என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கம்பங்கள் சேதம்"

    • சூறைகாற்றிற்கு கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
    • தக்கலை, குழித்துறை, இரணியில் பகுதிகளிலும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியை செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இன்று ராட்சத அலைகள் எழும்பியது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். மழை பெய்து கொண்டே இருந்தது. சூறைக்காற்றும் வீசியது. சூறை காற்றிற்கு கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    நாகர்கோவில் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்தது. மீனாட்சிபுரம் பகுதிகளில் நேற்று இரவு முதலே மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இறச்சகுளம், நாவல்காடு, ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி பகுதிகளிலும் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியது.


    ஈத்தாமொழி அருகே சுண்டபற்றிவிளை பிலா விளை பகுதியில் 2 மரங்கள் வீட்டின் மீது முறிந்து விழுந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த கணவன்-மனைவி இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.

    இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து வீட்டுக்குள் தவித்த கணவன்-மனைவி இருவரும் மீட்கப்பட்டனர். நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.

    குலசேகரம், குழித்துறை, குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்களும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். கொட்டாரம் அருகே சந்தையடி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    சாமிதோப்பு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இன்று காலையில் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது.


    தக்கலை, குழித்துறை, இரணியில் பகுதிகளிலும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. குழித்துறை அருகே சென்னித்தோட்டம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. பத்து காணி, ஆறு காணி உள்பட மலையோர பகுதியிலும் விரிகோடு, சரல் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டனர். மின் கம்பங்களை சீர் செய்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை வழங்க துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். மழைக்கு ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் நேற்று மேலும் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.

    திருவட்டார் அருகே ஆற்றூர் பேரூராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட ஆக்கவிளை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் நின்ற 2 அயனிமரம், 1 பனைமரம் முறிந்து விழுந்தது. அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்மந்தமாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை வெட்டி அகற்றினார்கள். அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும் இரவு பெய்த மழையில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே அந்த பகுதியினர் மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து உடனே புதிய மின்கம்பம் அமைத்தனர். தொடர்ந்து இரவே மின்சாரம் வினியோக்கப்பட்டது. இதேபோல் திருவட்டார், குலசேகரம், திருவரம்பு போன்ற பகுதிகளில் வீசிய காற்றால் மரங்கள் முறிந்து சாய்ந்தன. தொடர் மழை பெய்து வருவதால் ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது.

    • அடையாளம் தெரியாத லாரி ஒன்று சாலையோரத்தில் இருந்த கேபிள் மற்றும் 2 கம்பங்களும் உடைந்து வேப்பனப்பள்ளி பேரிகை சாலையில் முறிந்து விழுந்தது.
    • கம்பங்கள் அகற்றபடமால் சாலையில் கிடந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கடவரப்பள்ளி கிராமத்தின் சாலையோரங்களில் தனியார் நிறுவனத்தின் கேபிள்கள் கம்பங்கள் அமைக்கப்பட்டுருந்தது.

    இந்த நிலையில் அப்பகுதி வழியாக சென்ற அடையாளம் தெரியாத லாரி ஒன்று சாலையோரத்தில் இருந்த கேபிள் மற்றும் 2 கம்பங்களும் உடைந்து வேப்பனப்பள்ளி பேரிகை சாலையில் முறிந்து விழுந்தது.

    இதனால் இரவு முதல் ஆபத்தான முறையில் சாலையில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தும் நாள் முழுவதும் கம்பங்கள் அகற்றபடமால் சாலையில் கிடந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.

    மேலும் கேபிள் நாள் முழுவதும் சாலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சப்பட்டு பயணம் செய்து வருகின்றனர்.

    உடனடியாக தனியார் நிறுவன ஊழியர்கள் உடைந்த கம்பங்களை சாலையில் இருந்து அகற்றி கம்பங்களையும் கேபி ள்களையும் பாதுகப்பாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சாலையில் உடைந்த விழுந்த கேபிள் கம்பங்த்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    • இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.
    • ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

    திண்டுக்கல்:

    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையிலும் நேற்று மாலை முதலே இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.

    திண்டுக்கல் மட்டுமின்றி கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    நேற்று மாலையில் தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர்.

    அதேபோல் இன்று காலையிலும் குடைபிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் சிரமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதேபோல் அன்றாட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


    கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் நீடித்து வந்த நிலையில் தற்போது பனி மற்றும் மழையும் சேர்ந்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது.

    சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.

    இதனால் ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணத்தால் பெரும்பாறை அருகே உள்ள மூலக்கடை-புல்லாவெளி இடையே இஞ்சோடை என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் அதிகாலை சுமார் 4 மணி அளவில் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் மின் கம்பத்தை அகற்றினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. ஆனால் மீண்டும் மின்சாரம் வராததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திண்டுக்கல் 7.40, காமாட்சிபுரம் 13.80, நத்தம் 6, நிலக்கோட்டை 6.20, சத்திரப்பட்டி 12.40, வேடசந்தூர் 11.20, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 11, பழனி 6, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 28.50, பிரையண்ட் பூங்கா 28 என மாவட்டத்தில் இன்று காலை வரை 130.50 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. 

    • போக்குவரத்து பாதிப்பு

    சோளிங்கர்:

    சோளிங்கர் வாலாஜா நெடுஞ்சாலையில் புத்தேரி அருகே நெடுஞ்சாலை ஓரமாக இருந்த பழமை வாய்ந்த புளியமரம் கிளை ஒன்று திடீரென முறிந்து அப்பகுதியில் நின்ற மின்கம்பம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 மின்கம்பம் தேசமடைந்து நெடுஞ்சாலை குறுக்கே விழுந்தது.

    இதனால் சோளிங்கர் வாலாஜா போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மின்துறை ஊழியர்கள் மின் இணைப்பு துண்டித்தனர். நெடுஞ்சாலை ஆய்வாளர் தேவேந்திரன் தலைமையிலான பணியாளர்கள் விபத்துக்குள்ளான புளியமரக்கிளையை அகற்றினார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×