என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "America"

    • நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்த போராட்டங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது.
    • உலகளாவிய சர்வதேச பாதுகாப்பிற்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும்.

    ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாவது:-

    ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா விடுக்கும் மிரட்டல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா விமானப்படை ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கிய பிறகு, அந்த நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்த போராட்டங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது.

    இதுபோன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கிற்கும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பிற்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும்.

    வர்த்தக வரிகளை உயர்த்துவதன் மூலம் ஈரானின் வெளிநாட்டு கூட்டாளிகளை மிரட்டிப் பணிய வைக்கும் அமெரிக்காவின் முயற்சி கண்டித்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வன்முறையால் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது.
    • ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள்.

    பொருளாதார நெருக்கடியால் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதில் வன்முறைகளும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 600 க்கும் ஏற்பட்டோர் கொல்லப்பட்டுள்னர். 

    இந்த நிலையில் "ஈரானில் உள்ள அமெரிக்கக் குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளன.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அவை வன்முறையாக மாறக்கூடும்.

    இதனால் ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள். அமெரிக்க அரசாங்கத்தின் உதவியைச் சாராத வகையில் ஈரானை விட்டு வெளியேறுவதற்கான ஒரு திட்டத்தை வைத்திருங்கள்.

    உங்களால் வெளியேற முடியாவிட்டால், உங்கள் வசிப்பிடத்தில் அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பான கட்டிடத்தை கண்டறிந்து அங்கு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக ஈரான் போராட்டத்தை ஆதரித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியான போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றால் அமெரிக்கா அவர்களின் உதவிக்கு வரும் என கூறியிருந்தார்.  

    • இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.
    • பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    அமெரிக்கக் கடற்படையின் ரகசியங்களைச் சீனாவிற்கு விற்ற 25 வயது முன்னாள் கடற்படை வீரர் ஜின்ச்சாவ் வெய் என்பவருக்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் 200 மாதங்கள் (சுமார் 17 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்துள்ளது.

    சான் டியாகோவில் உள்ள USS Essex என்ற போர்க்கப்பலில் பணியாற்றி வந்த வெய், 2022-ஆம் ஆண்டு முதல் சீன உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    வெய் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடுகளைச் சீனாவிற்கு வழங்கியுள்ளார்.

    இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.

    அமெரிக்கக் கடற்படையின் தாக்குதல் திறன்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வெய் பெற்றுள்ளார்.

    பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வெய் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தனது சக வீரர்களின் உயிரையும், நாட்டின் பாதுகாப்பையும் பணயம் வைத்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறி 200 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர். 

    சீன வம்சாவளியை சேர்ந்த வெய்-க்கு 2022-ஆம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தபோதுதான் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

    குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தபோதே அவர் ராணுவ ரசிகசியங்களை கசிய விட்டுள்ளார். வெய் போலவே  ஜாவோ என்ற மற்றொரு அமெரிக்க கடற்படை வீரரும் சீனாவுக்கு உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். இந்த தொடர் சம்பவங்கள் அமெரிக்க ராணுவத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.  

    • ராணுவ ஆக்கிரமிப்பைப் பற்றிச் சிந்திப்பதை அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
    • அது அவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இதில் வன்முறை ஏற்பட்டு இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே ஈரானில் போராடுபவர்களுக்கு அமெரிக்க ஆதரவு அளிப்பதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.

    இந்நிலையில் ஈரானில் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட முயன்றால், டிரம்பிற்கு மறக்க முடியாத பாடம் புகட்டப்படும் என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நேற்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய காலிபப், "எங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராகத் தவறான முடிவுகளை எடுப்பதையோ அல்லது ராணுவ ஆக்கிரமிப்பைப் பற்றிச் சிந்திப்பதையோ அமெரிக்க அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்த டிரம்ப் நிர்வாகம் துணிந்தால், அவர்கள் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய பதிலடியைச் சந்திக்க நேரிடும். அது அவர்களுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.

    ஈரானில் உள்நாட்டு அரசியல் குழப்பங்களை அமெரிக்கா தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்வதாகக் குற்றம் சாட்டிய அவர், ஈரானிய மக்கள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் வல்லமை படைத்தவர்கள் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ராணுவ நடமாட்டத்தை ஈரான் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், எந்தவொரு சிறிய அச்சுறுத்தலுக்கும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா அத்துமீறினால் ஈரான் அருகில் உள்ள நாடுகளில் நிலைகொண்டுள்ள உள்ள அமெரிக்கா ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.  

    • தகவல் அறிந்ததும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி கைது செய்தனர்.
    • டாரிக்கா எம் மூர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடந்து வரு கிறது.

    அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணம் செடார்ப்ளப் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 7 வயது சிறுமி உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றார்.

    முதலில் தந்தை உள்பட 3 பேரை கொன்ற அவர் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் வேறு ஒரு இடத்தில் சிறுமி மற்றும் தனது 2 சகோதரர்களை சுட்டுக் கொன்றார். தகவல் அறிந்ததும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை தீவிரமாக தேடி கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் 24 வயதான டாரிக்கா எம் மூர் என்பது தெரியவந்தது. அவர் தனது குடும்பத்தி னருடன் ஏற்பட்ட தகராறில் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    டாரிக்கா எம் மூர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் இதற்கு முன்பு அவர் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
    • மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

    சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளின் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்குறிவைத்து அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த டிசம்பர் 13-ம் தேதி ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 35 இடங்களைக் குறிவைத்து 90-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. மொத்தம் 20 விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டன.

    இந்தத் தாக்குதல்கள் சிரியாவின் எந்தப் பகுதியில் நடத்தப்பட்டது அல்லது இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற  விவரங்களை அமெரிக்க ராணுவம் இன்னும் வெளியிடவில்லை.

    இருப்பினும், பயங்கரவாத மையங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.  

    • ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
    • ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரான் முழுவதும் போராட்டம் பரவி தீவிரமடைந்துள்ளது. சாலைகளில் ஆயிரகணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்புகிறார்கள்.

    போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதில் ஏற்பட்ட மோதல்களால் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போராட்டம் கட்டுக்குள் வராமல் தீவிரமடைந்து உள்ளது.

    இந்தநிலையில் ஈரானில் போராட்டம்-வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 116-ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 2600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே தலைநகர் தெக்ரானில் போராட்டங்களில் காயம் அடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. முதலுதவி செய்வதற்குக்கூட நேரம் இல்லை என்ற மருத்துவப் பணியாளர்கள் தெரிவித்தனர். ரஷ்டில் உள்ள பூர்சினா மருத்துவமனைக்கு ஒரே இரவில் 70 பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே போராட்டக்காரர்களுக்கு ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதுதொடர்பாக ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹேதி ஆசாத் கூறும்போது, போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் ஈரான் அரசு தொலைக்காட்சியில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கலவரக்காரர்களுக்கு உதவியவர்கள் கூட இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும். வக்கீல்கள் கவனமாகவும் தாமதமின்றியும் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, தேசத் துரோகம் மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்கி, நாட்டின் மீது வெளிநாட்டு ஆதிக்கத்தை நாடுபவர்களுக்கு எதிராக விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்.

    நடவடிக்கைகள் எந்தவித மென்மை, கருணை அல்லது சலுகையும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானில் போராட்டங்களை அமெரிக்கா தூண்டிவிடுவதாக ஈரான் உச்சதலைவர் அயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம் என்றும் அமெரிக்கா தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    ஈரான் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை நோக்கியுள்ளது. அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும், ஈரானுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்த எச்சரிக்கையில், அதிபர் டிரம்ப்புடன் விளையாட வேண்டாம். அவர் ஒன்றைச் செய்வேன் என்று சொன்னால், அதை அவர் நிச்சயமாகச் செய்வார் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ராணுவத் திட்டங்கள் டிரம்ப்பிடம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் அமெரிக்க ஊட கங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

    • எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்
    • அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம்.

    ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். இதை இந்தியா கடுமையாக எதிர்த்த நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் ரஷிய கச்சா எண்ணை விவகாரத்தில் இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்த என்னால் முடியும் என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவின் வரி விதிப்புகளால் பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை என்று டிரம்ப் தெரிவித்து உள்ளார். குடியரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது. ஆனால் இந்தியா அதிக வரி செலுத்துவதால் அவர் என் மீது மகிழ்ச்சியாக இல்லை. அமெரிக்காவின் வரி விதிப்புகளால் என் மீது வருத்தத்தில் இருக்கிறார். ஆனால் இப்போது இந்தியா ரஷியாவிடமிருந்து எண்ணை வாங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளது.

    அமெரிக்காவின் வரிக் கொள்கைகள் காரணமாக நாம் பணக்காரர்களாகி வருகிறோம். இதை அனைவரும் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், வலிமையானதாகவும், மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ளது.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    • மேரிலாந்தில் எலிகாட் சிட்டியில் டேட்டா அனலிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.
    • அர்ஜுன் சர்மாவை கைது செய்ய அமெரிக்க போலீசார் இன்டர்போல் உதவியை நாடினர்.

