search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solar panel"

    • சில விவசாயிகள் இன்று தங்களது விவசாய நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யானார் ஊத்து, வடக்கு செழியநல்லூர் கிராமங்களுக்கு இடையே ஏராளமான விவசாய பட்டா நிலங்கள் உள்ளது.

    இந்த நிலங்களில் திடீரென இரவோடு இரவாக தனியார் நிறுவனம் சார்பில் சோலார் அமைக்கும் பணிகள் தொடங்கியதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்தும் சில விவசாயிகள் இன்று தங்களது விவசாய நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சோலார் பேனல் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான விவசாய நிலங்களிலும், இப்பகுதிகளில் உள்ள சிறு ஒடை, ஊரணிகளை அழித்தும் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை, வருவாய்துறையில் புகார் தெரிவித்தும் அதுகுறித்து நடவடிக்கை இல்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • விடுமுறை மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    தமிழகத்தில், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியைக்கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு அலுவலகங்களில் பகல் நேரங்களில் தினசரி தேவைப்படும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்ப திறன் கொண்ட 'பேனல்' அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

    விடுமுறை நாட்கள் மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை உடுமலை நகரில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக, மின்வாரிய அலுவலக மேற்கூரைகளில், பேனல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்டடங்களிலும் சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது என்றனர்.

    கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் இளைப்பாறும் பகுதிகளில் ‘ஸ்மார்ட் மரங்களை’ மாநகராட்சி நிர்வாகம் நிறுவி வருகிறது. #SmartCity #SmartTrees
    கோவை:

    கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் இளைப்பாறும் பகுதிகளில் ‘ஸ்மார்ட் மரங்களை’ மாநகராட்சி நிர்வாகம் நிறுவி வருகிறது.

    முதல்கட்டமாக வ.உ.சி. மைதான நுழைவுவாயிலில் சுமார் 20 அடி உயரத்தில் தத்ரூபமான மரத்தை வல்லுநர்கள் வடிவமைத்து வருகின்றனர். இரும்பினாலும், வெளிப்புறத்தில் பைபர் பொருட்களாலும் மரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதைச் சுற்றிலும் நிழற்கூரைகள் அமைத்து சுமார் 30 பேர் அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

    முக்கியமாக, இந்த மரத்தில் சோலால் பேனல்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் செல்போன், லேப்டாப் போன்றவற்றுக்கு பயன்படுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க இந்த மரத்தின் மூலம் வை-பை வசதி வழங்கப்பட உள்ளது. மரத்தை சுற்றிலும் 500 மீட்டர் தூரத்துக்கு பொது மக்கள் இலவசமாக வை-பை வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.

    மாநகராட்சியுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் ஜே.சி. மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தினர் கூறுகையில், ரூ.12 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த ‘ஸ்மார்ட் மரம்’ பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தங்க நிறத்திலான இலைகள் கொண்டதாக மரம் வடிவமைக்கப்படுகிறது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட வேண்டும் என்பதால் சினிமா கலை இயக்குனர்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது என்றனர்.

    மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அடுத்ததாக காந்திபுரம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் மக்கள் அதிகம் கூடும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் 25 ‘ஸ்மார்ட் மரங்கள்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி. பூங்கா ஸ்மார்ட் மரம் ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனர். #SmartCity #SmartTrees
    ×