என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "America"

    • ஈரான் அறிவுப்பூர்வமான பாதைக்குத் திரும்ப வேண்டும்
    • அண்டை நாடுகளுடன் பகுத்தறிவோடும், பொறுப்புணர்வோடும் பழக வேண்டும்

    ஈரான் தனது அண்டை நாடுகளுடன் போரில் ஈடுபடாமல் புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார். மேலும், "வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் இந்த வன்முறை செயல் ஒரு தவறான கணக்கீடு ஆகும். இது ஒரு இக்கட்டான தருணத்தில் ஈரானைத் தனிமைப்படுத்தியுள்ளது. உங்கள் போர் உங்கள் அண்டை நாடுகளுடன் கிடையாது" என ஐக்கிய அரபு அமீரக அதிபரின் ராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷும் தெரிவித்துள்ளார்.

    "தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் மோதல்கள் தீவிரமடைதல் எனும் வட்டம் மேலும் விரிவடைவதற்கு முன்பாக, ஈரான் அறிவுப்பூர்வமான பாதைக்குத் திரும்ப வேண்டும்; தனது அண்டை நாடுகளுடன் பகுத்தறிவோடும், பொறுப்புணர்வோடும் பழக வேண்டும்." எனவும் கூறியுள்ளார்.

    மேலும் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க தங்களுக்கு முழுமையான மற்றும் நியாயமான உரிமை உள்ளதாக அமீரகம் எச்சரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு இராணுவ நடவடிக்கையில் ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா நாடுகள்மீது ஈரான் குறிவைத்ததை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த கருத்துகளும், கண்டனங்களும் வந்துள்ளன.  

    • யதுல்லா அலி காமேனி (86 வயது) மறைவுக்கு ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கடுகிறது.
    • அனைத்து நாடுகளும் இந்தக் கொடூரக் குற்றத்தைக் கண்டிக்க வேண்டும்.

    ஈரான் மீது நேற்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அதன் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

    தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் அரசு ஊடகமாக IRNA அவரது மரணத்தை உறுதி செய்தது.

    கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை எய்தியதாக IRNA அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கடுகிறது.

    இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் காமேனியுடன் அவரது மகள், பேரன், மருமகன், மருமகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து உலக நாடுகள் மௌனம் காக்காமல் கண்டிக்குமாறு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

    இதுகுறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை விரும்பும் அனைத்து நாடுகளும் இந்தக் கொடூரக் குற்றத்தைக் கண்டிக்க வேண்டும். சட்டவிரோதம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு முன்னால் அமைதியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    பெருமைமிக்க ஈரான் நாடு, எப்போதும் போல, வலிமை, மற்றும் உறுதியுடன் அதன் உன்னதமான பாதையைத் தொடரும். நாட்டின் தற்போதைய விவகாரங்களில் எந்த இடையூறும் அனுமதிக்கப்படாது. தியாகிகளின் தியாகம், ஈரானிய மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உயர்ந்த இலட்சியங்களைப் பாதுகாப்பதில் அவர்களின் உறுதியை வலுப்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.
    • காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு ராணுவ தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்கள் மத்தியில் இந்த படுகொலை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஜம்மு-காஷ்மீரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கமேனியின் படத்துடன் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஸ்ரீநகர் லால் சவுக்கில் பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு கமேனி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். அவர்கள் ஈரானை ஆதரித்தும், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினார்கள். ஈரானுக்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள்.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நிலைமை மோசமடையாமல் இருக்க போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

    வதந்திகள் பரவாமல் தடுக்கவும், போராட்டங்கள் மேலும் விரிவடையாமல் இருக்கவும், இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கமேனி உயிரிழந்த செய்தி அறிந்ததும் பல இடங்களில் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சில பகுதிகளில் மக்கள் கருப்பு கொடிகளை ஏந்தி துக்கம் அனுசரித்தனர்.

    மேலும் லடாக், லே பகுதி உள்ளிட்ட காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவ பொம்மையையும் எரித்தனர். இஸ்ரேல், அமெரிக்க கொடியுடன் கூடிய உருவபொம்மையை எரித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

    இதே போல உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கமேனி கொல்லப்பட்டதை கண்டித்து அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன.

    • ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் பதிலடித் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது.
    • வியன்னாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வீணடிக்கப்பட்டுவிட்டது.

    இஸ்ரேல்-ஈரான் போர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பாதுகாப்புக் கூட்டத்தில் அவையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரஸ் பேசியதாவது:-

    ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலும், ஈரானின் பதிலடித் தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் சர்வதேச மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்ப்பதற்கு சாத்தியக் கூறுகளும் இல்லை.

    இந்தத் தாக்குதலால், வியன்னாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வீணடிக்கப்பட்டுவிட்டது. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து உடனடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறேன்.

    சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்குமாறும், பொதுமக்களைப் பாதுகாக்குமாறும், அணுசக்தி பாதுகாப்பு தீவிரமாவதைத் தடுக்கவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 51 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து இப்பகுதிக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியாவின் சில பகுதிகள், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக இப்பகுதிக்கான அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ அறிவித்துள்ளது.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கான மற்றும் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவும் அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவைகளையும் ரத்து செய்துள்ளது.

    மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால், விமான நிறுவனங்கள் தேவையான இடங்களில் விமானங்களைத் திருப்பிவிடவும், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    பயணிகள் அறிக்கையை சரிபார்த்து விமான நிலையத்தை அடைய வேண்டும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    • காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்து தாக்குதல்.
    • ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 51 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    அணுசக்தி போட்டியின் காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இன்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

    தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

    தெற்கு ஈரானில் பெண் குழந்தைகள் பயிலும் ஆரம்ப பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 51 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.

    தெஹ்ரானில் ஈரான் உச்சந்தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல் நடந்துள்ளது. காமேனியின் நிலை குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில் வான்வழித் தாக்குதல்களில், ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் புரட்சிகர பாதுகாப்புப் படையின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மூன்று வெவ்வேறு ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசிர்சாதே ஈரான் புரட்சிகர ராணுவத்தின் தரைப்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

    எனினும், இந்தச் செய்திகளை ஈரானிய அரசு ஊடகங்கள் மற்றும் ராணுவம் மறுத்துள்ளன. பாதுகாப்புத் துறை அமைச்சர் பாதுகாப்பாக இருப்பதாகவும், தனது பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருவதாகவும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், ஈரானின் மிக உயரிய ராணுவ மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல்கள் தொடர்கின்றன.

    தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.   

    • சூரிய சக்தி நிறுவனங்களின் பங்குகள் 14 சதவிகிதம் வரையில் சரிவடைந்து உள்ளன.
    • நியாயமற்ற முறையில் மானியம் வழங்கியதாக கூறி இந்த வரி விதிப்பை அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்து உள்ளது.

    அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா முக்கிய நாடாக உள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ் 57 சதவிகிதம் பங்களித்துள்ளன.

    இந்தநிலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலம் மற்றும் தகடுகளுக்கு அமெரிக்கா 126 சதவிகித வரி விதித்துள்ளது. அதேபோல் இந்தோனேசியாவுக்கு 86 முதல் 143 சதவிகிதமும், லாவோஸுக்கு 81 சதவிகிதம் வரையிலும் வரி விதித்து உள்ளது.

    உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமெரிக்கா இந்த வரியை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது உள்நாட்டு உற்பத்திக்கு நியாயமற்ற முறையில் மானியம் வழங்கியதாக கூறி இந்த வரி விதிப்பை அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க சூரிய சக்தி உற்பத்தி மற்றும் வர்த்தக கூட்டணியின் முன்னணி வக்கீல் டிம் பிரைட்பில் கூறும்போது, நியாயமற்ற முறையில் வர்த்தகம் செய்யப்படும் இறக்குமதிகள் சந்தையை சிதைக்க அனுமதித்தால் அவை வெற்றிபெற முடியாது என்றார்.

    அதிக வரி விதிப்பால் இந்திய சூரிய மின்சக்தி தகடு உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்க சந்தை கிடைக்காமல் போகலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அமெரிக்கா வரி விதித்த நிலையில், சூரிய சக்தி நிறுவனங்களின் பங்குகள் 14 சதவிகிதம் வரையில் சரிவடைந்து உள்ளன.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் எட்டப்பட்ட நிலையில் இந்தியாவின் சூரிய சக்தி இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியர்கள் போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்கவும்.
    • ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் அமெரிக்க தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்பதால், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

    இந்திய மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்கவும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்பட்டால் உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும் வலியுறுத்தியுள்ளது.

    "ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாஸ்போர்ட் மற்றும் அடையாள சான்றுகள் உள்ளிட்ட தங்கள் பயண மற்றும் குடியேற்ற ஆவணங்களை வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஏதேனும் உதவிக்கு இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.

    "ஈரானில் இணையத் தடங்கல்கள் காரணமாக எந்தவொரு இந்திய நாட்டவரும் பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    • குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பின் இறக்குமதி வரி கொள்கைகளை ரத்து செய்வதற்கு முன்னதாக இந்தச் சர்வே நடத்தப்பட்டது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அரசு குறித்து அந்நாட்டு மக்களிடம் அண்மையில் சர்வே நடத்தப்பட்டது.

    ஏபிசி நியூஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இணைந்து இந்த கருத்துக்கணிப்பை நடத்தியது.

    இதன்படி, 65% அமெரிக்கர்கள் டிரம்ப் பணவீக்கத்தைக் கையாள்வதில் தோல்வியடைந்துள்ளதாக கருதுகின்றனர்.

    டிரம்பின் வரி விதிப்புக் கொள்கைகளுக்கு 64% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 34% பேர் மட்டுமே இதை ஆதரிக்கின்றனர்.

