search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power plant"

    • பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
    • 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 1 மற்றும் 2-வது அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் பிரிந்து வழங்கப்படுகிறது.

    மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எரிபொருள் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக கூடன்குளத்தின் முதல் 2 அணு உலைகள் ஆண்டுக்கு ஒரு முறை குறிப்பிட்ட நாட்கள் நிறுத்தப்படும். பின்னர் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் அந்த அணு உலைகளில் மின் உற்பத்தி தொடங்கும்.

    இந்நிலையில் முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று ( திங்கட்கிழமை) மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பராமரிப்பு பணியானது இன்று முதல் தொடர்ந்து 60 நாட்கள் நடைபெறும் என அணு மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது அணு உலையில் இருந்து வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    • பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.
    • மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையமும், 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. பழைய அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 4 யூனிட்டுகள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தற்போது புதிய அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக நேற்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது .

    இதன் காரணமாக மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

    இது போன்று பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 3 யூனிட்டுகளில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட பழைய அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) நிர்மலா நகர் மின் வழித்தடத்தில் உள்ள மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    எனவே வி.பி.கார்டன், எலிசாநகர், நட்சத்திரா நகர், மருதம் நகர், நெய்தல் நகர் ஆகிய இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • 1-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் நாளொன்றுக்கு 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் 1-வது நிலையில் உள்ள 1-வது அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான பொதுக்குழுக்கூட்டம் பனிமயமாதா ஆலயம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது
    • உலர் சாம்பல் உற்பத்திக்கு 12 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மண்டல அளவிலான பொதுக்குழுக்கூட்டம் பனிமயமாதா ஆலயம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

    மாநிலத் தலைவர் அருள்ராஜா தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் சிவக்குமார், பொருளாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் கண்ணன் வரவேற்றார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை கடலில் கலக்காமல் சிறு குறு தொழிலுக்கு இலவசமாக வழங்க வேண்டும், அனல் மின் நிலையங்களில் இருந்து வழங்கப்படும் 20 சதவீத உலர் சாம்பல் உள் ஒதுக்கீட்டினை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும், உலர் சாம்பல் உற்பத்திக்கு 12 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

    தேசிய பசுமை தீர்ப்பாயம் கொடுத்துள்ள இடைக்கால தீர்ப்பை அமல்படுத்தி செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உலர் சாம்பல் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது உட்பட சிறு, குறு தொழிலில் ஈடுபட்டுள்ள உலர் சாம்பல் உற்பத்தியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கழிவாக வெளியேற்றப்படும் சாம்பலை சிறு-குறு தொழிலுக்கு இலவசமாக வழங்காமல் கடலில் கரைக்கப்படுகிறது இதற்கு டன் ஒன்றுக்கு 500 ரூபாய் செலவிடப்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகிறது.

    மேலும் சாம்பலை இலவசமாக தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தலும் நடத்தப்பட்டது. தேர்தலை சங்கத்தின் நிறுவனர், பொருளாளர் மற்றும் தேர்தல் அதிகாரியான சென்னியப்பன் நடத்தினார். இதில் தூத்துக்குடி மண்டல புதிய தலைவராக முருகன், செயலாளராக அரவிந்த், பொருளாளராக முகமதுகான் மற்றும் 12 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பொறுப்பேற்றுக் கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டிட பொறியாளர் சங்கங்களின் முன்னாள் தலைவர் ராகவன், மாநில, மண்டல, மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து பகுதி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    • கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.
    • கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை.

    நெல்லை:

    அணுஉலை பூங்கா மற்றும் அணுக்கழிவு எதிர்ப்பு கூட்டமைப்பு எதிர்பாளர் சுப.உதயகுமார் இன்று நெல்லை கலெக்டர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அனுமதி பெறாமல் சட்டத்திற்குப் புறம்பாக மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் அணுக்கழிவு மையம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணி நடைபெறும் வளாகத்தை ஒட்டி கடலுக்குள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு இரு தூண்டில் பாலம் அனுமதி இன்றி அமைத்துள்ளனர்.

