என் மலர்
நீங்கள் தேடியது "America"
- இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- இந்த தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள் மீது பாய்ந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தூதரகம் கூறும்போது, இஸ்கான் கோவில் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அனைத்து பக்தர்களுக்கும், சமூகத்திற்கும் துணைத் தூதரகம் முழு ஆதரவை வழங்குகிறது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
- குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.
- பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது.
இதில் இந்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க மந்திரி மார்கோ ரூபியோ, ஜப்பான் மந்திரி தகேஷி இவாயா, ஆஸ்தி ரேலிய மந்திரி பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், "பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கண்டிக்கத்தக்க செயலுக்குக் காரணமானவர்கள், ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிதியுதவி செய்தவர்கள் மீது எந்த தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அனைத்து ஐ.நா. உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் கீழ் தங்கள் கடமைகளுக்கு இணங்க, இந்த விஷயத்தில் அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் தீவிர மாக ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்தார்.
- பின்னர் இந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.
இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும், இதுகுறித்து 8 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம் என்று நினைக்கிறேன். அது வேறு வகையான ஒப்பந்தமாக இருக்கும். இது நாம் உள்ளே சென்று போட்டியிடக்கூடிய ஒரு ஒப்பந்தமாக இருக்கும்.
இந்தியாவுடன் மிகக் குறைந்த வரிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம். இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் நிறுவனங்களும் சமமாக போட்டியிடும் வகையில் மிகக் குறைவான வரிகளை கொண்டதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக ஈரானின் அணு நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி, மாறி தாக்குதல்களை தொடுத்தன. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை போர் விமானங்கள் மூலம் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும் 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே இஸ்ரேல்-ஈரான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் தவறானது. இந்த அறிக்கைகள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை குறைப்பதற்கான ஒரு முயற்சியாகும். ஏனென்றால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்றார்.
மேலும் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்ற அறிக்கைகள் முற்றிலும் தவறானது. இது துணிச் லான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும்" டிரம்பின் தலைமையை குறைத்து மதிப்பிடுவதும் நோக்கமாகக் கொண்டவை.
நீங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை அவர்களின் இலக்குகளில் சரியாகப் போடும்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு முழுமையான அழிவு ஏற்பட்டது என்றார்.
- இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்தது.
- அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளை தாமதப்படுத்தியுள்ளன.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
கடந்த ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்தது.
இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, இஸ்ரேல் உடனான சண்டையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்தது. முதலில் போர் நிறுத்தம் இல்லை என்று கூறிய ஈரான் தற்போது போர் நிறுத்தத்தை அறிவித்தது.
இந்நிலையில், அணு ஆயுதத்தை தயாரிக்க ஈரான் மீண்டும் முயற்சிக்க கூடாது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜே.டி. வான்ஸ், "ஈரானின் அணு நிலையங்கள் மீதான எங்களது தாக்குதல், யுரேனியத்தை புதைப்பதை இலக்காக கொண்டு இருந்தது. யுரேனியம் புதைக்கப்பட்டுவிட்டது என்று நான் நினைக்கிறேன். ஈரானின் யுரேனியம் கையிருப்பை அகற்றவும், செறிவூட்டப்பட்ட எரி பொருளை அணு ஆயுதமாக மாற்றும் ஈரானின் திறனை அழிக்கவும் அமெரிக்கா விரும்பியது.
அதன்படி அமெரிக்கா தாக்கிய 3 செறிவூட்டல் நிலையங்களுக்கு அடியில் ஈரானின் யுரேனியம் கையிருப்பு புதைந்து போயிருக்கலாம். நாங்கள் ஈரானுடன் போரில் ஈடுபடவில்லை. ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் போரில் ஈடுபட்டுள்ளோம்.
அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுதத்தை உருவாக்கும் முயற்சிகளை கணிசமாக தாமதப்படுத்தியுள்ளன. அதுதான் தாக்குதலின் குறிக்கோளாக இருந்தது. அதை நிறைவேற்றி உள்ளோம். ஈரான் எதிர்காலத்தில் அணு ஆயுதத்தை உருவாக்க விரும்பினால் அவர்கள் மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தெரிவித்தார்.
- அமெரிக்க கமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வெளியுறவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
- அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன.
இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவும் தற்போது ஈரானுக்கு எதிரான நேரடி ராணுவ நடவடிக்கையை முதன் முறையாக தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்று பெயரிடப் பட்ட 7 பி-2 நவீன ரக குண்டு வீச்சு விமானங்கள் மற்றும் போர் விமானங்கள ஈரான் மீது அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த விமானங்கள் ஈரானில் உள்ள போர்டோவ், நடான்ஸ், இஸ்பஹான், ஆகிய 3 அணுசக்தி தளங்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசியது. இந்த நவீன ரக விமானங்கள் 30 ஆயிரம் பவுண்டு ( 13,500 கிலோ ) எடை கொண்ட பங்கர் பஸ்டர் எனப்படும் பதுங்கு குழிகள் அழிப்பு குண்டுகளை வீசியது.
ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தில் மேலே உள்ள மலையில் மோதிய இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்க படைகள் தாக்கியதில் அணு சக்தி தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமையுடன் கூறினார்.
இடைவிடாமல் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானங்கள் பத்திரமாக மீண்டும் மிசோரியில் உள்ள வைட்மேன் விமான படை தளத்திற்கு திரும்பி உள்ளது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பதால் ஈரான் பதிலடி கொடுக்கும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அமெரிக்காவில் உள்ள நகரங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு உள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத் தப்பட்டு உள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க வெளியுறவு துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் லெபனானில் உள்ள அமெரிக்க துணை தூதரக ஊழியர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக் கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
- ஈரான் உச்சபட்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது தெரியும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தள பதிவில், "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதேபோல் சதாம் உசே னுக்கு ஏற்பட்ட நிலைமை அயதுல்லா அலி காமெனிக்கு ஏற்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் டிரம்பின் மிரட்டலுக்கு அடியபணிய மாட்டோம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் தொடங்கிவிட்டது. பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு (இஸ்ரேல்) நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் 6-வது நாளாக பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. ஈரான் தலைநகர் டெக்ரானை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. டெக்ரானுக்கு அருகில் உள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை உற்பத்தி நிலையம் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பிற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேபோல் டெக்ரானிலும், தலைநகருக்கு மேற்கே உள்ள கராஜ் நகரத்திலும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே டெக்ரானின் 18-வது மாவட்டத்தில் உள்ள ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அப்பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.
அதேபோல் இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.
இதையடுத்து ஈரான் ஏவுகணைகளை நடுவானில் தடுக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. தாக்குதல் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேல் ராணுவம் கேட்டு கொண்டது.
இந்த நிலையில் இஸ்ரேலைத் தாக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் டெக்ரான் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தளங்களை குறிவைத்து தாக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்து உள்ளது.
ஈரானின் ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்ரஹிம் மௌசவி கூறும்போது, "இதுவரை எங்கள் ராணுவ நட வடிக்கைகள் வெறும் எச்சரிக்கைகள்தான். மேலும் கடுமையான, தண்டனைக்குரிய தாக்குதல்கள் தொடரக்கூடும். எனவே இஸ்ரேலியர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள டெல் அவிவ் மற்றும் ஹைபாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
மோதல் காரணமாக ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்களுக்கு மூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு அவர் கடத்தி வந்துள்ளார்.
- இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அமெரிக்க எப்.பி.ஐ இயக்குனர் காஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் சீனாவை சேர்ந்த யுன்கிங் ஜியான் என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவரது காதலரும் சீனாவில் ஆராய்ச்சியாளருமான ஜூன்யோங் லியு, தனது காதலியை பார்க்க அமெரிக்காவுக்கு வந்து உள்ளார்.
அப்போது அவர் புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளார். இந்த நோய்க்கிருமியை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆய்வு செய்து மேலும் மேம்படுத்த திட்டமிட்டு இருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கிருமி விவசாய பயங்கரவாத ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புசேரியம் கிராமினேரமின் நச்சுகள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.
இதுகுறித்து எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் கூறியதாவது:-
யுன்கிங் ஜியான் என்பவர் தான் பணிபுரியும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக புசாரியம் கிராமிநேரம் என்ற ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்தி உள்ளார். இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கோடிக் கணக்கான டாலர்கள் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திவிடும். ஜியானின் காதலன் சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். அங்கு அவர் இந்த நோய்க்கிருமி குறித்து ஆராய்ச்சி நடத்துகிறார்.
முதலில் குற்றச்சாட்டை மறுத்த அவர் பின்னர் அமெரிக்காவுக்கு நோய்க் கிருமியை கடத்தியதை ஒப்புக்கொண்டார். யுன்கிங் ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்துள்ளார். அவர் இந்த நோய்க்கிருமி குறித்த ஆராய்ச்சிக்காக சீன அரசாங்கத்திடமிருந்து நிதி பெற்ற ஆதாரங்கள் உள்ளன என்றார்.
