search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SBI bank"

    • நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.
    • வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    மும்பை:

    கடன் தவணையை உரிய தேதியில் திருப்பித் தராத வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு சென்று 'சாக்லேட்' அளிக்கும் நூதன திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) அமல்படுத்தத் தொடங்கி உள்ளது.

    இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது:-

    கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மாதாந்திர தவணைக் காலம் கடந்த பிறகும், அதற்கான தொகையைச் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி மூலம் வங்கி அழைப்பு விடுத்து வருகிறது.

    அத்தகைய அழைப்புகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏற்காமல் இருப்பது, அவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

    அதுபோன்ற வாடிக்கையாளர்களிடம் இருந்து கடன் தவணையை வசூலிப்பதற்கு, அவர்களது இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ முன்னறிவிப்பின்றி நேரில் செல்வதே சிறந்த வழியாகும். அதற்காக, சாக்லேட்டுகளுடன் வாடிக்கையாளர்களின் இல்லத்துக்கு வசூல் அதிகாரிகளை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்.பி.ஐ.யின் சில்லரை கடன் அளிப்பு ரூ.12,04,279 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 16.46 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது வங்கியின் சில்லரைக் கடன் அளிப்பு ரூ.10,34,111 கோடியாக இருந்தது.

    • கட்டுமான நிறுவனத்தினர் 11 அரங்குகள் அமைத்திருந்தனர்.
    • வங்கியை அணுகி கூடுதல் விவரங்கள் பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி வளாகத்தில சிறப்பு வீட்டுக்கடன் மேளா நடந்தது. அதனை ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் புவனேஷ்வரி தொடங்கி வைத்தார்.கட்டுமான நிறுவனத்தினர் 11 அரங்குகள் அமைத்திருந்தனர்.

    பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் தங்கள் கனவு இல்லத்தை நனவாக்குவதற்காக பொறியாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் வீட்டுகடன் கேட்டு விண்ணப்பம் அளித்தனர். முகாமில் 25 பேருக்கு வீட்டு கடனுக்கான முன் அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.

    ஸ்டேட் வங்கியில் 7.55 சதவீத வட்டியில் வீடு, வாகன கடன், 10.10 சதவீத வட்டியில் தனிநபர் கடன்,10.25 சதவீத வட்டியில் ஓய்வூதிய கடன், 7.50 சதவீத வட்டியில் தங்க நகை கடன்கள் வழங்கப்படுகிறது. எனவே அருகாமையில் உள்ள ஸ்டேட் வங்கியை அணுகி கூடுதல் விவரங்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
    • வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது இந்த கிளையில் கேத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு செலவு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலர் குடும்ப சூழல் காரணமாக கேத்தனூர் வங்கி கிளையை அணுகி நகை கடன் பெற முயலும் பொழுது அங்கு நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர்(57) வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நகைகளில் குறிப்பிட்ட அளவை வெட்டி எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்த புகாரின் பேரில் காமநாயக்கன்பா–ளையம் போலீசார் வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நகை மோசடியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க இதுவரை 3 முறை பேச்சுவா–ர்த்தை நடைபெற்றது கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில் ஜூன் 20-ம் தேதிக்குள் இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் கூறியதாக கூறப்பட்ட நிலையில் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை இந்த நிலையில் நேற்று 4 ம் முறையாக கேத்தனூர் எஸ்.பி.ஐ. வங்கியில் பேச்சுவார்த்தை நடைபெ–ற்றது பல்லடம் தாசில்தார் நந்தகோபால்,கிளை மேலாளர் சுதாதேவி, வங்கி வழக்கறிஞர்கள், வாவிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கலாமணி மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொ–ண்டனர். இதில் வங்கியில் நகை இழந்தவர்கள் கொடுத்த மனுவின் மீது விசாரணை செய்யப்பட்டு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மொத்தம் பெறப்பட்ட 574 மனுக்களில் 400 மனுக்கள் நகை மதிப்பீடு செய்யப்பட்டு இழப்பீடு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது போக நகைகளை இன்னும் மதிப்பீடு மதிப்பீடு செய்யாமல் உள்ள 174 வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக அழைத்து அவர்கள் நகையையும் மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.

    இழப்பீடு கேட்டு விண்ணப்பித்த மனுக்களில் இழப்பீடு தொகை திருப்தியில்லாத 32 வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்பி அவர்கள் ஒப்புக் கொள்கின்ற நகை மதிப்பீட்டை நிர்ணயம் செய்யவேண்டும்.நகை மோசடி நடந்த நாளிலிருந்து மார்ச்சிலிருந்நு இன்று வரை வங்கியில் உள்ள நகைகளுக்கு வட்டி வசூலிக்க கூடாது 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கவேண்டும். காலதாமதம் செய்தால் போராட்டம் நடத்தப்படும் வாடிக்கையாளர்கள் தரப்பில் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வங்கி தரப்பினர் 10 நாட்களுக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். முன்னதாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வங்கி நிர்வாகத்திடம் உடனடியாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

    எஸ்.பி.ஐ. வங்கியில் 90 கோடி ரூபாய் கடன் வாங்கி ஊழல் செய்த வழக்கில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 9 இடங்களில் அமலாக்கத்துறை இன்று சோதனை நடத்தியுள்ளது. #EnforcementDirectorate #TamilNadu
    சென்னை:

    விருதுநகரை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் செண்பகன் என்பவருக்குச் சொந்தமான இன்சுமதி சுத்திகரிப்பு நிலையம் என்ற தனியார் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் சுமார் 87.36 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதையடுத்து, இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான செண்பகத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். மதுரை, கோவை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.#EnforcementDirectorate #TamilNadu
    ×