்கே பாருங்கள். உலகின் மிகப் பெரிய தேசத்தின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். அது வேறெங்கும் நடக்காது. எப்.பி.ஐ-க்குள்ளும் அதற்கு வெளியேயும் பொறுப்பு இருக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    ×