search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US state"

    • 4 மாணவர்களை கீழே தள்ளி விட்டனர்; ஒருவரை முகத்தில் குத்தினர்
    • பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது ஆபர்ன் ரிவர்சைடு (Auburn Riverside) உயர்நிலை பள்ளி.

    கடந்த திங்கட்கிழமையன்று மதியம் 01:00 மணியளவில் 6 முகமூடி அணிந்த நபர்கள், அப்பள்ளியின் பக்கவாட்டில் உள்ள கதவுகளின் வழியாக அப்பள்ளிக்குள் திடீரென உள்ளே நுழைந்தனர். அவர்கள் வேக வேகமாக அப்பள்ளியின் பல இடங்களுக்கு ஓடி, பல பள்ளி மாணவர்களை தாக்க தொடங்கினர்.

    4 மாணவர்களை கீழே தள்ளிய அவர்கள், ஒரு மாணவனின் முகத்தில் குத்து விட்டனர். இதையடுத்து அங்குள்ள மாணவர்கள் பயத்தில் அங்குமிங்கும் ஓட தொடங்கினர்.

    இதை கண்ட பள்ளி நிர்வாகத்தினர் அந்த முகமூடி மனிதர்களை துரத்த தொடங்கினர். அவர்களை கண்டதும் அந்த முகமூடிகள் பின்வாங்கி பள்ளியை விட்டு ஓடி விட்டனர்.

    அவர்கள் சென்றதும் உடனடியாக அந்த பள்ளியின் அனைத்து கதவுகளும் அடைத்து பூட்டப்பட்டு, பாதுகாப்பான முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

    அன்றிலிருந்து பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இச்சம்பவம் மாணவர்கள் மற்றும் மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் மனதளவில் பாதிப்படைந்துள்ள அவர்களில் பெரும்பாலானோர் ஒட்டு மொத்தமாக வகுப்பிற்கு வரவில்லை.

    செவ்வாய்கிழமையிலிருந்து மொத்தம் 532 மாணவ மாணவியர் பள்ளியிலிருந்து விடுப்பில் உள்ளதாக அம்மாவட்ட கல்வி துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    மாணவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அந்த முகமூடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போவதாக அப்பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. யார் அந்த முகமூடி அணிந்து வந்த நபர்கள் என்பதும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணமும் இதுவரை தெரியவில்லை.

    • சாலை விதிமீறல் அமெரிக்காவில் குற்றமாக கருதப்படுகிறது
    • சிகப்பு விளக்கு எரிவதை கண்டும் சாலையை அப்பெண் கடந்தார்

    அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பினெல்லஸ் கவுன்டி (Pinellas County) பகுதியில் உள்ளது க்ளியர்வாட்டர் (Clearwater) நகரம்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இங்குள்ள கடற்கரை பகுதியில் உள்ள ஒரு டிராபிக் சிக்னல் அருகே 32 வயதான ஒரு பெண் சுற்றுலா பயணி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாதசாரிகள் சாலையை கடக்க முயல்வதை தடுக்கும் சிகப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அப்பெண் அதை பொருட்படுத்தாமல் சாலையை கடக்க முயற்சித்தார்.

    சாலை விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை தீவிரமாக வலியுறுத்தும் அமெரிக்காவில் இந்த விதிமீறல் குற்றமாக கருதப்படுவதால், அங்குள்ள டிராபிக் காவல் அதிகாரி நிகோலஸ் பலோமா (29) அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார்.

    அப்பெண்ணிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிகோலஸ், அப்பெண்ணை தனது காரில் ஏற சொன்னார். தயங்கிய அப்பெண்ணிடம், சாலை விதிமீறலுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க தனது பாலியல் ஆசைகளுக்கு இணங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். அவரிடம் சிக்கி கொண்ட அப்பெண்ணை தனது காரில் 30 நிமிடங்களுக்கும் மேலாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று தகாத முறையில் நடந்து கொண்டார். பிறகு அப்பெண் தங்கியிருந்த ஓட்டலில் அவரை இறக்கி விட்டு சென்று விட்டார். குற்றம் செய்தவர் காவல்துறையை சேர்ந்தவர் என்பதால் அப்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கவில்லை.

    இந்நிலையில் அப்பெண்ணுக்கும் அவரது நண்பருக்கும் இடையே நடந்த ஒரு மோதலை தீர்க்க காவல்துறையினர் சென்றிருந்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையில் அப்பெண் தனக்கு நேர்ந்ததை தெரிவித்தார்.

    தங்கள் துறையை சேர்ந்த ஒருவரே பெருங்குற்றம் புரிந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் நிகோலஸை வலைவீசி தேடி வந்தனர்.

    இறுதியாக நேற்று அவரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயிஸ் திருடு போனது
    • துப்பு தருபவர்களுக்கு ரூ.4 லட்சம் பரிசு அறிவித்திருந்தார்

    அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி, பல கோடீசுவரர்களின் விருப்பமான வசிப்பிட பகுதியாக உள்ளது.

