search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indiana"

    • குழந்தை கை விரல்கள் சிலவற்றில் எலும்புகள் வெளியே தெரிந்தன
    • வீடு முழுவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் தெரிந்தது

    அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதி.

    இங்கு வசித்து வருபவர்கள் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன் எனும் அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்தார். வேறு ஒரு தம்பதியினரும் அவர்களின் குழந்தையுடன் இவர்களுடன் வசித்து வந்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து வந்த பார்த்த போது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டான். வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது. ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்தது.

    அக்குழந்தை உடனடியாக இண்டியானாபொலிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக குழந்தை உயிர் பிழைத்து கொண்டது..

    காயங்களுக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அக்குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரிய வந்தது. வீடு முழவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது அந்நாட்டு சட்டப்படி சம்பந்தபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவமனை சிகிச்சை முடிந்து அந்த குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளான்.

    தேசிய குழந்தைகள் நலனுக்கான துறையின் பொறுப்பில் அந்த வீட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் தற்போது அரசு பொறுப்பில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    • அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யில் பணியாற்றும் பெண்கள் விகிதம் சுமார் 24 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது
    • இந்திய பெண்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் மட்டுமே அங்கு பணியாற்றுகின்றனர்

    ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) என்பது அமெரிக்காவின் உள்நாட்டு உளவு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும்.

    அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யில் பணியாற்றும் பெண்களின் விகிதம் சுமார் 24 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.

    அந்த அமைப்பின் ஸால்ட் லேக் சிட்டி அலுவலகத்தின் சிறப்பு அதிகாரியாக இந்திய-அமெரிக்க பெண்மணியான ஷோஹினி சின்ஹா என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் (Purdue University) உளவியலில் இளங்கலை பட்டம் மற்றும் மனநல ஆலோசனையில் முதுகலை பட்டம் பெற்ற ஷோஹினி, எஃப்.பி.ஐ-யில் பணிபுரிவதற்கு முன்பு, ஒரு சிகிச்சையாளராகவும், பின்னர் இண்டியானாவின் லஃபாயெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.

    ஷோஹினி சின்ஹா 2001-ல் எஃப்.பி.ஐ.-யில் சிறப்பு அதிகாரியாக சேர்ந்தார். முதலில் மில்வாக்கி கள அலுவலகத்தில் பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைகளில் பணியாற்றினார். குவாண்டனாமோ விரிகுடா கடற்படைத்தளம், லண்டனில் உள்ள எஃப்.பி.ஐ.யின் சட்ட அலுவலகம் மற்றும் பாக்தாத் செயல்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தற்காலிக பணிகளில் பணியாற்றினார்.

    2009-ல் கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்று வாஷிங்டனில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். கனடாவை தளமாகக் கொண்ட விசாரணைகள் அமைப்பின் திட்ட மேலாளராக பணியாற்றினர்.

    2012-ல் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் சட்ட உதவியாளர் பதவி உயர்வு பெற்று ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் மற்றும் கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையுடன் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு விஷயங்களில் பணியாற்றினார்.

    2015-ல் அவர் டெட்ராய்ட் கள அலுவலகத்தில் கள மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்று சர்வதேச பயங்கரவாத விஷயங்களை விசாரிக்கும் குழுக்களை வழிநடத்தினார்.

    2020-ம் ஆண்டின் தொடக்கத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் கிரிமினல் சைபர் ஊடுருவல் விஷயங்களை துப்புதுலக்கும் சைபர் ஊடுருவல் படைக்கு மாற்றப்பட்டார். பிறகு போர்ட்லேண்ட் கள அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விஷயங்களுக்கும், பின்னர் குற்றவியல் விஷயங்களுக்கும் உதவி சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

    2021-ல், எஃப்.பி.ஐ. இயக்குநரின் நிர்வாக சிறப்பு உதவியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய பதவி உயர்வு வரும்வரை, வாஷிங்டனில் உள்ள எஃப்.பி.ஐ.யின் தலைமையகத்தில், அந்த பதவியிலேயே தொடர்ந்தார்.

    அமெரிக்காவில் இந்திய பெண்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒரு இந்திய-அமெரிக்க பெண் எஃப்.பி.ஐ.யில் பல வருடங்கள் சிறப்பாக பணியாற்றி உயர்வான பதவிகளை அடைந்திருப்பதை உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் பெருமையாக பார்க்கிறார்கள்.

    ×