என் மலர்
நீங்கள் தேடியது "Electricity"
- இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் செல்போன் பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார ஒயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக கட் செய்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் தனது காதலியை அடிக்கடி சந்திக்க ஒட்டுமொத்த கிராமத்தின் மின்சாரத்தை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டுபிடித்த கிராம மக்கள் அந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
- விஜய் கார்த்திக் ஜாலியாக பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உறவினர் வீட்டில் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும் போது, டிரான்ஸ்ஃபார்மரின் மீது விழுந்த ஷட்டில் கார்க்கை எடுக்க முயற்சித்த போது 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது பெற்றோர் உடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
- தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
- அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலுக்காக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
தேர்தலை ஒட்டி பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவேன் என்றும் வாக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில்,பீகார் மாநிலத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
- சூறைகாற்றிற்கு கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
- தக்கலை, குழித்துறை, இரணியில் பகுதிகளிலும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியை செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று ராட்சத அலைகள் எழும்பியது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். மழை பெய்து கொண்டே இருந்தது. சூறைக்காற்றும் வீசியது. சூறை காற்றிற்கு கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
நாகர்கோவில் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்தது. மீனாட்சிபுரம் பகுதிகளில் நேற்று இரவு முதலே மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இறச்சகுளம், நாவல்காடு, ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி பகுதிகளிலும் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியது.

ஈத்தாமொழி அருகே சுண்டபற்றிவிளை பிலா விளை பகுதியில் 2 மரங்கள் வீட்டின் மீது முறிந்து விழுந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த கணவன்-மனைவி இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து வீட்டுக்குள் தவித்த கணவன்-மனைவி இருவரும் மீட்கப்பட்டனர். நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.
குலசேகரம், குழித்துறை, குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்களும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். கொட்டாரம் அருகே சந்தையடி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
சாமிதோப்பு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இன்று காலையில் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது.

தக்கலை, குழித்துறை, இரணியில் பகுதிகளிலும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. குழித்துறை அருகே சென்னித்தோட்டம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. பத்து காணி, ஆறு காணி உள்பட மலையோர பகுதியிலும் விரிகோடு, சரல் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டனர். மின் கம்பங்களை சீர் செய்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை வழங்க துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். மழைக்கு ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் நேற்று மேலும் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
திருவட்டார் அருகே ஆற்றூர் பேரூராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட ஆக்கவிளை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் நின்ற 2 அயனிமரம், 1 பனைமரம் முறிந்து விழுந்தது. அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்மந்தமாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை வெட்டி அகற்றினார்கள். அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும் இரவு பெய்த மழையில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே அந்த பகுதியினர் மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து உடனே புதிய மின்கம்பம் அமைத்தனர். தொடர்ந்து இரவே மின்சாரம் வினியோக்கப்பட்டது. இதேபோல் திருவட்டார், குலசேகரம், திருவரம்பு போன்ற பகுதிகளில் வீசிய காற்றால் மரங்கள் முறிந்து சாய்ந்தன. தொடர் மழை பெய்து வருவதால் ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது.
- தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது.
- கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது.
சென்னை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் தேவை 22,000 மெகா வாட்டை தாண்டும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதைப் பூா்த்தி செய்ய ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6,000 மெகாவாட் மின்சாரம் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து யூனிட் ஒன்று ரூ.9-க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது. மின் தேவையை மின்வாரியம் முறையாகக் கையாண்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தது.
கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது தொடா்ச்சியாக கோடை மழை பெய்து வருவதால், பல இடங்களில் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக தினசரி மின்தேவை 17,000 முதல் 18,000 மெகாவாட்டாக குறைந்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்தேவை இனி அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும், இதனால் தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
- மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், குல்லா தாண்டாவை சேர்ந்தவர் பிரகலாதன். இவரது மனைவி சங்க பாய் (36). தம்பதிக்கு ஒரு மகன், 2 மகள்கள் இருந்தனர். இவர்களது இளைய மகள் ஸ்ரீ வாணி (12). மூத்த மகள் ஐதராபாத்தில் படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பிரகலாதன் ஐதராபாத் சென்றார். நேற்று இரவு சங்க பாய் தனது மகள், மகனுடன் ஏர்கூலரை ஆன் செய்து வைத்துவிட்டு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ரீவாணியின் கால்கள் ஏர் கூலர் மீது பட்டது. ஏர் கூலரில் இருந்து ஸ்ரீவாணி மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் தனது தாய் மீது கை வைத்து தூங்கிக்கொண்டு இருந்ததால் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சிறிது தூரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவர்களது மகன் அதிகாலை எழுந்து பார்த்த போது தாயும், சகோதரியும் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது பிணங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்னுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின் கம்பி ஒன்று சாலையில் அறுந்து கிடந்துள்ளது.
- வயலுக்கு சென்ற சுப்பிரமணியன் அதை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பரவாக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன்.
கடந்த சில தினங்களாக மன்னார்குடி சுற்றுவட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுப்ரமணியன் தனது வயலில் தேங்கிய மழை நீரை வடிய வைப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது வயல் அருகே சென்ற மின் கம்பி ஒன்று சாலையில் அறுந்து கிடந்துள்ளது.
சுப்பிரமணியன் எதிர்பாராத விதமாக மின் கம்பியை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பரவாக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து சுப்பிரமணியன் உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் பரவாக்கோட்டை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகம்.
தரங்கம்பாடி:
செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் 33/11 கேவி துணை மின் நிலையம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கூடுதலாக மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேற்படி துணை மின் நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் திறன் மின்மாற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி துணை மின் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மின்வாரிய நாகை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சசிதரன் தலைமை தாங்கினார். சீர்காழி கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடு துறை எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கூடுதல் திறன் மின்மாற்றியை இயக்கி வைத்து பேசினர்.