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் சுமார் 156 ஏக்கர் செயற்கை நிலப்பரப்பு கடலுக்குள் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடற்கரை ஒழுங்காற்று மேலாண்மை சட்டத்திற்குப் புறம்பாகவும், மாசு கட்டுப்பாடு அதிகாரிகளின் அனுமதியும் இன்றியும் கட்டப்பட்டுள்ளது.

    கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட 63 வழக்குகள் இன்று வரை தள்ளுபடி செய்யப்படவில்லை. வள்ளியூர் தேர்தல் பிரசா ரத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்த போது கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.

    அதனை உடனடியாக தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி, சமூக அமைப்பு தலைவர்களுடன் போராட் டம் நடத்தப் போகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட், விடுதலை சிறுத்தைகள் முத்து வளவன், மனிதநேய மக்கள் கட்சி ரசூல் மைதீன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார், மாரியப்ப பாண்டியன், திருக்குமரன், லெனின் கென்னடி மற்றம் பலர் உடனிருந்தனர்.

    வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளன.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் ஐந்து அலகுகளில் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் முதல் நிலை மூன்றாம் அலகில் 210 மெகாவாட் இரண்டாவது நிலை முதல் அலகில் 600 மெகாவாட் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 810 மெகா வாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளன.

    முதல்நிலை முதல் மற்றும் இரண்டு அலகில் 420 மெகாவாட் இரண்டாம் நிலை இரண்டாவது அலகில் 600 மெகாவாட் மொத்தம் 1020 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.

    பழுதினை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குஜராத் அனல் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் புதா இஸ்மாயில் ஜாம் என்பவரது தலைமையில் குஜராத் விவசாயிகளும், மீனவர்களும் ஒன்று சேர்ந்து ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர். #USSupremeCourt #PowerPlant #Gujarat
    வாஷிங்டன்:

    குஜராத் மாநிலம், துண்டா கிராமத்தில் டாடா முந்த்ரா மின் உற்பத்தி ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு வாஷிங்டனில் அமைந்து உள்ள உலக வங்கியின் நிதிப்பிரிவான சர்வதேச நிதிக்கழகம் 450 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3 ஆயிரத்து 60 கோடி) நிதி உதவி அளித்து உள்ளது.

    இந்த அனல் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் புதா இஸ்மாயில் ஜாம் என்பவரது தலைமையில் குஜராத் விவசாயிகளும், மீனவர்களும் ஒன்று சேர்ந்து ஒரு வழக்கு தொடுத்து உள்ளனர்.

    அந்த வழக்கில், டாடா முந்த்ரா மின் உற்பத்தி ஆலையால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இந்த மின் உற்பத்தி ஆலையில், சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல்தரம் பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    ஏற்கனவே பல்வேறு கோர்ட்டுகளை வழக்குதாரர்கள் நாடினர். ஆனால் அங்கெல்லாம் சர்வதேச நிதிக்கழகம், 1945-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச அமைப்புகள் விலக்கு உரிமை சட்டத்தின்கீழ், வழக்குகளில் இருந்து விலக்கு உரிமை பெற்று உள்ளது என கூறி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.

    அதைத் தொடர்ந்தே இப்போது அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு உள்ளனர்.

    இந்த வழக்கை அந்த கோர்ட்டு ஏற்றுக்கொண்டுவிட்டது. இதுபற்றி அந்தக் கோர்ட்டு குறிப்பிடுகையில், 1945-ம் ஆண்டு இயற்றப்பட்ட சர்வதேச அமைப்புகள் விலக்கு உரிமை சட்டத்தின்கீழ், சர்வதேச நிதிக்கழகம் வழக்கு தொடரப்படுவதில் இருந்து விலக்கு உரிமை பெற்று உள்ளதா என்பது ஆராயப்படும் என கூறியது.

    இந்த வழக்கின் மீது அக்டோபர் மாதம் விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.  #USSupremeCourt #PowerPlant #Gujarat
    ×