    அமெரிக்காவில் இந்திய பெண் தனது முன்னாள் காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது

    உயிரிழந்த பெண் 27 வயதுடைய நிகிதா கோடிஷாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேரிலாந்தில் எலிகாட் சிட்டியில் டேட்டா அனலிஸ்ட் ஆக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நிகிதாவைத் தானே கொலை செய்துவிட்டு,  டிசம்பர் 31 முதல் காணாமல் போய்விட்டதாக அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புகார் அளித்த உடனே போலீசாருக்குச் சந்தேகம் வராத வகையில் அர்ஜுன் இந்தியாவுக்குத் தப்பி வந்துள்ளார்.

    போலீசார் நடத்திய விசாரணையில், ஜனவரி 3-ம் தேதி அன்று அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) குடியிருப்பில் நிகிதாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    அவரது உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. அர்ஜுன் சர்மாவே, கொதிஷாலாவை கடுமையாக தாக்கி, பல்வேறு முறை கத்தியால் குத்திக் கொன்றதாக போலீசார் கண்டறிந்தனர்.

    அர்ஜுன் சர்மாவை கைது செய்ய அமெரிக்க போலீசார் இன்டர்போல் உதவியை நாடினர். இந்நிலையில் தமிழகத்தில் பதுங்கியிருந்த அர்ஜுன் சர்மாவை டிராக் செய்து இன்டர்போல் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. 

    • அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்
    • காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்

    வெனிசுலா நாட்டின்மீது திடீர் தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா சிறைபிடித்துள்ளது. மேலும் வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை இனி தாங்கள்தான் நிர்வகிப்போம் எனவும் அறிவித்துள்ளது.

    மறுபுறம் வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிகாரமீறலுக்கு உலகின் பலநாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "வெனிசுலாவில் அரங்கேறிவரும் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. வெனிசுலாவில் மாறிவரும் ஒவ்வொரு நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெனிசுலா நாட்டு மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான தனது ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், இதன் மூலம் அப்பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

    காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்கும்." என தெரிவித்துள்ளது. 

    • உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

    2020 பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 53 பேர் வரை உயிரிழந்தனர். 200 பேர் வரை காயமடைந்தனர்.

    தனது பேச்சுக்கள் மூலம் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு 2020 செப்டம்பர் முதல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலருமான உமர் காலித், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரது ஜாமீன் மனு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் தனது சகோதரியின் திருமணத்திற்காக அவருக்கு 14 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்து கடந்த டிசம்பர் 29 காலித் சிறை திரும்பினார்.

    இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரியும், சர்வதேச சட்டங்களின்படி அவருக்கு நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தியும் அமெரிக்காவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தூதருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

    அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சி மூத்த உறுப்பினர்களான ஜிம் மெகவர்ன் மற்றும் ஜேமி ரஸ்கின் தலைமையில், பிரமிளா ஜெயபால், ரஷீதா த்லைப் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

    அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் மோகன் குவாத்ராவிற்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    உமர் காலித் விசாரணை ஏதுமின்றி 5 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமை விதிமுறைகளுக்கு எதிரானது.

    குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே என்ற விதியின்படி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்.

    விசாரணையைத் தாமதப்படுத்தாமல், சர்வதேசச் சட்டங்களின்படி வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக நியூயார்க் நகரின் புதிய மேயராகப் பதவியேற்றுள்ள ஜோஹ்ரான் மம்தானி ஏற்கனவே உமர் காலித்திற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்க எம்.பி.க்களும் குரல் கொடுத்துள்ளனர்.

    அமெரிக்க எம்.பி.க்களின் இந்தத் தலையீட்டிற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும், இதற்குப் பின்னால் ராகுல் காந்தியின் தொடர்பு இருப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. 

    சிஏஏ

    2019 இல் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014 டிசம்பர் 31-க்கு முன் இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கிறது.

    ஆனால், குடியுரிமை வழங்குவதில் இருந்து முஸ்லிம்களை விலக்குவதால், இது பாகுபாடு காட்டுவதாகவும், மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்பட்டது.

    இது நாடு முழுவதும் பெரிய போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இலங்கைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களை போல குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது.
    • ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.

    அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் குயின் கிரீக் நகரில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. அதில் 4 பேர் பயணம் செய்தனர்.

    அந்த ஹெலிகாப்டர் டெலிகிராப் கேன்யனில் உள்ள மலைப்பகுதியில் மோதி விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 3 பெண்கள், விமானி பலியானார்கள்.

    தகவல் அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து மத்திய விமான போக்குவரத்து நிர்வாகமும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் விசாரணை நடத்தி வருகின்றன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்க தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. 

    ×