என் மலர்
நீங்கள் தேடியது "Zelensky"
- அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.
- நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.
ரஷியா-உக்ரைன் இடையேயான 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக 20 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக ரஷியா-உக்ரைனுடன் அமெரிக்க குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:-
அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராகிவிட்டது. 10 சதவீதம் மீதமுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்பந்தம் ஏற்படுவதற்கு உக்ரைன் 10 சதவீத தொலைவில் உள்ளது.
அந்த 10 சதவீதம்தான் அமைதியின் தலைவிதியையும், உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் தலைவிதியையும் தீர்மானிக்கும்.
போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் விரும்பினாலும், எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்தவொரு தீர்வும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்.
உக்ரைனின் நீண்டகால பாதுகாப்பை பலவீனப்படுத்தக்கூடிய அல்லது ரஷியாவைத் தூண்டிவிடக்கூடிய சலுகைகள் மூலம் அமைதி ஒப்பந்தம் ஏற்படக்கூடாது. நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்று யாராவது நினைத்தால் அது தவறானது என்றார்.
- அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார்.
மாஸ்கோ அருகே உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து 91 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் ரஷியா நேற்று தெரிவித்தது.
ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவிட்ட பிரதமர் மோடி, "ரஷிய அதிபரின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியிலான முயற்சிகளே சரியான வழி" என்று தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார். அதே சமயம் விரைவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- புளோரிடாவில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது.
- ரஷியா போர் தொடுக்காத வகையில் 50 வருட உத்தரவாதத்தை ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.
ரஷியா- உக்ரைன் இடையிலான 4 வருட போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர் 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்தார். இது தொடர்பாக உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, புளோரிடாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.
அப்போது, அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, உக்ரைனுக்கு 15 வருட பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முன்வந்துள்ளதாக ஜெலன்ஸ்சி தெரிவித்துள்ளார். மேலும், ரஷியா, உக்ரைன் மீது வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பை முயற்சியை மேற்கொள்ளாதவாறு, 50 வருடத்திற்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், யதார்த்தம், பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி இந்த போர் முடிவுக்கு வராது என்றார்.
இந்த சந்திப்பின்போது, உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஒப்பந்தம் முன்பைவிட நெருக்கமாகியுள்ளது என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஒரு மாதத்திற்கு மேலான அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை முறிந்து போகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்பட இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
- ரஷியா- உக்ரைன் சண்டையை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முயற்சி.
- 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்து, விவாதம் நடைபெற்று வருகிறது.
ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 20 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை பரிந்துரை செய்துள்ளார். இதை ஏற்றுக் கொள்வது தொடர்பாக உக்ரைன்- அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புளோரிடாவில் வருகிற ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, உக்ரைன் பாதுகாப்பை உத்தரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டிரம்பின் பரிந்துரையில் 90 சதவீதம் தயாராகிவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
- இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம்.
- புதின் அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் உரையாற்றினார். அப்போது மறைமுகமாக ரஷிய அதிபர் புதின் அழியட்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ உரையில் கூறியிருப்பதாவது:-
ரஷியா ஏற்படுத்திய அனைத்து துன்பங்களுக்கும் மத்தியிலும், மிகவும் முக்கியமானவற்றை ஆக்கிரமிக்கவோ அல்லது குண்டுவீசி அழிக்கவோ அதனால் முடியாது. அதுதான் எங்கள் உக்ரேனிய மக்களின் இதயம், ஒருவருக்கொருவர் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, மற்றும் எங்கள் ஒற்றுமை.
இன்று, நாம் அனைவரும் ஒரே கனவைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் எங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு ஆசைதான் உள்ளது. அவன் (புதின் பெயரை குறிப்பிடாமல்) அழிந்து போகட்டும் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.
ஆனால் நாம் கடவுளை நோக்கித் திரும்பும்போது, நிச்சயமாக, நாம் இன்னும் பெரிய ஒன்றைக் கேட்கிறோம். நாங்கள் உக்ரைனுக்காக அமைதியைக் கேட்கிறோம். அதற்காக நாங்கள் போராடுகிறோம், அதற்காகப் பிரார்த்திக்கிறோம், அது எங்களுக்கு உரித்தானது.
