என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலார் தகடு"

    • சூரிய சக்தி நிறுவனங்களின் பங்குகள் 14 சதவிகிதம் வரையில் சரிவடைந்து உள்ளன.
    • நியாயமற்ற முறையில் மானியம் வழங்கியதாக கூறி இந்த வரி விதிப்பை அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்து உள்ளது.

    அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா முக்கிய நாடாக உள்ளது. 2025-ம் ஆண்டின் முதல் பாதியில் அமெரிக்காவின் சூரிய சக்தி இறக்குமதியில் இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ் 57 சதவிகிதம் பங்களித்துள்ளன.

    இந்தநிலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலம் மற்றும் தகடுகளுக்கு அமெரிக்கா 126 சதவிகித வரி விதித்துள்ளது. அதேபோல் இந்தோனேசியாவுக்கு 86 முதல் 143 சதவிகிதமும், லாவோஸுக்கு 81 சதவிகிதம் வரையிலும் வரி விதித்து உள்ளது.

    உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமெரிக்கா இந்த வரியை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது உள்நாட்டு உற்பத்திக்கு நியாயமற்ற முறையில் மானியம் வழங்கியதாக கூறி இந்த வரி விதிப்பை அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக அமெரிக்க சூரிய சக்தி உற்பத்தி மற்றும் வர்த்தக கூட்டணியின் முன்னணி வக்கீல் டிம் பிரைட்பில் கூறும்போது, நியாயமற்ற முறையில் வர்த்தகம் செய்யப்படும் இறக்குமதிகள் சந்தையை சிதைக்க அனுமதித்தால் அவை வெற்றிபெற முடியாது என்றார்.

    அதிக வரி விதிப்பால் இந்திய சூரிய மின்சக்தி தகடு உற்பத்தியாளர்களுக்கு அமெரிக்க சந்தை கிடைக்காமல் போகலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அமெரிக்கா வரி விதித்த நிலையில், சூரிய சக்தி நிறுவனங்களின் பங்குகள் 14 சதவிகிதம் வரையில் சரிவடைந்து உள்ளன.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் எட்டப்பட்ட நிலையில் இந்தியாவின் சூரிய சக்தி இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர்.
    • மிதவை படகு எங்கிருந்து வந்தது என்ற தெரியவில்லை.

    சோழிங்கநல்லூர்:

    பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று காலை சோலார் தகடு பொருத்திய சிறிய மிதவை படகு கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் திருவான்மியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து விசாரணை நடத்தினர். அந்த சுமார் 30 அடி நீள முள்ள அந்த மதவையில் 3 சோலார் தகடுகள் இருந்தன. இந்த மிதவை படகு எங்கிருந்து வந்தது என்ற தெரியவில்லை.

    அதனை கடலோர காவல் படையினர் மீன்வளத்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×