search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyclone Remal"

    • மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கரையோர மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
    • மின்கம்பங்கள் சாய்ந்ததால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே ரீமால் புயல் கரையை கடந்தது.

    அதன்படி, நேற்று இரவு 10.30 மணி முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக ரீமால் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110- 120 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியுள்ளது.

    ரீமால் புயல் கோரத்தாண்டவத்தால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கரையோர மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

    வங்காளத்தின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்தது. புயல் காரணமாக அங்கு குறைந்தது 3 பேர் இறந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. கனமழை எதிரொலியால் வீடுகள் மற்றும் பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கின.

    முன்னதாக, மேற்கு வங்கம் மற்றும் வங்காளதேசத்தில் புயல் கரையோரப் பகுதிகளைத் தாக்கியதால் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

    பலத்த காற்று மற்றும் கனமழையால் மின்கம்பங்கள் சாய்ந்ததால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    மேற்கு வங்காள மின்துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸின் கூற்றுப்படி, "புயல் எதிரொலியால் ஏற்பட்ட நிலச்சரிவில் முதல் ஒரு மணி நேரத்தில் குறைந்தது 356 மின் கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. பல மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன" என்றார்.

    சூறாவளி வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாபூர் மாவட்டங்களில் ஓலை வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன.

    தொடர்ந்து, சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.
    • கொல்கத்தாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில், இன்று இரவு மேற்கு வங்காளம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது.

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயலை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    • மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.
    • புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும்.

    வங்கக்கடலில் உருவான ரீமால் புயல், அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் இன்று இரவு மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயல் நெருங்கி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்க தேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 130 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கதேச கடலோர மாவட்டங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு பெரும் அபாய சமிக்ஞை எண். 10 ஒலிக்கப்பட்டுள்ளது. அங்கு மீன்பிடி படகுகள், இழுவை படகுகள் மற்றும் கப்பல்கள் மறு அறிவிப்பு வரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வங்கதேச மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைச்சர் எம்.டி. மொஹிபுர் ரஹ்மான் சின்ஹுவாவிடம் கூறுகையில், "பத்து மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் இருந்து குறைந்தது 8,00,000 பேர் ஏற்கனவே தங்குமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றார்.

    மேலும், அங்கு கனமழை எதிரொலியால் கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    • நாளை காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.
    • கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயல், வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.

    இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மதியம் 12 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை 21 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தப்படுகிறது.

    கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    • ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றது.
    • சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும்.

    மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டு இருந்தது.

    அது நேற்று வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்றது. இதற்கு 'ரீமால்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த புயல் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.

    ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் தீவிர புயலாக வலுவடையும்.

    இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×