    டிரம்பின் சர்வதேச உறவுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை 62% மக்கள் அங்கீகரிக்கவில்லை.

    குடியேற்றக் கொள்கைகளில் 58% பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    குடியேற்றக் கொள்கைகளுக்காக ராணுவத்தைப் பயன்படுத்தும் அவரது திட்டத்திற்கு 54% மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    குறிப்பாக, மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் நடந்த அமலாக்க நடவடிக்கைகளின் போது இரு அமெரிக்கக் குடிமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு இந்த அதிருப்தி அதிகரித்துள்ளது.

    ஒட்டுமொத்தப் பொருளாதார நிர்வாகத்தில் 57% மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.

    நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க எந்தக் கட்சி சிறந்தது என்ற கேள்விக்கு, டிரம்ப் உடைய குடியரசுக் கட்சி கட்சி என 33% பேரும், ஜனநாயகக் கட்சி என 31% பேரும், யாருமில்லை இல்லை என 31% பேரும் தெரிவித்துள்ளனர்.

    Yahoo மற்றும் YouGov நடத்திய மற்றொரு சமீபத்திய ஆய்வில், அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான அதிபராக டிரம்ப்-ஐ 40% அமெரிக்கர்கள் தேர்வு செய்துள்ளனர்.

    டிரம்ப்பின் ஒட்டுமொத்த அங்கீகார விகிதம் 39% ஆகக் குறைந்துள்ளது. வெறும் 12% பேர் மட்டுமே அவரை ஒரு சிறந்த அதிபர் என்று கருதுகின்றனர்.  

    • டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.
    • உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிதாக 15 சதவீத வரிவிதித்தார்.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.

    தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்தப் பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வாஷிங்டனில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கவிருந்த முக்கியக் கூட்டம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு மற்றும் டிரம்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகளால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது.
    • ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன் என்றார்.

    வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா, இல்லையா என்று உலகம் முழுவதும் கடந்த நூற்றாண்டில் இருந்தே பல விவாதங்கள் இருந்து வருகிறது.

    அவற்றுக்கு வலு சேர்க்கும் வானில் ஏற்படும் வினோதமான நிகழ்வுகள், விண்கலம் போல் தென்படும் வினோத வாகனங்கள் குறித்த புகைப்படங்கள் கசிவது உண்டு.

    அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளை பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான 'ஏரியா 51'-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

    இதற்கிடையே அண்மையில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, "பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்த ஆதாரமும் தனக்குக் கிடைக்கவில்லை" என்றார்.

    ஒரு முன்னாள் அதிபரே வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் என்று கூறியது அமெரிக்காவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இந்த சூழலில் வேற்றுகிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றிய கோப்புகளை ரகசிய பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

    இதன்மூலம் அமெரிக்க ராணுவ தலைமையமாக பென்டகன், மற்றும் தொடர்புடைய துறைகள் தங்கள் வசம் உள்ள வேற்றுகிரகவாசிகள் தொடர்புடைய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், "வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது.

    அதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. நான் அதைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நிறைய பேர் அதை நம்புகிறார்கள். நான் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன்" என்று தெரிவித்தார். 

    • ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது.
    • ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும்

    ஈரான் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையேல் மோஷமான விஷயங்கள் நடக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

    வாஷிங்டனில் நடைபெற்ற "அமைதி வாரிய" கூட்டத்தில் பேசிய டிரம்ப்,

    "நாம் ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும். நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்வது எளிதல்ல என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் மோசமான விஷயங்கள் நடக்கும்" என தெரிவித்தார். மேலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அடுத்த 10 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

    மத்திய கிழக்கில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஓமன் நாடு மத்தியஸ்தம் செய்கிறது.  

    ஒருபக்கம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் மறுபுறம் ஈரான் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நிறைந்துவருகிறது. சமீப நாட்களில் F-22, F-35 மற்றும் F-16 உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மேம்பட்ட போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இதனுடன் கூடுதல் கடற்படை கப்பல்களும், வான் பாதுகாப்பு அமைப்புகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ராணுவ குவிப்பை தடுப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.  அதேசமயம் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் தெரிவித்துள்ளது. 

    ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது. கடந்த காலங்களில் திட்டங்கள் பலனளிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் தற்போதைய அணுகுமுறை, சமரசம் செய்யமறுக்கும் ஈரானுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    தற்போதைய சூழல் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பலவீனமாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரு தரப்புமே ஒரு முழு அளவிலான போரை விரும்புவதாகத் தெரியவில்லை என்றாலும், தீவிரமடைந்துள்ள ராணுவக் குவிப்புகளும், சமரசமற்ற பேச்சுக்களும் தவறு நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன என தெரிவிக்கின்றனர். கடலிலோ, வான்வெளியிலோ அல்லது பிராந்திய பினாமிப் படைகள் மூலமாகவோ ஏற்படும் ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர்.



    ×