என் மலர்
நீங்கள் தேடியது "nuclear"
- ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக ஈரானின் அணு நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. மேலும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரான் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறி, மாறி தாக்குதல்களை தொடுத்தன. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையம் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை போர் விமானங்கள் மூலம் வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மேலும் 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதற்கிடையே இஸ்ரேல்-ஈரான் இடையே நேற்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய அணு நிலையங்களில் சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும் முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை தனது முதற்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்க தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் சில மாதங்கள் மட்டுமே பின்னடைவை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று வெளியான தகவல் தவறானது. இந்த அறிக்கைகள் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்களில் ஒன்றை குறைப்பதற்கான ஒரு முயற்சியாகும். ஏனென்றால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்றார்.
மேலும் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறும்போது, ஈரானின் அணு நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்ற அறிக்கைகள் முற்றிலும் தவறானது. இது துணிச் லான போர் விமானிகளை இழிவுபடுத்துவதற்கும்" டிரம்பின் தலைமையை குறைத்து மதிப்பிடுவதும் நோக்கமாகக் கொண்டவை.
நீங்கள் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை அவர்களின் இலக்குகளில் சரியாகப் போடும்போது என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு முழுமையான அழிவு ஏற்பட்டது என்றார்.
- ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.
- போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். ஆனால் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், "எங்கள் மீது இஸ்ரேல் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்" என்று ஈரான் நாட்டின் ராணுவ அதிகாரி ஜெனரல் மொஹ்சென் ரெசா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் ஈரான் ராணுவ அதிகாரியின் கருத்தை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
- அணு ஆயுதம் குறைப்பு காரணமாக அமெரிக்கா- ரஷியா இடையே START ஒப்பந்தம்
- உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்குவதால் ரஷியா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்தது
அணு ஆயுதங்களை குறைப்பதற்காக New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது. எங்கிருந்து ஏவப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது. அணு ஆயுதம் எண்ணிக்கை அதிரிகரிப்பதை தடுப்பது. இரு நாடுகளும் தங்களுக்குள் தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா- ரஷியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்து (குறிப்பாக நேட்டோ நாடுகள்) அமெரிக்கா பல்வேறு தடைகளை ரஷியா மீது சுமத்தியது.
மேலும், அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியது. இதனால் உக்ரைன் மீதான போரை முழுமையான வெற்றி என்று ரஷியா கூறமுடியவில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவின் முக்கிய நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது என நேட்டோ நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா அறிவித்ததும் புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இதனால் ஒப்பந்தத்தை ரஷியா இடைநிறுத்தியது. இதன்மூலம் ரஷியா அணு ஆயுத தரவுகளை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டியதில்லை எனக் தெரிவித்தது.
இந்த நிலையில், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் வகையில் நாங்களும் அணு ஆயுதம் குறித்த தரவுகளை கொடுப்பதில்லை என முடிவு செய்துள்ளது.
இதுகுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியதாவது:-
அமெரிக்கா அணு ஆயுதம் குறித்த தகவல், இருக்கும் இடம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காது. ஆனால், கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து ரஷியாவுக்கு தகவல் கொடுப்போம்.
அமெரிக்க பிராந்தியத்தில் ரஷியாவின் ஆய்வுக்குழு, அவர்களுக்கான விசா வழங்கும் முறை, START தொடர்பாக ஆய்வு நடத்துவது, விமானப்படையினர் ஆகியோருக்கும் தடைவிதிக்கப்படுகிறது. ரஷியா ஆய்வு விமானங்களுக்கான டிப்ளோமெட்டிக் அனுமதிக்கும் தடைவிதிக்கப்படுகிறது.
கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த டெலிமெட்ரிக் தகவல்களும் வழங்கப்படாது. இது ஏவுகணை பரிசோதனை செய்யப்படும் விமானத்தில் இருந்து கிடைக்கும் தகவல். இரு நாடுகளும் இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தன.