இவ்வாறு ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருகிற ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- பயண தேதியை உறுதி செய்ய இந்தியா, உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் ரஷிய அதிபர் புதின் கடந்த 4-ந்தேதி 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் புதினிடம் மோடி வலியுறுத்தினார்.
அதேபோல் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இந்தியாவின் பங்களிப்பை புதின் பாராட்டினார்.
இந்த நிலையில் புதின் வருகையை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருகிற ஜனவரி மாத தொடக்கத்தில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரது பயண தேதியை உறுதி செய்ய இந்தியா, உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
உக்ரைன் மீதான போருக்கு பிறகு ரஷிய அதிபர் புதினின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. தற்போது உக்ரைன் அதிபர் இந்தியாவுக்கு வர உள்ளார். இது ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியாவின் முயற்சிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று கருதப்படுகிறது.
- இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.
- நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதற்கிடையே ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச அமைதி திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுகொடுக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. டிரம்ப்பின் இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.
இதனால் இத்திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து வருகிறார். இதற்கிடையே அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமைதிதிட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தால் அவர் தனது சிறிய இதயத்துடன்தான் போராட வேண்டியதிருக்கும். ஆனால் இந்த திட்டம் பேச்சுவார்த்தைக்கு திறந்தே உள்ளது. இந்த அமைதிதிட்ட வரைவு இறுதி சலுகை அல்ல. நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.
2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் நடந்திருக்காது என்றார். முன்னதாக போர் நிறுத்த வரைவு திட்டத்தை வருகிற 27-ந் தேதிக்குள் உக்ரைன் ஏற்க வேண்டும்.
இல்லையென்றால் அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதற்கிடையே இந்த அமைதி வரைவு திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில் இன்று இத்திட்டம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகளின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
- போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த ஜெலன்ஸ்கி துருக்கி சென்றுள்ளார்.
- போரை நிறுத்த ரஷியா மீதான அழுத்தம் போதுமானதாக இல்லை.
உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள டெர்னோபில் மீது ரஷியா நேற்றிரவு டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 12 குழந்தைகள் உள்பட 37 பேர் காயம் அடைந்துள்ளனர். டெர்னோபில்லி உள்ள இரண்டு 9 மாடி அடுக்குமாடி குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
38 வகையான பல்வேறு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் 476 தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
சாதாரண வாழ்க்கைக்கு எதிரான ஒவ்வொரு வெட்கக்கேடான தாக்குதலும், போரை நிறுத்த ரஷியா மீதான அழுத்தம் போதுமானதாக இல்லை என்பதைக் குறிக்கிறது என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்த துருக்கி சென்றுள்ளார். துருக்கி அதிபரை சந்தித்து ரஷியாவுக்கு ராஜாங்கரீதியாலான அழுத்தம் கொடுக்க வலியுறுத்துவேன் என ஜெலன்ஸ்தி தெரிவித்துள்ளார்.
முதலில் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள துருக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் துருக்கி வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார்.
- புதிய முயற்சியாக துருக்கில் அமெரிக்க சிறப்பு தூதரை சந்திக்க இருக்கிறார்.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ரஷியா உக்ரைனில் உள்ள எனர்ஜி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா தாக்குதலை முறியடித்து உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதேவேளையில் போர் நிறுத்தத்திற்கான முயற்சிகளையும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கொண்டு வருகிறார். ரஷியாவை எதிர்ப்பதற்கு ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெலன்ஸ்கி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று ஸ்பெயினில் இருக்கும் ஜெலன்ஸ்கி நாளை, துருக்கி செல்கிறார்.
