என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோலார் பேனல்"

    • சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.
    • இந்தத் திட்டத்திற்கு ரூ.75,000 கோடிக்கும் அதிகமான நிதியை மந்திரி சபை ஒதுக்கீடு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யா கர்: முப்தி பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.இந்தத் திட்டத்திற்கு ரூ.75,000 கோடிக்கும் அதிகமான நிதியை மந்திரி சபை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இந்நிலையில், 2026-27 ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி சோலார் பேனல்கள் அமைக்க திட்டமிட்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என எரிசக்தி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

    மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியதாவது:

    2026-27-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் பேனல்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சூரிய மின்சக்தியை நிறுவுவதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.

    ஜூன் 30 அன்று, மத்தியப் பிரதேசத்தில் சூரிய சக்தி (5,570 மெகாவாட்), காற்றாலை (3,195.15 மெகாவாட்), உயிரி மின்சாரம் (155.46 மெகாவாட்) மற்றும் நீர் மின்சாரம் (2358.71 மெகாவாட்) போன்ற பல்வேறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மொத்தம் 11,279.39 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.

    சூரிய பூங்காக்கள் மற்றும் அல்ட்ரா-மெகா சூரிய மின் திட்டங்களின் மேம்பாடு திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் 4248 மெகாவாட் திறன் கொண்ட 8 சூரிய மின்சக்தி பூங்காக்களை அமைக்க அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என தெரிவித்தார்.

    • சில விவசாயிகள் இன்று தங்களது விவசாய நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யானார் ஊத்து, வடக்கு செழியநல்லூர் கிராமங்களுக்கு இடையே ஏராளமான விவசாய பட்டா நிலங்கள் உள்ளது.

    இந்த நிலங்களில் திடீரென இரவோடு இரவாக தனியார் நிறுவனம் சார்பில் சோலார் அமைக்கும் பணிகள் தொடங்கியதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்தும் சில விவசாயிகள் இன்று தங்களது விவசாய நிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் சோலார் பேனல் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான விவசாய நிலங்களிலும், இப்பகுதிகளில் உள்ள சிறு ஒடை, ஊரணிகளை அழித்தும் இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் எங்களது விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காவல்துறை, வருவாய்துறையில் புகார் தெரிவித்தும் அதுகுறித்து நடவடிக்கை இல்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
    • மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும்.

    காஞ்சிபுரம்:

    வீடுகளில் சோலார் பேனல் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என காஞ்சிபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொருவர் வீட்டிலும் சோலார் பேனல் அமைத்து பேட்டரிகளில் மின்சாரத்தை சேமிக்க முடியும். மேலும் உபரி மின்சாரத்தை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.15,000 முதல் ரூ.18 ஆயிரம் வரை பெற முடியும். மேலும் இத்திட்டத்தில் இணைவோர்க்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    குறிப்பாக மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யவும் இத்திட்டம் உதவியாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய விரும்புவோர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை அஞ்சல் துறையில் பணியாற்றும் தபால்காரர்களும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பெற உங்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தையோ அல்லது உங்கள் பகுதியில் தினம்தோறும் வரும் தபால்காரரை அணுகி விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பேராவூரணி பகுதியில் சாலையில் அமைக்கப்பட்ட சோலார் சிக்னல் பேனல்கள் திருடப்பட்டுள்ளதை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர் பகுதி, பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள ஆண்டவன்கோவில், கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு, கட்டயங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய சாலை சந்திப்புகளில், விபத்துக்களை தடுக்கும் வகையில், ஆபத்தான இடம் என வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில், சிக்னல் சிவப்பு விளக்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் சோலார் பேனல் அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது.

    இது சூரிய ஒளியை கிரகித்து இரவு, பகல் எந்நேரமும் சிவப்பு விளக்கு விட்டுவிட்டு ஒளிர்கிறது. முக்கியமான நெருக்கடியான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் இதனை கவனித்து வாகனங்களை கவனமுடன் ஓட்டிச் செல்கின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட இந்த சோலார் பேனல்களை பல இடங்களில் மர்மநபர்கள் திருடிச் சென்று விடுகின்றனர். 

    இந்த சோலார் பேனல்களை பயன்படுத்தி தங்கள் வீடுகளுக்கு வேண்டிய மின் விளக்கு வசதிகளை செய்து கொள்ள முடியும் என்பதால் இவற்றை மர்மநபர்கள் திருடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.

