என் மலர்

    நீங்கள் தேடியது "chocolate"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
    • வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    மும்பை:

    கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று 'சாக்லேட்' அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

    கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

    அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாக்லேட் கோகோ பீன்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
    • டார்க் சாக்லெட் மற்ற சாக்லெட் வகைகளை விட சர்க்கரை குறைவாக இருக்கும்

    உலகம் எங்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவுப்பொருட்களில் ஒன்றாக சாக்லெட் விளங்குகிறது. இது கோகோ பீன்சில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் சாக்லெட்டில் பிளாவனாய்டுகள், காபின், தியோ புரோமைன் உள்ளிட்ட உடலுக்கு நன்மை சேர்க்கும் சேர்மங்களும் கலந்துள்ளன. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாக்லெட் சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது. சாக்லெட்டின் வகையும், அவரவரின் தனிப்பட்ட ஆரோக்கியமும்தான் அதனை தீர்மானிக்கும்.

    ஏனெனில் டார்க் சாக்லெட்டை பொறுத்தவரை மற்ற சாக்லெட்டுகளை விட ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் அதிக கோகோ உள்ளடங்கி இருக்கும். மற்ற சாக்லெட் வகைகளை விட சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதுதான் அதற்கு காரணம்.

    எந்த நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி உடலுக்கு கூடுதல் எனர்ஜி கொடுக்க உதவும். அதேவேளையில் டார்க் சாக்லெட் சிலருக்கு செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் டார்க் சாக்லெட் சாப்பிடக்கூடாது.

    டார்க் சாக்லெட்டை ஒப்பிடும்போது மில்க் சாக்லெட் மற்றும் ஒயிட் சாக்லெட் இவை இரண்டும் ஆரோக்கியம் குறைவானவை. இவற்றில் சர்க்கரை அதிகம் கலந்திருக்கும். கோகோ குறைவாகவே இருக்கும். வெறும் வயிற்றில் இந்த இரண்டு சாக்லெட்டுகளையும் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

    நீரிழிவு மற்றும் ரத்த சர்க்கரையுடன் தொடர்புடைய நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மற்றவர்கள் இந்த சாக்லெட்டுகளை குறைவாக சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதோடு குமட்டல், செரிமான கோளாறு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் பருகிவிட்டு அதன் பிறகு சாக்லெட் சாப்பிடுவது சிறந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் பான்கேக்
    • விடுமுறை நாட்களில் உங்கள் குழந்தைகளிடம் செய்து அசத்துங்கள்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை மாவு- கால் கப்

    நாட்டு சர்க்கரை கால் கப்

    கோகோபவுடர்- 3 ஸ்பூன்

    பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்

    பேக்கிங் பவுடர்-அரை ஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    வெண்ணிலா எசன்ஸ்- கால் டீஸ்பூன்

    பால்- 100 கிராம்

    முட்டை-1

    சாக்லேட் சிரப்- ஒரு ஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நாட்டுசர்க்கரை, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் பால் மற்றும் வெண்ணிலா எசன்ஸ், சாக்லேட் சிரப், உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து கலக்கி எடுத்துக்கொள்ளவும்.

    இந்த கலவையை மாவுக்கலவையுடன் சேர்த்து கெட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலந்து எடுக்கவும். கட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக்கொள்ளவும். சாக்லேட் சிப்ஸ் (விரும்பினால்) இருந்தால் சேர்த்துக்கொள்ளவும்.

    பின்னர் இந்த கலவையை தோசை தவாவில் வெண்ணெய் அல்லது நெய் தடவி பான் கேக் ஊற்றி 2 நிமிடத்திற்கு பிறகு திருப்பி போட்டு எடுக்கவும். நீங்கள் விரும்பினால் பான் கேக் மீது சாக்லேட் சிரப்பை ஊற்றி பரிமாறலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஸ்கூலுக்கு ஸ்நாக் பாக்சை நிறப்புவதற்கும், ஈவ்னிங் ஸ்நாக்காக கொடுப்பதற்கும் ஏற்றது.

    சாக்லேட் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் சாக்லேட் பான் கேக் என்றால் விடவா போகிறார்கள். வித்தியாசமாக செய்து அசத்துங்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
    • முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள முதலை பண்ணையில் 13 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 7 முதலை குட்டிகள் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா கால கட்டத்தில் பிறந்தவை ஆகும்.