சீன ஆராய்ச்சியாளர்கள் மீது சதித்திட்டம், அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், தவறான கருத்துக்களை வெளியிட்டது மற்றும் விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள
- ஹமாஸ் அமைப்பினர் 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
- இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்தம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.
இதற்கிடையே காசாவை விலைக்கு வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அங்குள்ள பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இதற்கு பாலஸ்தீனம் மற்றும் காசா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் காசா பகுதியில் இருந்து 10 லட்சம் பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
மேலும் பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்றுவதற்கு ஈடாக, டிரம்ப் நிர்வாகம் லிபியாவிற்கு கோடிக்கணக் கான டாலர் நிதியை அளிக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், பாலஸ்தீனியர்களை லிபியா நாட்டுக்கு மாற்றும் திட்டம் குறித்து வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனக்கூறி அமெரிக்க அதிகாரி ஒருவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவை சேர்ந்த நிக் மேடோக் உலகம் முழுவதும் பயணம் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார்.
- அவர் சமீபத்தில் இந்தியா வந்து ரெயில் பயணம் செய்தார்.
அமெரிக்காவின் மிசோரியைச் சேர்ந்த நிக் மேடோக். இவர் 8 ஆண்டு களாக உலகம் முழுவதும் பயணம் செய்து சமூக ஊடகங்களில் தனது பயணங்களை பதிவிட்டு வருகிறார். பல்வேறு வினோதமான இடங்களையும் பார்வையிட்டு பதிவிட்டுள்ள அவர் சமீபத்தில் இந்தியா வந்தார்.
ஆனால் இந்திய ரெயில் பயணம் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்திவிட்டது. ஸ்லீப்பர் வகுப்பில் 15 மணி நேர பயணத்திற்குப் பிறகு கடுமையான சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், "15 மணிநேர ரெயில் பயணமா அல்லது வாரணாசியில் இறந்த உடல்களை ஒரு வாரம் சுவாசித்ததா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் எனது நுரையீரல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன" என்று குறிப்பிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள காணொளியில், ரெயிலின் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டியில் உள்ள அசுத்தமான கழிப்பறையைக் காட்டினார். அவர் தனது பயணத் தேதியையோ அல்லது அவர் சென்ற பாதையையோ குறிப்பிடவில்லை, ஆனால் ரயிலில் 15 மணிநேரம் கழித்ததாக மட்டும் குறிப்பிட்டுள்ளதோ டு இனி ரெயிலில் பயணம் செய்ய மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
நிக் மேடோக் வெளியிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நிக் மேடோக்கிற்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
- பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா்.
- இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தொலைபேசியில் பேசினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிழல் அமைப் பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.
இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே மோதல் போக்கை அதிகரிக்க வேண்டாம் என்று இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இது தொடா்பாக இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களிடமும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மாா்கோ ரூபியோ பேச்சுவாா்த்தை மேற்கொள்ளவார் என்றும் அமெரிக்கா தெரிவித்தது.
இதேபோல 'இந்தப் பதற்றமான சூழலுக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாா்த்தை மூலம் அமைதித் தீா்வைக் காண வேண்டும்' என்று இங்கிலாந்தும் அழைப்பு விடுத்தது.
இந்த நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேசினார். சில மணி நேரம் இந்த உரையாடல் நடைபெற்றது.
இதேபோல பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேசினார். இரு நாடுகள் இடையே போர் பதட்டத்தை தணிக்க வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
பஹல்காமில் நடந்த கொடுரமான பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு தனது வருத்தத்தை ஜெய்சங்கரிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் ஒத்துழைப்பதாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியுடன் நான் விவாதித்தேன். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப் படும்" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பேசும்போது காஷ்மீரில் நடந்த தாக்குதலை கண்டித்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதற்கு பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தெற்காசியாவில் பதற்றத்தை தணிக்கவும், நேரடி தகவல் தொடர்புகளை மீண்டும் ஏற்படுத்தவும், அமைதி, பாதுகாப்பை பராமரிக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுமாறு பாகிஸ்தான் பிரதமரிடம் ரூபியோ கேட்டுக் கொண்டார்.
- சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.
- நேபாள நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.
உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.
இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின்அதிர்வுகள் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல நேபாள நாட்டின் கோஷி மாகாணம் ஜாப்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