தற்போது செம்பனார்–கோயில் பிரிவிற்குட்பட்ட கீழ்மாத்தூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், மேமாத்தூர் ஊராட்சி தலைவர் தெட்ஷிணாமூர்த்தி, மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- புதுவை உருளையன்பேட்டை தொகுதி திடீர் நகர் பகுதியில் பட்டியல் இன மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நடத்தப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து திடீர் நகர் பகுதி மக்களின் முதல் கோரிக்கையான தெரு விளக்கு பட்டியல் அணி சார்பில் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொகுதி திடீர் நகர் பகுதியில் பட்டியல் இன மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நடத்தப்பட்டது.
நகர் மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில தலைவர் தமிழ்மாறன் மக்களோடு கலந்துரையாடி மக்களின் குறைகளை கேட்டார்.
இதனைத் தொடர்ந்து திடீர் நகர் பகுதி மக்களின் முதல் கோரிக்கையான தெரு விளக்கு பட்டியல் அணி சார்பில் வழங்கப்பட்டது. மாநிலத் தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் மோகன் குமார், பட்டியல் அணியின் மாநில தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் தெருவிளக்குகளை திடீர் நகர் பகுதி மக்களிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் போது மகேஸ் ரெட்டி ரஞ்சித், மாநில பட்டியல் அணி துணைத்தலைவர்கள் எஸ்.கே.சி. கஜேந்திரன், ராஜேஸ்வரி, செயற்குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, காமாட்சி சிறப்பு அழைப்பாளர் குணாளன், உழவர்கரை மாவட்ட தலைவர் ராஜகுரு அம்பேத்கர், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது.
- நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை
திருப்பூர் :
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், தலைவர் பழனிசாமி தலைமையில் சோமனூரில் நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், விசைத்தறிக்கான 3 ஏ 2 டேரிப் மின் கட்டணத்தை உயர்த்தியது. கடந்த மூன்று மாதங்களாக, ஆணைய தலைவர், அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து மின் கட்டண விலக்கு அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. தொழில் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அரசு உடனடியாக மின் கட்டண குறைப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
சாதா விசைத்தறிகளுக்கு 750 யூனிட் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை வரும் காலங்களில் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். கட்டணம் குறைக்கப்படும் வரை, மின் கட்டணம் செலுத்துவதில்லை என முடிவு செய்து 70 நாட்கள் ஆகியுள்ளது. நல்ல அறிவிப்பு வரும் வரை மின் கட்டணத்தை கட்டுவது இல்லை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.
- 11 மின்கம்பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைக்கும் பணி.
சீர்காழி:
சீர்காழி வட்டத்தில் கடந்த 11ஆம் தேதி பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டு வேட்டங்குடி கிராமத்தை சூழ்ந்திருந்ததால் கிராம மக்கள் அவதி அடைந்து வந்தனர். கொள்ளிடம் பகுதியில் உள்ள அனைத்து சம்பா நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் நெற் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கின. வேட்டங்குடி ஊராட்சி மிகவும் தாழ்வான பகுதியில் இருப்பதால் அங்குள்ள ஜீவா நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் குடிசை வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் கிராம மக்கள் நிலை குலைந்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பாக முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டு பின்னர் தண்ணீர் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பினர்.
ஜீவா நகரில் பழமையான மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது.இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் தொடர்ந்து விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டதால் அங்குள்ள வர்கள் அவதி அடைந்து வந்தனர்.
வெள்ளம் பாதித்த கொள்ளிடம் பகுதிகளை சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கடந்த 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கிராமப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நடவடிக்கையை மேற்கொ ண்டு வந்தார்.
அப்போது வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஜீவாநகரில் உள்ள குடியிருப்புகளை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அங்குள்ளவர்கள் அப்பகுதியில் உள்ள பழமையான 5 மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று அமைச்சரிடம் நேரில் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் அமைச்சரோ அப்பகுதியில் உள்ள அனைத்து பழமையான மின்கம்பங்களையும் உடனடியாக அகற்றுவதற்கு மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு நேரில் வரவழைத்து கிராம மக்கள் கேட்ட 5 மின் கம்பங்கள் மேலும் 6 மின்கம்பங்கள் உள்ளிட்ட 11 மின்கம்பங்கள் ஜீவா நகரில் நடப்பட்டு, மின் கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டார்.
அதன்பேரில் ஒரே நாளில் புதன்கிழமை ஜீவா நகரில் 11 மின்கம்பங்கள் புதியதாக நடப்பட்டு புதியதாக மின் கம்பிகளும், மின்விளக்குகளும் பொறுத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டன. இதனால் ஜீவா நகர் இரவு நேரங்களில் பகலை போன்று காட்சியளிக்கின்றன.
மக்கள் கோரிக்கையை ஏற்று புதியதாக 5 மின்கம்பங்களுக்கு பதிலாக 11 மின்கம்பங்களை அமைத்துக் கொடுத்து மின்விளக்குகளை புதியதாக பொருத்தி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்த அமைச்சர் மெய்யநாதனுக்கு அப்பகுதி ஒன்றியக் குழுஉறுப்பினர் அங்குதன் மற்றும் ஜீவா நகர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- அரசாயி அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
- அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார்.
கடலூர் :
வடலூர் அருகே பெரிய கோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அரசாயி (வயது 40) இந்நிலையில் நேற்று மாலை அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாட்டின் கன்று குட்டி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கன்று குட்டியை பிடிக்க அரசாயி சென்றார்.
அப்போது வயல்வெளியில் அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசாயி உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