    இந்த 7 முதலைகளின் 3-வது பிறந்தநாள் விழாவை கிண்டி பூங்காவில் கொண்டாட அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதையொட்டி முதலைகைள பார்வையிட வந்த பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து விருந்து அளிக்கப்பட்டது. மேலும் முதலைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இது குறித்து கிண்டி பூங்கா அதிகாரி அறிவழகன் கூறும்போது, கடந்த 1993-ம் ஆண்டு ஒடிசாவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் 6 முதலகைள் கொண்டு விடப்பட்டது. ஆனால் அவை எதிர்பார்த்த இன பெருக்கம் செய்யவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில் 24 முட்டைகளில் இருந்து முதலைக்குட்டிகள் பொறித்தன. இதில் பலவீனமாக இருந்த முதலைக்குட்டிகள் ஒவ்வொன்றாக இறந்தன. தற்போது 7 முதலைக் குட்டிகள் உள்ளன. இதன் 3-வது பிறந்த நாளையொட்டி பார்வையாளர்களுக்கு சாக்லேட் கொடுத்து கொண்டாடினோம். முதலைகளுக்கு மீன்கள் வழங்கப்பட்டன. பார்வையாளர்களுக்கு முதலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீண்டும் சாப்பிட தூண்டும் சாக்லெட்டும் போதைதான் என விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார்.

    சிவகாசி,

    சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியின் தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம், பெண்கள் முன்னேற்ற அமைப்பு பகுதி -5, நுண்கலைகள் குழு ஆகிய அமைப்புகள் இணைந்து போதைப்பொருள் விழிப்பு ணர்வு கருத்தரங்கை நடத்தின.

    கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வேதியியல் துறை உதவிப்பேராசிரியர் நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும்போது கூறிய தாவது:-

    போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள், போதைப் பொருட்களின் வகைகள், அவற்றின் தீமைகள், அதற்கு மருந்து எடுத்துக் கொண்டால் அதுவும் போதைதான். நாம் சாப்பிடும் சாக்லேட் வகைகளை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டுவதும் ஒரு வகை போதைதான்.

    போதைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தினால் சரிவர உணவு உண்ண முடியாது. மனச்சோர்வு ஏற்படும். ஞாபக மறதி உண்டாகும். பயம் ஏற்படும். உடல் மெலியும், குடல்புண், வாய்ப்புண் ஆகியவை உண்டாகும் நாளடைவில் மிகப்பெரிய மனநோயாளியாக மாற்றும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவர் பாண்டிக்குமார். வரவேற்றார். தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பரபாரதி அறிமுகவுரையாற்றினார். முடிவில் இளங்கலைத் தமிழ் 3-ம் ஆண்டு மாணவர் சிவகணேஷ் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழியல் துறை தலைவர் அமுதா, பெண்கள் முன்னேற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரூபாதேவி. பகுதி-5 குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி ஆகியோர் செய்திருத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூடுமானவரை பிரிட்ஜ் பிரீசரில் சாக்லேட் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
    • வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் சாக்லேட்டை பாதுகாக்கக்கூடாது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பலகார பொருட்களுள் சாக்லேட்டுக்கு தனி இடமுண்டு. சாக்லேட்டை வாங்கி வந்த உடனேயே சாப்பிட்டுவிடுவார்கள். அதிக நேரம் வைத்திருந்தால் பிசுபிசு தன்மைக்கு மாறி விடுவதே அதற்கு காரணம்.

    அதனை தவிர்க்க நிறைய பேர் பிரிட்ஜில் உள்ள பிரீசரில் சேமித்து வைத்து ருசிப்பார்கள். அப்படி அதிக நேரம் சாக்லேட்டை குளிர்ச்சி நிலையில் வைத்திருந்து உடனே சாப்பிடுவது நல்லதல்ல. சாக்லேட்டுகள் விரைவில் கெட்டுப்போகாது. ஒருசில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சாக்லேட்டை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பாக வைத்திருந்து ருசிக்கலாம்.

    இருள் சூழ்ந்த இடத்தில் சாக்லேட்டை வைத்திருப்பது நல்லது. அந்த இடம் ஈரப்பதம் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால், சாக்லேட்டுக்குள் உள்ளடங்கி இருக்கும் கொக்கோ, சர்க்கரை இரண்டும் தனியாக பிரிந்து விடும். திறந்து மூடும் வகையிலான டிராயர்கள், அலமாரிகளில் சாக்லேட்டை வைக்கலாம். குளிர்ச்சியான இடமும் சாக்லேட்டுக்கு உகந்தது. பிரிட்ஜில் வைத்திருந்தால் அதனை வெளியே எடுத்து குளிர்த்தன்மை நீங்கிய பிறகு சாப்பிடுவது நல்லது.

    சாக்லேட்டை அதிக மணம் கொண்ட பொருளோடு சேர்த்து வைக்கக்கூடாது. ஏனென்றால் அந்த பொருட்களின் வாசனையை சாக்லேட் உறிஞ்சி விடும். குறிப்பாக பிரிட்ஜுக்குள் சாக்லேட்டையும், வாழைப்பழத்தையும் ஒன்றாக வைத்திருந்தால் சாக்லேட் சாப்பிடும்போது பழத்தின் வாசனை எட்டிப்பார்க்கும்.

    கூடுமானவரை பிரிட்ஜ் பிரீசரில் சாக்லேட் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு வைத்தால் சாக்லேட் கடினமாகிவிடும். அதன் சுவையும் குறைந்துவிடும். அதேபோல் வெதுவெதுப்பான சூழ்நிலையிலும் சாக்லேட்டை பாதுகாக்கக்கூடாது. அப்படி வைத்திருந்தால் விரைவாகவே கரைந்து போய்விடும்.

    கொக்கோவின் சுவையையும் இழக்க நேரிடும். கொக்கோ கரைய தொடங்கிவிட்டாலே அதன் மேல் வெண்மை நிறத்தில் அடுக்கு உண்டாகிவிடும். அதை சாப்பிடும்போது மென்மை தன்மையும் இல்லாமல் போய்விடும். சாக்லேட் கவரை பிரித்துவிட்டால் உடனே சாப்பிட்டுவிடுவதுதான் நல்லது. பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை சேமித்து வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கொல்கத்தாவில் உள்ள பிரபல உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் கிலோ சாக்லேட்டால் ஆன துர்கா தேவி சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. #KolkataHolidayInn #chocolateMaaDurga #1000kgchocolate
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை  மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது. 

    இதை தொடர்ந்து மேற்கு வங்காளம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வகைவகையான பந்தல்கள் அமைக்கப்பட்டு, துர்கா தேவியின் சிலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    காய்கறிகளினால் ஆன துர்கா சிலை, சோளத்தால் ஆன துர்கா சிலை என ஒவ்வொருவரும் தனிபாணியில் சிலைகளை அமைத்துள்ளனர். அவ்வகையில், தலைநகர் கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமைந்திருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள 10 அடி உயரத்தில் ஆயிரம் கிலோ சாக்லேட்டால் ஆன துர்கா தேவி சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    வெந்நிற சாக்லேட்டால் ஆன இந்த சிலையை உருவாக்க அந்த ஓட்டல் பணியாளர்கள் 12 நாட்கள் உழைத்ததாக தெரியவந்துள்ளது. #KolkataHolidayInn  #chocolateMaaDurga #1000kgchocolate
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
    கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ‘‘அதிலுள்ள கோகோவில் உள்ளடங்கி இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது’’ என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். "சாக்லேட்டில் உள்ள பிளவோனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்தவும் உதவுகிறது’’ என்கிறார், பிரபல ஆராய்ச்சியாளர் சயாகிரிட் கிரிட்டினவாங்க்.

    ‘‘கருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதிலிருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது’’ என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

    ரத்த ஓட்டம் சீராக நடை பெறுவதற்கும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கும் கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேவேளையில் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாப்பிட வேண்டும்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குழந்தைகளுக்கு சாக்லெட் குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் சாக்லெட் குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாதாம் பவுடர் - 1/4 கப்,
    வெண்ணெய் - 3 டீஸ்பூன்,
    சாக்லெட் சிப்ஸ் - 1 டீஸ்பூன்,
    பொடித்த பிரவுன் சுகர் - 2 டீஸ்பூன்,
    பால் - 1/4 கப், வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்,
    உப்பு - 1 சிட்டிகை.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பிரவுன் சுகர், பால், வெனிலா எசென்ஸ், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் அதில் பாதாம் பவுடர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடைசியாக அதனுடன் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து குக்கீஸ்களாக தட்டி டிரேயில் அடுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து பரிமாறவும்.

    குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் குக்கீஸ் ரெடி.

    குறிப்பு...

    பாதாம் பவுடர் செய்ய பாதாமை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவி, ஒரு இரவு முழுவதும் காயவிட்டு மிக்சியில் பவுடராக பொடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×