என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "USA president donald trump"

    • உலகின் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் எங்களிடம் உள்ளன.
    • இன்னும் சில நாட்களில், நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நம்புகிறோம்.

    மத்திய கிழக்கு நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

    போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 27 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.

    இதைதொடர்ந்து அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்கு ஆசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்கினால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்றும் அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும். ஈரானை தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரான் அமெரிக்காவுடன் விரைவில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பேச்சுவார்த்தை மூலம் இந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர நான் விரும்புகிறேன். ஆனால் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா இந்தப் பகுதியில் நிலை நிறுத்தி வைத்திருக்கும் ராணுவத்தை பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன்.

    உலகின் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் எங்களிடம் உள்ளன. இன்னும் சில நாட்களில், நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நம்புகிறோம்.

    அப்படி ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி "இது பிராந்தியப் போராக" மாறும் என்று சொன்னது சரியா இல்லையா என்பது தெளிவாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #TrumpKimSummit
    ஹனோய்:

    வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது.
     
    இதைத்தணிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

    இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நாளை (27-ம் தேதி) மற்றும் நாளை மறுதினமும் (28-ம் தேதி) சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, பியாங் யாங்கில் இருந்து தனி ரெயில் மூலம் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார். வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கிம் வருகையையொட்டி டாங் டாங் நகரில் இருந்து ஹனோய் வரை 170 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று இரவு ஹனோய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், கிம்முடன் ஆன 2-வது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.

    டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #TrumpKimSummit
    ×