    இதனால், பெரும்பாலான இடங்களில் அமைக்கப்பட்ட சிறிது காலத்தில், வெறும் மின் விளக்குகள் மட்டுமே உள்ளன. சோலார் பேனல், அதனுடன் இணைக்கப்பட்ட பேட்டரி அமைப்புகள் திருடப்பட்டுள்ளன.
     
    பேராவூரணி நகரில் பட்டுக்கோட்டை சாலையில், ஆண்டவன்கோவில் பகுதியில் மதுக்கடைகள் அமைந்துள்ள இடத்தில் இவ்வாறு சிக்னல்கள் திருடப்பட்டுள்ளது. 

    பல்வேறு இடங்களில் இதே நிலை தான் உள்ளது. எனவே, “இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்ய வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
    • விடுமுறை மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மடத்துக்குளம் :

    தமிழகத்தில், அரசுத்துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியைக்கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அரசு அலுவலகங்களில் பகல் நேரங்களில் தினசரி தேவைப்படும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்ப திறன் கொண்ட 'பேனல்' அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரம் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.

    விடுமுறை நாட்கள் மற்றும் பயன்பாட்டு திறனுக்கு எஞ்சிய மின்சாரத்தை, மின்வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டத்தை உடுமலை நகரில் அமைந்துள்ள அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக, மின்வாரிய அலுவலக மேற்கூரைகளில், பேனல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு கட்டடங்களிலும் சோலார் பேனல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது என்றனர்.

    • 60 அடி உயரத்தில் இருந்து விழுந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     கோவை:

    சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் நவீன் ராமலிங்கம்(30). இவர் கோவை வடவள்ளியில் உள்ள நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி புனிதா (29) சத்தியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், நவீன் ராமலிங்கம் நேற்று முன்தினம் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள சோலார் பேனலை ஆய்வு செய்ய சென்றார். அப்போது சுமார் 60 அடி உயர மேற்கூரையில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நவீன் மனைவி புனிதா மருத்துவமனை நிர்வாகம் மீது ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் இளைப்பாறும் பகுதிகளில் ‘ஸ்மார்ட் மரங்களை’ மாநகராட்சி நிர்வாகம் நிறுவி வருகிறது. #SmartCity #SmartTrees
    கோவை:

    கோவை மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் இளைப்பாறும் பகுதிகளில் ‘ஸ்மார்ட் மரங்களை’ மாநகராட்சி நிர்வாகம் நிறுவி வருகிறது.

    முதல்கட்டமாக வ.உ.சி. மைதான நுழைவுவாயிலில் சுமார் 20 அடி உயரத்தில் தத்ரூபமான மரத்தை வல்லுநர்கள் வடிவமைத்து வருகின்றனர். இரும்பினாலும், வெளிப்புறத்தில் பைபர் பொருட்களாலும் மரம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. அதைச் சுற்றிலும் நிழற்கூரைகள் அமைத்து சுமார் 30 பேர் அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.

    முக்கியமாக, இந்த மரத்தில் சோலால் பேனல்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் செல்போன், லேப்டாப் போன்றவற்றுக்கு பயன்படுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு இலவச இணைய சேவை வழங்க இந்த மரத்தின் மூலம் வை-பை வசதி வழங்கப்பட உள்ளது. மரத்தை சுற்றிலும் 500 மீட்டர் தூரத்துக்கு பொது மக்கள் இலவசமாக வை-பை வசதியை பெற்றுக் கொள்ள முடியும்.

    மாநகராட்சியுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வரும் ஜே.சி. மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தினர் கூறுகையில், ரூ.12 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த ‘ஸ்மார்ட் மரம்’ பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தங்க நிறத்திலான இலைகள் கொண்டதாக மரம் வடிவமைக்கப்படுகிறது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட வேண்டும் என்பதால் சினிமா கலை இயக்குனர்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது என்றனர்.

    மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், அடுத்ததாக காந்திபுரம், உக்கடம் பஸ் நிலையங்களிலும் மக்கள் அதிகம் கூடும் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் 25 ‘ஸ்மார்ட் மரங்கள்’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வ.உ.சி. பூங்கா ஸ்மார்ட் மரம் ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனர். #SmartCity #SmartTrees
    ×