என் மலர்
நீங்கள் தேடியது "Ukrain"
- சுமி பகுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
- நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளார்.
உக்ரைனில் ரஷிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரஷிய தாக்குதலில் டினிப்ரோவில் ஏழு பேரும், சமரில் இரண்டு பேரும் கொல்லப்பட்டனர். வடகிழக்கு உக்ரைனின் சுமி பகுதியில் நடந்த டிரோன் தாக்குதலில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
முன்னெச்சரிக்கையாக மாஸ்கோவின் இரண்டு முக்கிய விமான நிலையங்களான வுனுகோவோ மற்றும் ஷெரெமெட்டியோவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே உக்ரைனில் இருந்து வந்த 20 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய விண்வெளி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷியாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் இராணுவ உதவியை மேலும் நாடியுள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்திக்க உள்ளார்.
- ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.
- பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி கொடுத்துள்ளார்.இந்த பேட்டியில் பல்வேறு முக்கிய தகவல்களை மோடி பகிர்ந்துள்ளார்.
அதில், உக்ரைன் - ரஷியா போர் குறித்து ப்ரீட்மேன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, "ரஷியா மற்றும் உக்ரைனுடன் இந்தியா நல்ல நட்புறவை கொண்டுள்ளது. ரஷிய அதிபர் புதினிடம் 'இது போருக்கான நேரம் கிடையாது' என்று என்னால் பேச முடியும்.
அதேபோல உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் உங்களுக்காக உலகில் எத்தனையோ மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள். போரில் நம்மால் ஒருபோதும் நல்ல முடிவை எட்ட முடியாது' என்று எடுத்துக்கூற முடியும்.
உக்ரைன் - ரஷியா போர் தொடங்கிய நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சவாலானதாக இருந்தது. ஆனால், தற்போது சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.
பேச்சுவார்த்தை மூலமாக இந்த போரை நிறுத்த முடியும். பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் உடன்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
இந்தப் போரில் இந்தியா யாருக்கும் ஆதரவாக இல்லை. ஆனால், அமைதியின் பக்கமும் சமாதானத்தின் பக்கமும் இந்தியா நிற்கிறது. இந்தப் போரினால் உலக நாடுகளே பாதிப்பு அடைந்துள்ளது.
இந்த போரினால் உணவு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அமைதியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். நான் நடுநிலையானவன் கிடையாது. நான் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறேன்'' என்று தெரிவித்தார்.
- சுமார் 650 வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்
- முழு உலகமும் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்திக்கும்.
டெல்லியில் நடைபெறும் 18 ஆவது ஆசிய ஆசிய-பசிபிக் வணிக மாநாட்டில் கலந்துகொள்ள ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்திறங்கிய அதிபர் ஓலாஃப் பிரதமர் மோடியை சந்தித்து உரையாற்றினார்.

ஜெர்மானிய வணிகத்திற்கான இந்த ஆசிய பசிபிக் மாநாட்டில் ஜெர்மனி, இந்தியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சுமார் 650 வணிகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டைப் பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஓலாஃப் இணைந்து தொடங்கி வைத்து உரையாற்றினர்.
மாநாட்டில் பேசிய மோடி, பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது. ஜெர்மன் தொழில்நுட்பம் இந்திய திறமையுடன் இணையும் போது, உலகத்திற்குச் சிறந்த எதிர்காலத்தை அளிக்கும்.
உலகில் பதற்றம், குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதுபோன்ற தீவிர பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நமது பொருளாதார ஒத்துழைப்பு மேம்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சர்வதேச தொழிலதிபர்கள் பங்கேற்க வேண்டும் என்று பேசினார்.

ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் பேசுகையில், உக்ரைனுக்கு எதிரான மிருத மிருகத்தனமான ரஷியா வெற்றி பெற கூடாது. அவ்வாறு ரஷியா வென்றால் ஐரோப்பாவின் எல்லைத் தாண்டியும் அதன் விளைவுகள் இருக்கும். முழு உலகமும் பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சந்திக்கும். ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு நம்மால் ஒருங்கிணைந்து இதுவரை ஒரு தீர்வை ஏற்படுத்த முடியவில்லை என்பது நமது இயலாமையின் வெளிப்படுத்துகிறது என்று பேசினார்.






