என் மலர்
நீங்கள் தேடியது "Trees uprooted"
- மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கரையோர மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
- மின்கம்பங்கள் சாய்ந்ததால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது.
அதன்படி, நேற்று இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக ரீமால் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110- 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.
ரீமால் புயல் கோரத்தாண்டவத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கரையோர மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
வங்காளத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்தது. புயல் காரணமாக அங்கு குறைந்தது 3 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. கனமழை எதிரொலியால் வீடுகள் மற்றும் பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கின.
முன்னதாக, மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தில் புயல் கரையோரப் பகுதிகளைத் தாக்கியதால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
பலத்த காற்று மற்றும் கனமழையால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
மேற்கு வங்காள மின்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸின் கூற்றுப்படி, "புயல் எதிரொலியால் ஏற்பட்ட நிலச்சரிவில் முதல் ஒரு மணி நேரத்தில் குறைந்தது 356 மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. பல மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன" என்றார்.
சூறாவளி வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களில் ஓலை வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.
தொடர்ந்து, சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
- மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஊட்டி:
தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், நடுவட்டம், தேவர்சோலை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது. சிறிது நேரத்திற்கு பிறகு மழை நின்றது.
தொடர்ந்து நேற்று அதிகாலை மீண்டும் கனமழை பெய்தது. இந்த மழையால், தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட குற்றிமுச்சு வழியாக ஓடும் மாயாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வழியாக செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் மேல் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழை பெய்து கொண்டே இருந்ததால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது. அப்பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் பொது மக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சி பகுதியில் ஆருற்றுப்பாறை மற்றும் மரப்பாலம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் சுண்ணாம்பு பாலம் பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. அப்பகுதியில் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது.
மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஓவேலி பேரூராட்சி பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதியே இருளில் மூழ்கி மக்கள் கடும் அவதியடைந்தனர்.
ஆமைக்குளம் பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவரின் கடையின் மீது மண்சரிந்து கடை முழுவது மாக சேதம் அடைந்தது. வழக்கமாக இரவில் விஜய குமாரின் தந்தை கடையில் தங்குவார். சம்பவத்தன்று அவர் வீட்டிற்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கொட்டி தீர்த்த கன மழைக்கு தொரப்பள்ளியை அடுத்த எரிவயல் கிராம த்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சில வீடுகளுக்குள் தண்ணீரும் புகுந்தது. குடியி ருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பந்தலூரில் பெய்த மழைக்கு சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரம்பாடி, பாலபாடி வளவில் கூலித்தொழிலாளி முனியப்பன் என்பவரது வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை யுடன் சூறவாளி காற்றும் வீசியது. இதனால் ஆங்கா ங்கே சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதனை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறியதாவது:-
கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கொட்டி தீர்த்த மழைக்கு 16 இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. 56 இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அவை அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்துத்துறை அலுவலா்களும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் இருக்குமாறு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.
கூடலூா் வருவாய் கோட்டத்தில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை பணியாளா்கள் அனைத்து பகுதியிலும் களத்தில் உள்ளனா். பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட 24 மணி நேரமும் தயாா் நிலையில் உள்ளனா்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.
- ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
திண்டுக்கல்:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையிலும் நேற்று மாலை முதலே இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.
திண்டுக்கல் மட்டுமின்றி கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நேற்று மாலையில் தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர்.
அதேபோல் இன்று காலையிலும் குடைபிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் சிரமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதேபோல் அன்றாட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் நீடித்து வந்த நிலையில் தற்போது பனி மற்றும் மழையும் சேர்ந்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது.
சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணத்தால் பெரும்பாறை அருகே உள்ள மூலக்கடை-புல்லாவெளி இடையே இஞ்சோடை என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் அதிகாலை சுமார் 4 மணி அளவில் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் மின் கம்பத்தை அகற்றினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. ஆனால் மீண்டும் மின்சாரம் வராததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் 7.40, காமாட்சிபுரம் 13.80, நத்தம் 6, நிலக்கோட்டை 6.20, சத்திரப்பட்டி 12.40, வேடசந்தூர் 11.20, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 11, பழனி 6, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 28.50, பிரையண்ட் பூங்கா 28 என மாவட்டத்தில் இன்று காலை வரை 130.50 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.






