search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolkata airport"

    கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தபோது தண்ணீர் லாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. #QatarAirwaysPlane #KolkataAirport
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று  103 பயணிகளை ஏற்றிக்கொண்டு தோகாவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

    அப்போது தண்ணீர் லாரி ஒன்று விமானத்தின் லேன்டிங் கியர் அருகில் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் வயிற்றுப்பகுதியில் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான விமானம் புறப்படாது என்று அறிவிக்கப்பட்டு, பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் லாரியின் பிரேக் சரியாக வேலை செய்யாததால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    103 பயணிகள் அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 3 மணிக்கு தோகா புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பறப்பதற்கு சற்றுமுன் இந்த விபத்து ஏற்பட்டதால் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். #QatarAirwaysPlane #KolkataAirport
    கொல்கத்தாவில் உள்ள பிரபல உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் கிலோ சாக்லேட்டால் ஆன துர்கா தேவி சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. #KolkataHolidayInn #chocolateMaaDurga #1000kgchocolate
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை  மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது. 

    இதை தொடர்ந்து மேற்கு வங்காளம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வகைவகையான பந்தல்கள் அமைக்கப்பட்டு, துர்கா தேவியின் சிலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    காய்கறிகளினால் ஆன துர்கா சிலை, சோளத்தால் ஆன துர்கா சிலை என ஒவ்வொருவரும் தனிபாணியில் சிலைகளை அமைத்துள்ளனர். அவ்வகையில், தலைநகர் கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமைந்திருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள 10 அடி உயரத்தில் ஆயிரம் கிலோ சாக்லேட்டால் ஆன துர்கா தேவி சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    வெந்நிற சாக்லேட்டால் ஆன இந்த சிலையை உருவாக்க அந்த ஓட்டல் பணியாளர்கள் 12 நாட்கள் உழைத்ததாக தெரியவந்துள்ளது. #KolkataHolidayInn  #chocolateMaaDurga #1000kgchocolate
    ×