START ஒப்பந்தத்தை ரஷியா மீறியதற்காக பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷியா ஒப்பந்தத்தை மீறியது சட்டப்பூர்வமாக செல்லாது. ரஷியா இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள சம்மதம் தெரிவித்தால், நாங்களும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
ரஷியாவும், அமெரிக்காவும் உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துகின்றன. START ஒப்பந்தம் அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். 2010-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2026-ல் காலாவதியாகிறது. இந்த ஓப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்கா, ரஷியா 1550 அணு ஆயுதங்கள், நிலம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து தாக்கும் ஏவுகணைகள் 700-க்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதுதான்.
- நியூயார்க்கில் அணுஆயுத தடை ஒப்பந்த மாநாடு நடைபெற்று வருகிறது.
- பார்வையாளராக கலந்து கொண்டு ஜப்பானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் அணுசக்தி தடுப்பு எங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகமிக முக்கியமானது. இதனால் ஐ.நா. அணுஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பார்வையாளராக கலந்து கொள்ள மாட்டோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் யோஷிமசா ஹயாஷி கூறுகையில் "ஜப்பானின் தேசிய பாதுகாப்புதான் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.
"கடுமையான பாதுகாப்பு சூழலின் கீழ் மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜப்பானின் இறையாண்மை மற்றும் அமைதியைப் பாதுகாக்கவும் அணுசக்தித் தடுப்பு இன்றியமையாதது" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.
ஐ.நா.வின் 2017-ம் ஆண்டு அணுஆயுத தடை ஒப்பந்தத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. இது 2021-ம் ஆண்டு நடைமுறைக்கு கொணடு வரப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதேபோன்று மீண்டும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஐ.நா. இந்த நடவடிக்கையை கொண்டு வந்தது.
அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மட்டும் இன்னும் ஐ.நா.வின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளின் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை எனக் கூறி ஜப்பான் கையெழுத்திட மறுத்துவிட்டது.
- கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.
- கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை.
நெல்லை:
அணுஉலை பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பு எதிர்பாளர் சுப.உதயகுமார் இன்று நெல்லை கலெக்டர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அணுக்கழிவு மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் வளாகத்தை ஒட்டி கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் சுமார் 156 ஏக்கர் செயற்கை நிலப்பரப்பு கடலுக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடற்கரை ஒழுங்காற்று மேலாண்மை சட்டத்திற்குப் புறம்பாகவும், மாசு கட்டுப்பாடு அதிகாரிகளின் அனுமதியும் இன்றியும் கட்டப்பட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை. வள்ளியூர் தேர்தல் பிரசா ரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
அதனை உடனடியாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி, சமூக அமைப்பு தலைவர்களுடன் போராட் டம் நடத்தப் போகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட், விடுதலை சிறுத்தைகள் முத்து வளவன், மனிதநேய மக்கள் கட்சி ரசூல் மைதீன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார், மாரியப்ப பாண்டியன், திருக்குமரன், லெனின் கென்னடி மற்றம் பலர் உடனிருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டுள்ளது. இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுவோம். அமெரிக்கா தனக்கான அணு ஆயுதங்களைத் தயாரிக்கும். அணு ஆயுதங்களை கொண்டு விளையாட விரும்புகிற சீனா, ரஷியா உள்ளிட்ட எவருக்கும் விடப்படுகிற அச்சுறுத்தலாக இது அமைகிறது” என்று கூறினார்.
நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுடன் கையெழுத்து போட்ட ரஷிய அதிபர் மிக்கேல் கார்பச்சேவ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் முடிவு, அணு ஆயுதங்களை கை விட வேண்டும் என்ற முடிவில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்” என்று எச்சரித்தார்.
டிரம்பின் முடிவு வருந்தத்தக்கது என்று ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி ஹெய்கோ கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது, ரஷியாவை தனது சொந்த பாதுகாப்பை பார்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வைத்துவிடும்” என்று எச்சரித்துள்ளார். #DonaldTrump #Nuclear






