என் மலர்
நீங்கள் தேடியது "America"
- குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
- அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோவாகின் கவுண்டி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தில்ப்ரீத் சிங், அர்ஷ்ப்ரீத் சிங், அம்ரித்பால் சிங், விஷால், பவிட்டர் சிங், குர்தாஜ் சிங், மன்ப்ரீத் ரந்தாவா,சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இக்கும்பல் சித்ரவதை, சதித்திட்டம், சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பவிட்டர் சிங் படாலா, தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அவரை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாககூறப்படும் குற்றச்சாட்டில் இந்திய தேசிய புலனாய்வு முகமை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐதராபாத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அமெரிக்காவுக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளனர்.
- கார் தீப்பிடித்து இருந்ததில் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் டல்லாஸில் நேற்று இரவு ஒரு லாரி மோதிய விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு குடும்பமே தீயில் கருகி உயிரிழந்தனர்.
ஐதராபாத்தை பூர்வீகமாக கொண்ட தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்குடும்பம் அட்லாண்டாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் டல்லாஸ் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது கார் தீப்பிடித்து இருந்ததில் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
- தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
- இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 சிறுவர்கள் பலியானார்கள். 5 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - இரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
- போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் தோன்றினார்.
அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13-ந்தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதனையடுத்து 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - இரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
இஸ்ரேல் உடனான போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் அயதுல்லா கொமேனி தோன்றியுள்ளார்.
அப்போது, எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் ரத்தம் பாய்கிறது என மக்கள் நெகிழ்ச்சி முழக்கம் எழுப்பினர்.
- டிரம்ப் இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.
- அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க இந்தியா முடிவு
அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.
இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அதன் உதிரி பாகங்கள் மீது பதிலடி வரி விதிக்கவுள்ளதாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரிக்கு பதிலடியாக, உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு சுமார் ரூ. 6,200 கோடி வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்தார்.
- பின்னர் இந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.
இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை| அமெரிக்க செனட் நிறைவேற்றியது.
கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. 2024-25 நிதியாண்டில் இந்தியா - ரஷ்யா இடையே 68.7 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- இந்த தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள் மீது பாய்ந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தூதரகம் கூறும்போது, இஸ்கான் கோவில் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அனைத்து பக்தர்களுக்கும், சமூகத்திற்கும் துணைத் தூதரகம் முழு ஆதரவை வழங்குகிறது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்தார்.
- பின்னர் இந்த வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரிகளை விதித்தார்.
இந்தியா மீது 26 சதவீத வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ந் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும், இதுகுறித்து 8 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-
நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம் என்று நினைக்கிறேன். அது வேறு வகையான ஒப்பந்தமாக இருக்கும். இது நாம் உள்ளே சென்று போட்டியிடக்கூடிய ஒரு ஒப்பந்தமாக இருக்கும்.
இந்தியாவுடன் மிகக் குறைந்த வரிகளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப் போகிறோம். இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் நிறுவனங்களும் சமமாக போட்டியிடும் வகையில் மிகக் குறைவான வரிகளை கொண்டதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை.
- அவர்களின் அடையாளம் காணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அதிகாரிகளின் கூற்றுப்படி, யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையத்திலிருந்து ஆறு பயணிகளுடன் புறப்பட்ட செஸ்னா 441 விமானம், ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் மீட்பு நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டன.
விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
அவர்களின் அடையாளம் காணும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது.
- ஆங்கிலம் பேசத் தெரியாத சிம்ரனுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை.
- குடும்பத்தினரை இந்தியாவில் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில், நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக ஜூன் 20 அன்று இந்தியாவிலிருந்து சென்ற சிம்ரன் (24) என்ற இந்தியப் பெண் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார்.
புதன்கிழமை கண்காணிப்பு கேமராவில் கடைசியாகக் காணப்பட்ட சிம்ரன், அப்போது எந்த விதமான மன உளைச்சலிலும் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், அவர் உண்மையிலேயே திருமணத்திற்காக வந்தாரா அல்லது இலவசப் பயணத்திற்காக இந்த அவ்வாறு பொய் சொன்னாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆங்கிலம் பேசத் தெரியாத சிம்ரனுக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை. வைஃபை மூலம் மட்டுமே இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தும் சிம்ரனின் குடும்பத்தினரை இந்தியாவில் தொடர்புகொள்ளும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.
இந்த சம்பவம் முன்னதாக டொமினிகன் குடியரசில் காணாமல் போன இந்திய மாணவி சுதீக்ஷா கொனாங்கியின் சம்பவத்தை ஒத்ததாக அமைந்துள்ளது.
- ஈரான் மீண்டும் அணு ஆயுத உற்பத்தி பணியில் ஈடுபட்டால் அமெரிக்கா தாக்கும் என்றார் டிரம்ப்.
- தற்போதைய போரில் அமெரிக்காவுக்கு எந்த பலனும் இல்லை என்றார்.
தெஹ்ரான்:
இஸ்ரேல்-ஈரான் இடையே நடந்த போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டின் பேரில் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபின், முதல் முறையாக ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி பேசியதாவது:
அமெரிக்காவின் முகத்திலேயே அறைந்தோம். ஈரானை தொட நினைத்தால் அதிக விலை கொடுக்க நேரிடும்.
கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கி பதிலடி கொடுத்துள்ளோம். எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு, பாடம் புகட்டியுள்ளோம். தற்போதைய போரில் அமெரிக்காவுக்கு எந்த பலனும் இல்லை.
இஸ்லாமிய குடியரசு வெற்றி பெற்றது. மீண்டும் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவை செய்தால் எதிரி நிச்சயம் அதிக விலை கொடுக்க நேரிடும். தேவைப்பட்டால் இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் நிகழலாம்.
கத்தாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது என தெரிவித்தார்.
- ரொனால்டோ ஜெர்சியை டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.
- இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கினார்.
அந்த ஜெர்சியில், "அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு" என்று ரொனால்டோ எழுதியுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை டீம் டிரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது.