என் மலர்
நீங்கள் தேடியது "டொனல்டு டிரம்ப்"
- இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.
- நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.
ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இதற்காக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதற்கிடையே ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச அமைதி திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுகொடுக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. டிரம்ப்பின் இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.
இதனால் இத்திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து வருகிறார். இதற்கிடையே அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அமைதிதிட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தால் அவர் தனது சிறிய இதயத்துடன்தான் போராட வேண்டியதிருக்கும். ஆனால் இந்த திட்டம் பேச்சுவார்த்தைக்கு திறந்தே உள்ளது. இந்த அமைதிதிட்ட வரைவு இறுதி சலுகை அல்ல. நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.
2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் நடந்திருக்காது என்றார். முன்னதாக போர் நிறுத்த வரைவு திட்டத்தை வருகிற 27-ந் தேதிக்குள் உக்ரைன் ஏற்க வேண்டும்.
இல்லையென்றால் அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதற்கிடையே இந்த அமைதி வரைவு திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில் இன்று இத்திட்டம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகளின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
- இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
- ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.
மே 7 ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்ற அணிவகுப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணிச்சலான மற்றும் தீர்க்கமான தலைமையுடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு தெற்காசியாவில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" என்றார்.
முன்னதாக வர்த்தகத்தை நிறுத்துவேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 முறைக்கும் மேல் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
- காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
- ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழ போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்க அதி பர் டிரம்ப் மற்றும் கத்தார், எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த்தால் ஏற்பட்டு உள்ளது.
ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் ஹமாஸ் அமைப் பினர் தங்கள் வசம் இருந்த 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தனர். மேலும் உயிரிழந்த 4 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தனர்.
இதற்கு ஈடாக 1968 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் பிணைக் கைதிகளின் உடல்கள் உள்ளன. அவற்றை விரைவாக ஒப்படைக்கவில்லை என்றால் காசாவுக்குள் அனுப்பப்படும் நிவாரண பொருட்களை தடுப்போம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து நேற்று மேலும் 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர். இன்னும் அவர்களிடம் 20 பிணைக்கைதிகளின் உடல்கள் உள்ளன.
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழ போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஹமாஸ் இன்னும் ஏற்கவில்லை.
இதைதொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினருக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்," நான் ஹமாசிடம் பேசினேன். அப்போது நீங்கள் ஆயுதங்களை களையப் போகிறீர்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நாங்கள் ஆயுதங்களை களையப் போகிறோம் என்று சொன்னார்கள்.
அவர்கள் ஆயுதங்களை களையவில்லை என்றால், நாங்கள் அவர்களை நிராயுதபாணியாக்குவோம். அது விரைவாகவும் வன்முறையாகவும் நடக்கும். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இதுபற்றி ஹமாசுக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள பிணைக்கைதிகளின் உடல்களை உடனடியாக ஒப் படைக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ம் கட்டம் தொடங்குகிறது" என்றார்.
இந்த நிலையில் காசாவில் 6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் அமைப்பினர் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டி 6 பேரையும் கொன்றுள்ளனர். அவர்களை சுட்டு கொல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதற்கிடையே 30-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆயுதங்களை கைவிட டிரம்ப் எச்சரித்த நிலையில், பொதுவெளியில் 6 பேரை ஹமாஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது.
- இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
காசா போர் நிறுத்த திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்: இஸ்ரேல் - ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாமுனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை சமீபத்தில் பரிந்துரைத்தார்.
இதை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை ஹமாஸ் ஏற்றுக் கொண்டது. மற்ற பரிந்துரைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக் கொண்டது. இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகின்றன. இதுதொடர்பாக இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு பிரதிநிதிகள் இடையே இன்று எகிப்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அமெரிக்க பிரதிநிதியாக ஸ்டீவ் விட்காப் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போர் நிறுத்த திட்டத்தை இருதரப்பும் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"இந்த வார இறுதியில், ஹமாஸ் அமைப்பினர் வசம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது, காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மிகவும் முக்கியமான விவாதங்கள் நடந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாகவும், விரைவாகவும் நடந்து வருகின்றன. மேலும் அனைவரும் விரைவாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நூற்றாண்டு பழமையான மோதலை நான் தொடர்ந்து கண்காணிப்பேன். நேரம் மிகவும் முக்கியமானது. இதில் விரைவாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்து விடும்" என்று கூறியுள்ளார்.
- இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை எகிப்தில் இன்று நடக்க உள்ளது.
- அதிபர் ட்ரம்ப் அறிவித்த 20 அம்ச திட்டத்தை இஸ்ரேல் ஒப்புக்கொண்டது.
டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அறிவித்தார்.
ஆனால் நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில், காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸுடன் திங்கட்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.
- உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
- பட்டினியால் இறந்தவர்களில் 154 குழந்தைகள் அடங்குவர்.
டிரம்ப் அமைதி திட்டத்தை ஏற்று இஸ்ரேல் பணய கைதிகளை ஒப்படைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை ஹமாஸ் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து காசா மீதான தாக்குதலை உடனே நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டிரம்ப் அறிவுறுத்தினார். அதை ஏற்று தாக்குதல்களை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் அறிவித்தார்.
ஆனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பட்டினியால் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் பட்டினி இறப்பு எண்ணிக்கை 460 ஆக உயர்ந்தது. பட்டினியால் இறந்தவர்களில் 154 குழந்தைகள் அடங்குவர். ஆகஸ்ட் மாதம் பஞ்சம் அறிவிக்கப்பட்ட பிறகு மட்டும் 182 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இன்றைய தாக்குதல் தொடர்பாக பேசிய இஸ்ரேல் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், சில குண்டுவீச்சுகள் நிறுத்தப்பட்டாலும், இப்போதைக்கு காசாவில் முழுமையான போர் நிறுத்தம் எதுவும் நடைமுறையில் இல்லை என்று கூறினார்.
இதற்கிடையே இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு ஒன்று, கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக பாலஸ்தீன குழுவான ஹமாஸுடன் திங்கட்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.
- இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ளது.
- அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமெரிக்காவில் இன்று டிரம்பை சந்தித்து பேசவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் போது, டிரம்ப் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பிலும் ஷெரீப் கலந்து கொண்டார்.
முன்னதாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இந்தாண்டு 2 முறை அமெரிக்காவிற்கு சென்று அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசினார்
இதற்கிடையில், இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு வழங்கவேண்டும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- நவ காலனித்துவம் கோலோச்சி வரும் இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது.
- மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் , 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ. 2,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பின் தாக்கங்கள் குறித்த விவாதங்கள் பரவலாக நடந்து வருகிறது.
அதன்படி இந்த வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வாதமும் நிலவி வருகிறது.
50சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் பெரிய சந்தையை கொண்டுள்ள அமெரிக்காவின் பெப்சி, கோகோ கோலா, கேஎஃப்சி, மெக்டொனால்டு, சப்வே போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் பாதிக்கக்கூடும்.
சுதந்திர போராட்ட சமயத்தில் இந்தியரகள் கையில் எடுத்த சுதேசி இயக்கம், நவ காலனித்துவம் கோலோச்சி வரும் இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க வரிவிதிப்பை சமாளிக்க, மத்திய அரசு, சுதேசி பொருட்களை வாங்க மக்களை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி இதுகுறித்து சமீப காலங்களில் மேடை தோறும் பேசி வருகிறார்.
அதன்படி அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்கொள்ள இத்தகு அமெரிக்க தயாரிப்புகளை புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.
உலகிலேயே அதிக (145 கோடிக்கும் அதிகமான) மக்கள் தொகை இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்கள் புறக்கணிக்கப்படுவது அந்நாட்டுக்கு பேரிழப்பாகும்.
வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட் லிமிடெட் உடைய மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் , 2024 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் ரூ. 2,390 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 5% அதிகம்.
இந்தியாவில் பெப்சிகோவின் வருவாய், 2024 ஆம் நிதியாண்டில் ரூ. 8,200 கோடியாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பெப்சிகோ நிறுவனம், சுமார் 4,000 கோடி வரை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த பொருட்களை இந்தியர்கள் புறக்கணிப்பது அந்நிறுவனங்களின் மீதான அழுத்தமாக மட்டுமல்லாமல் அமெரிக்க பொருளாதரத்தின் மீதான மறைமுக தாக்கமாக மாறக்கூடும்.
- கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
- பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்தார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் செல்ல தயாராகி வருகிறார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த வாரம் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
அந்த பயணத்தின் போது, பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாகவும், அதன் எண்ணெய் இருப்புக்களை பிரித்தெடுப்பது குறித்து ஆராய்வதாகவும் டிரம்ப் உறுதியளித்தார். இந்நிலையில் இந்த முறை அமெரிக்க பயணத்தின்போது அசிம் முனீர் அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
- வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை டிரம்ப் விரும்பவில்லை.
- அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து டிரம்ப் கூறியதாவது:-
இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை.
அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.
என்று டிரம்ப் கூறினார்.
ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கி வருகிறது. 2025 மார்ச் வரை, இந்தியாவில் $22 பில்லியன் மதிப்பிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன, இது முந்தைய ஆண்டை விட 60% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
- பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
வாஷிங்டன்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
நாங்கள் ஓவல் மைதானத்தின் வாசலில் நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிக் கேள்விப்பட்டோம்.
கடந்த காலத்தின் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏதோ நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
அவர்கள் பல தசாப்தங்களாகப் போராடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பற்றி யோசிக்கும்போது பல நூற்றாண்டுகளாக. இல்லை, அது மிக விரைவாக முடிவடையும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
- டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஆகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார்.
- 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளார்
அமேரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸை தனிப்பட்ட முறையிலும் தாக்கிப் பேசி வரும் டொனல்டு டிரம்ப், கமலா ஹாரிஸை கம்யூனிச தலைவராக சித்தரிக்க முயன்று வருகிறார்.
இதற்கிடையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஆகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது.
இந்த நிலையில்தான், தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க் மந்திரிசபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாகவும் டிரம்ப் அதிபரானால் வெள்ளை மாளிகை ஆலோசகராக எலான் மஸ்க் இருக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் எலான் மஸ்க் அதை முற்றிலும் மறுத்திருந்தார். இந்த நிலையில்தான் டிரம்ப் பொது வெளியில் இதுகுறித்து வெளிப்படையாகவே தற்போது பேசியுள்ளார்.
2008 and 2012 காலகட்டம்வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடதக்கது