துருக்கி செல்லும் அவர் அமெரிக்காவின் சிறப்பு தூதராக ஸ்டீவ் விட்காஃவை சந்திக்க இருக்கிறார். அப்போது, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புதிய முயற்சி குறித்து பேச்சுவார்த்தை நடத்துப்படக்கூடும் எனத் தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை ரஷியா யாரையும் அனுப்பவில்லை. துருக்கி அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
துருக்கி இந்த வருடம் தொடக்கத்தில் உக்ரைன்- ரஷியா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது. இந்த பேச்சுவார்த்தையும் போர் நிறுத்தம் குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதேவேளையில் இரு நாடுகளுக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைகள் மீண்டும் புத்துயிர் பெற நாங்கள் தயாராகி வருகிறோம். மேலும் எங்கள் கூட்டாளர்களுக்கு முன்மொழியும் தீர்வுகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். போரை முடிவுக்கு கொண்டு வர முடிந்த அனைத்தையும் செய்வது உக்ரைனின் முதன்மையான முன்னுரிமையாகும் என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் பரிந்துரைகளை ரஷியா நிராகரித்ததால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- முன்னதாக ரஷிய அதிபர் புதின் உடனும் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
- 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய டோமாஹாக் தங்களுக்கு நிச்சயமாகத் தேவை என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று நேரில் சென்று சந்தித்தார். 4 வருடங்களாக தொடரும் உக்ரைன்-ரஷியா போருக்கு தீர்வு காணவும் அடுத்க்கப்பட்ட நடவைடிக்கை குறித்தும் பேசுவரத்தை நடத்தினர். இந்த சந்திப்புக்கு முன்னதாக ரஷிய அதிபர் புதின் உடனும் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
உக்ரைன் அதிபர் சந்திப்புக்கு பின் உக்ரைன் போர் நிலைமை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டார்.
அதில், உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும், இரு நாடுகளும் வெற்றியை அறிவிக்க வேண்டும், ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டிய நேரம் இது என்று நான் ஜெலென்ஸ்கியிடம் சொன்னேன். அதையே புதினுக்கும் நான் பரிந்துரைத்தேன். இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ள வேண்டும்.
இனி துப்பாக்கிச் சூடு வேண்டாம், இனி மரணங்கள் வேண்டாம், தேவையற்ற பெரிய செலவுகள் வேண்டாம். அப்போது நான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போர் தொடங்கியிருக்காது" என்று தெரிவித்தார்.
மேலும் டிரம்ப் உடனான சந்திப்பில் 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய டோமாஹாக் ஏவுகணைகள் தங்களுக்கு நிச்சயமாகத் தேவை என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். ஆனால் அதை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்று தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்னும் 2 வாரங்களுக்குள் அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இன்று அதிபர் டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ளார்.
- தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் - ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது.
ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ரஷியாவுக்கு சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.
குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ ரஷிய அதிபர் புதின் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்கா சென்று நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. புதின் போரை தேவையில்லாமல் நீட்டித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இன்று அதிபர் டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ள நிலையில் முன்னதாக புதின், டிரம்புடன் போனில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே இன்றைய சந்திப்பில் டிரம்ப் இடம் தங்களுக்கு நீண்டதூரம் பாய்ந்து தாக்கும் Tomahawk ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நேருக்கு நேர் சந்தித்து போரை முடிவுக்கு கொண்டுவருவத்து குறித்து விவாதிப்பார்களா என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் லெவிட், "அது சாத்தியமானது தான் என்று அதிபர் டிரம்ப் நினைக்கிறார். அவ்வாறு நடப்பதை அவர் நிச்சயம் விரும்புவார்" என்று தெரிவித்தார்.
- இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
- ஒரு பகுதியில் போரை நிறுத்த முடியும் என்றால், மற்ற இடங்களிலும் நிறுத்த முடியும்- ஜெலன்ஸ்கி.
இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சியால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமுதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. விரைவில் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் போர் முடிவுக்கு வரும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் "நான் டிரம்ப் உடன் டெலிபோன் மூலம் பேசினேன். அப்போது, இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக வாழ்த்து தெரிவித்தேன். ஒரு பிராந்தியத்தில் போரை நிறுத்த முடியும் என்றால், உக்ரைன்- ரஷியா போர் உள்ளிட்ட மற்று போர்களை உறுதியாக நிறுத்த முடியும்" எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டிரம்பிடம் உக்ரைனின் எரிசக்தி சிஸ்டம் மீது ரஷியா தாக்குதல் நடத்துவதாக குற்றம்சாட்டினார். அத்துடன், எங்களுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளது பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷியா உக்ரைன் மீது கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது. இன்னும் இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை முடிவுக்கு வரவில்லை.