    ஏரியல் பேனர்ஸ் (Aerial Banners) எனும் நிறுவனத்தின் உரிமையாளரான பாப் பென்யோ (61) எனும் பெரும் கோடீசுவரர் இங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள இவரது மிக பெரிய பண்ணை வீட்டில் தனது பல கார்களுடன் ஒரு விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் (Rolls Royce Wraith) காரையும் பாப் வைத்திருந்தார். இதன் விலை சுமார் ரூ.2 கோடி ($250,000) இருக்கும்.

    சில நாட்களுக்கு முன் அவரது மனைவி ஓல்கா பென்யோ (41) தனது 2 குழந்தைகளுடன் அக்காரில் வெளியே சென்று விட்டு மீண்டும் பங்களாவிற்கு திரும்பினார். அவர் காரை அதன் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு பங்களாவிற்கு உள்ளே சென்ற சிறிது நேரத்தில் 2 திருடர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் அக்காரை சுலபமாக சிறிது நேரத்தில் அவர்கள் திருடி வெளியே வேகமாக ஓட்டி சென்று விட்டனர். பங்களாவின் நிறுத்துமிடத்தின் ரிமோட் உபகரணத்தை போன்றே தாங்களாக ஒன்று தயார் செய்து வந்து அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவரது நிறுத்துமிடத்தில் ஆஸ்டன் மார்ட்டின் கார் ஒன்றும், 1970 செவர்லே காரும் இருந்தது. அந்த கார்களை விட்டு விட்டு ரோல்ஸ் ராயிஸ் காரை திருடி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து கார் திருடு போனதை காவல்துறையிடம் தெரிவித்த பாப் பென்யோ, காணாமல் போன காரை கண்டு பிடித்து தர வித்தியாசமாக விளம்பரம் செய்தார்.

    ஒரு விமானத்தின் பின்பகுதியில் ஒரு மிக பெரிய பேனரில் தனது செல்போன் நம்பருடன் "காணவில்லை - ஊதா நிற ரோல்ஸ் ராயிஸ்" என குறிப்பிட்டு, அத்துடன் அதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சுமார் ரு.4 லட்சம் ($5000) பரிசும் அறிவித்திருந்தார்.

    அந்த விமானம் இந்த பேனருடன் வானில் மியாமி நகர் முழுவதும் பறந்தது.

    அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு பெண், அந்த ரோல்ஸ் ராயிஸ் காரை தான் கண்டதாக தகவல் தந்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அதை மீட்டனர். கார் பத்திரமாக மீட்கப்பட்டாலும் அதனுள்ளே பென்யோவின் மனைவி வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த பல பொருட்கள் களவாடப்பட்டிருந்தது.

    காணாமல் போன விலையுயர்ந்த காருக்காக பாப் கையாண்ட நூதன விளம்பர வழிமுறை சமூக வலைதளங்களில் மிகவும் பேசப்படுகிறது.


    • குழந்தை கை விரல்கள் சிலவற்றில் எலும்புகள் வெளியே தெரிந்தன
    • வீடு முழுவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் தெரிந்தது

    அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதி.

    இங்கு வசித்து வருபவர்கள் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன் எனும் அவர்களின் மற்றொரு உறவுக்கார பெண்மணியும் அவர்களுடன் வசித்து வந்தார். வேறு ஒரு தம்பதியினரும் அவர்களின் குழந்தையுடன் இவர்களுடன் வசித்து வந்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு, தனது 6 மாத ஆண் குழந்தையின் உடலெங்கும் காயங்கள் இருப்பதாக எவான்ஸ்வில் அவசரசேவைக்கு டேவிட் தகவலளித்தார். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்து வந்த பார்த்த போது அக்குழந்தை தலை மற்றும் முகத்தில் 50 இடங்களில் காயங்களுடன் உடல் முழுவதும் ரத்த களரியாக காணப்பட்டான். வலது கரத்தில் அனைத்து விரல்களின் தலைபாகங்களிலும் சதை முழுவதுமாக காணாமல் போயிருந்தது. ஒரு சில விரல்களில் உள்ளேயிருக்கும் எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு காயங்கள் இருந்தது.

    அக்குழந்தை உடனடியாக இண்டியானாபொலிஸ் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ரத்தம் செலுத்தப்பட்டது. அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் விளைவாக குழந்தை உயிர் பிழைத்து கொண்டது..

    காயங்களுக்கான காரணங்கள் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் அக்குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்ட எலிகள் கடித்திருப்பது தெரிய வந்தது. வீடு முழவதும் குப்பை கூளங்கள் நிறைந்து எலிகள் நடமாட்டம் இருப்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து குழந்தையை வளர்ப்பதில் பொறுப்பற்ற முறையில் இருந்ததற்காகவும் பராமரிக்கும் கடமையில் தவறியதற்காகவும் அத்தம்பதியினரையும் அவர்களின் உறவுக்கார பெண்மணியையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் மீது அந்நாட்டு சட்டப்படி சம்பந்தபட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மருத்துவமனை சிகிச்சை முடிந்து அந்த குழந்தை, குழந்தைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டு தற்போது நலமாக உள்ளான்.

    தேசிய குழந்தைகள் நலனுக்கான துறையின் பொறுப்பில் அந்த வீட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் தற்போது அரசு பொறுப்பில் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ×