search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fraud case"

    • 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
    • குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அடையாறு காந்திநகரில் 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்கிற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர் சுப்பிரமணியன் இவர் சுபிக்ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும் நடத்தி வந்தார்.

    இதனால் சுபிக்ஷா சுப்பிரமணியன் என்று அழைக்கப்பட்டு வந்த அவர், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார். தங்களது நிதி நிறுவனத்தில் 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறி நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமானோர் சுபிக்ஷா சுப்பிரமணியத்தின் நிதி நிறுவனத்தில் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்தனர்.

    ஆனால் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனம் தாங்கள் கூறியது போல பொதுமக்களின் முதலீடு பணத்துக்கு உரிய வட்டியை தராமல் ஏமாற்றி வந்தது. முதலீட்டு பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் விஸ்வபிரியா பைனான்ஸ் நிறுவனத்தை நடத்திய சுபிக்ஷா சுப்பிரமணியன் 17 துணை நிறுவனங்களையும் நடத்தி 500-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடியாக பணம் பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக 587 முதலீட்டாளர்கள் 3800-க்கும் மேற்பட்ட முதலீடுகளை செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து நிதி நிறுவனத்தின் இயக்குனர்களான சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பால சுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகள் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    கடந்த 2020-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டது. மொத்தம் 51 கோடியே 47லட்சத்து 29 ஆயிரத்து 861 ரூபாய் அளவுக்கு சுபிக்ஷா சுப்பிரமணியனும் அவரது கூட்டாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியன் மற்றும் நிதி நிறுவனம் முறைகேடு தொடர்பாக குற்றம் சாட்டப் பட்ட 17 பேரும் நேர்மையற்ற முறையில் முறைகேட்டில் ஈடுபட்டது, மோசடியாக செயல்பட்டது, பொதுமக் களை அச்சுறுத்தியது, சொத்துக்களை மறைத்தது, கிரிமினல் சதியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையின் போது உறுதி செய்தனர்.

    இதையடுத்து சிறப்பு கோர்ட்டு நீதிபதி கருணாநிதி 543 பக்கங்களை கொண்ட தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியுள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஸ்ரீ வித்யாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இயக்குனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மொத்தமாக ரூ.191.98 கோடி அபராதமாக விதிக்கப்படுவதாகவும் அதில் ரூ.180 கோடியை டெபாசிட் செய்த அனைவருக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கருணாநிதி தீர்ப்பளித்து உள்ளார். சம்பந்தப்பட்ட நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீனா, சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • விசாரணை அறிக்கை 45 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

     திருப்பூர்:

    பனியன் தொழில் நகரான திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட உள்ளது. போனஸ் வாங்கியதும் கடைவீதிகளுக்கு சென்று தீபாவளி பண்டிகைக்கு ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு சொந்த ஊர் புறப்படுகிறார்கள்.

    கடந்த திங்கட்கிழமை முதல் திருப்பூர் கடைவீதிகளில் உள்ள ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இன்று முதல் பொதுமக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக சாலையோரம் தடுப்புகள் அமைக்கப்பட்டு நடந்து செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குமரன் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் புதிய கட்டுமான பணிகள் தொடங்கி நடக்கிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தென்மாவட்ட பஸ்கள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்களில் பெரும்பாலானவை இங்கிருந்து இயக்கப்படுவதால் அதற்கேற்ப பஸ்களை நிறுத்த இடவசதி செய்யப்பட்டுள்ளது. பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் மாநகராட்சியின் உரக்கிடங்கு இருந்த பகுதியை சுத்தம் செய்து அங்கு பஸ்களை நிறுத்தி எடுத்துச்செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

    பஸ்நிலையம் முழுவதும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் பஸ்சில் முண்டியடித்து ஏறுவதை தடுக்க கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையில் ஏற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் இன்று முதல் 3 நாட்களுக்கு பயணிகள் அதிகம் வருவார்கள். அவர்கள் பஸ் நிலையத்துக்குள் காத்திருப்பதற்காக தற்காலிக கூடாரங்கள் நேற்று காலை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதிய பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசை காட்டுவார்கள் என்பதால் மப்டியில் குற்றப்பிரிவு போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாநகரில் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிக்கிறார்கள். இதுபோல் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் ரோந்துப்பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 296 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடைகள் அமைந்துள்ள பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    • தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை நடிகர் அதர்வா மதிப்பதில்லை எனவும் மதியழகன் புகார்.
    • அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் சரமாரி குற்றச்சாட்டு.

    ரூ.6.10 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நடிகர் அதர்வா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் மதியழகன் புகார் மனு அளித்துள்ளார்.

    தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவுகளை நடிகர் அதர்வா மதிப்பதில்லை எனவும் மதியழகன் குற்றம்சாட்டியுள்ளார்.

    படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டாமல், பணத்தை திருப்பி தராமல் 4 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் வேதனை தெரிவித்துள்ளார்.

    மேலும், அதர்வா தனது அப்பா முரளியின் பெயரை வைத்து ஏமாற்றி வருவதாகவும், அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுவதாகவும் தயாரிப்பாளர் மதியழகன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

    • மங்காளூர்- விழுப்புரம் தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் மோசடி.
    • ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.

    2019ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, மங்காளூர்- விழுப்புரம் தேசிய நெஞ்சாலை ஓரம் நடைபாதை, தடுப்பு வேலி அமைத்ததில் ரூ.1.11 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக ஓய்வுபெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மேலும், நடைபாதையில் 2.1 மீட்டருக்கு பதிலாக 0.90 மீட்டர் மட்டுமே டைல்ஸ் கற்களை பதித்து மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக பணியில் உள்ள 2 அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி.
    • கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்.

    நெல்லையில் உள்ள நியோமேக்ஸ் என்கிற நிதி நிறுவனம் ஒன்று அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்த புகாரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நியோமேக்ஸ் நெல்லை கிளை நிறுவனத்தின் இயக்குனர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இருவரும் சிவகங்கை, தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த சைமன் ராஜா, கபில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட இருவரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    • இந்திய வம்சாவளியான அபிஜித் தாஸ் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு அபிஜித் தாஸ் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் இவர் தன்னிடம் வழக்கு தாக்கல் செய்ய வந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.40 கோடி) தனது வங்கி கணக்கு மாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து அபிஜித்தை போலீசார் கைது செய்தனர். பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கி உள்ளதால் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.2 கோடி அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரசார விதிகளை மீறுதல், தவறான அறிக்கை தாக்கல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
    • நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம், திருப்பூர்,ஊத்துக்குளி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி வங்கியில் கடன் பெற்று சொந்தத் தொழில் செய்யலாம் என கூறியும், அவர்களிடமிருந்து சொத்து பத்திரங்களை பெற்று வங்கியில் அவர்கள் பெயரிலேயே கடன் பெற்று சுமார் 100 கோடி அளவில் மோசடி செய்ததாக, பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்( வயது 51) ,அவரது அண்ணன் விஜயகுமார்(53) , மகன் ராகுல் பாலாஜி(27) மற்றும் பிரவீனா(41) உள்ளிட்டவர்கள் மீது பல்லடம், திருப்பூர், ஊத்துக்குளி,உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்கு உள்ளது.

    ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பல்லடம் காவல் நிலையத்தில்,கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த குமரேசன்(48) என்பவர் புகார் செய்தார்.

    கடந்த 2018 ம் ஆண்டு சிவக்குமார், பிரவீனா, திருப்பூரைச் சேர்ந்த தமிழரசன் ஆகிய3 பேரும், சொத்து பத்திரத்தின் மூலம் கடன் பெற்று டெக்ஸ்டைல் தொழில் செய்யலாம் என குமரேசனிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி சொத்து பத்திரங்களை கொடுத்துள்ளார். அதனை ஈரோடு பகுதியிலுள்ள அரசு வங்கியில் வைத்து ரூபாய் 2 கோடி கடன் பெற்றுள்ளனர்.

    ஆனால் டெக்ஸ்டைல்ஸ் தொழில் எதுவும் செய்யாமல், தாமதம் செய்துள்ளனர். இதனால் பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி குமரேசன் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2022 மார்ச் மாதம் வங்கியில் இருந்து கடன் பெற்ற தொகைக்கு அசலும், வட்டியும் கட்டச் சொல்லி குமரேசனுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வந்துள்ளது. இதையடுத்து மீண்டும் சிவக்குமார், பிரவீனா ஆகியோரை தொடர்பு கொண்ட போது முறையாக பதிலளிக்கவில்லை, எனவே மோசடியில் ஈடுபட்ட அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்லடம் காவல் நிலையத்தில் குமரேசன் புகார் அளித்தார்.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கில் சம்பந்தப்பட்ட பல்லடம் வேலப்ப கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்,பல்லடம் வடுகபாளையத்தைச் சேர்ந்த பிரவீனா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரவினா கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிவக்குமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி புகார்கள் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தெரிந்து கொண்ட சிவக்குமார் தலைமறைவானார். பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தேனி அருகே அவர் பதுங்கி இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அவரது அண்ணன் விஜயகுமார் , அவரது மகன் ராகுல் பாலாஜி முன் ஜாமீன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பழங்கால பொருட்களை விற்பனை செய்து வந்தவர் மோன்சன் மாவுங்கால். இவர் தங்கம் கடத்தல் மற்றும் பழமையான பொருட்கள் விற்பனையில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவர் மீது பாலியல் வழக்கும் இருந்தது. இந்த வழக்கில் மோன்சன் மாவுங்காலுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் மோன்சன் மாவுங்காலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர், கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார்.

    இந்நிலையில் நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

    அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், நான் நீதித்துறை மீது நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை. கோர்ட்டில் வழக்கை சந்திப்பேன். நான் பயப்படவோ ஒளிந்து கொள்ளவோ போவதில்லை என்றார்.

    இந்நிலையில் சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் 2 நாட்கள் கருப்பு தினம் கடைபிடிப்பதாகவும் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது அரசியல் கட்சிகளுக்கு எதிராக கேரள அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக கூறி பிரசாரத்தை தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசை போன்றே பினராயி அரசும் பாசிச அணுகுமுறையை கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

    • ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.

    திருப்பூர் :

    பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம்(வயது 52). தையல் கலைஞரான இவர் தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.

    இவருக்கும் தற்போது நகர செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020 ம் ஆண்டு, அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பி தருமாறு சண்முகம் கேட்டுள்ளார். அப்போதும் அவர் பணத்தை திருப்பி தராததால் இதுகுறித்து முக்கிய பிரமுகர்களிடம் பேசி கடந்த 2022 ல் ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த காகோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.

    தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வரும் ஜூன் 30-ல் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

    • நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் டிராக்டர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
    • வேளாண் துறை ஊழியர் மற்றும் குலவணிகர்புரத்தை சேர்ந்த டிராக்டர் நிறுவன உரிமையாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் டிராக்டர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரிடம் சேரன்மகாதேவி வேளாண்மை துறையில் வேலை செய்து வரும் ஒருவர் மானியத்தில் டிராக்டர் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

    இதற்காக முத்துராமன் ரூ.4 லட்சத்தை பாளையில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் கட்டி யுள்ளார். ஆனால் வெகு நாட்களாகியும் வேளாண் ஊழியர் டிராக்டர் வாங்கி கொடுக்கவில்லை.

    மேலும் இது குறித்து வேளாண் ஊழியரிடம் முத்துராமன் பலமுறை கேட்டும் எந்த பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து முத்துராமன் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வேளாண் துறை ஊழியர் மற்றும் குலவணிகர்புரத்தை சேர்ந்த டிராக்டர் நிறுவன உரிமையாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் ஏமாந்துள்ளனர்.
    • தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    சென்னை :

    போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அந்த நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளன.

    அந்த வகையில் ஆரூத்ரா கோல்டு டிரேடிங் லிமிடெட் என்ற நிறுவனம், ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், எல்.என்.எஸ். சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் போன்றவை முக்கியமானவை ஆகும். இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம் பெறப்படும் முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தருவோம் என்று கவர்ச்சிகரமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

    பொதுமக்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக முகவர்களையும், பணியாளர்களையும் மேற்கண்ட நிறுவனங்கள் நியமித்துள்ளன. தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கூட்டங்கள் நடத்தி, பொது மக்களை கவரும் வகையில் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு தாங்கள் அறிவித்தபடி, மாதந்தோறும் வட்டித்தொகையையும் மற்றும் முதலீட்டு தொகையையும் முறையாக திரும்பித்தரவில்லை என்று புகார்கள் வந்தன.

    புகார்களின் அடிப்படையில் ஆரூத்ரா கோல்டு நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்கை பதிவு செய்தனர். விசாரணை அடிப்படையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களில் 37 இடங்களில் ஆரூத்ரா நிறுவனம் சம்பந்தமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிறுவனம் தொடர்பாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சுமார் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுமக்கள் செலுத்திய மொத்த முதலீட்டு தொகை சுமார் ரூ.2 ஆயிரத்து 438 கோடி ஆகும்.

    ஆரூத்ரா கோல்டு நிறுவனம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களில் பாஸ்கர், மோகன்பாபு உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கில், ராஜசேகர், ஹரிஷ், மைக்கேல் ராஜ், நாராயணி போன்றோர் தலைமறைவாக உள்ளனர்.

    இதேபோல், எல்.என்.எஸ். சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் சம்பந்தமாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

    இதன் மூலம் திரட்டப்பட்ட தகவல் அடிப்படையில் சுமார் 1 லட்சம் பொது மக்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. முதலீட்டு தொகையாக மொத்தம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்டதாகவும் தெரிய வந்திருக்கிறது.

    இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சுமி நாராயணன், வேதநாராயணன், ஜனார்த்தனன், மோகன்பாபு ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்ட 'ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 21 இடங்களில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    சோதனை மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், 4 ஆயிரத்து 500 பொது மக்களிடம் முதலீட்டு தொகை பெற்று, சுமார் ரூ.600 கோடி அளவுக்கு வசூல் நடந்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    சவுந்தர்ராஜன் என்பவரும், அவர் மகன் அலெக்சாண்டர் என்பவரும் வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளாக உள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    மேற்கண்ட 3 நிறுவனங்களில் முதலீட்டு தொகை செலுத்தி ஏமாந்த பொது மக்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம். இந்த 3 நிறுவனங்கள் மீதும் தொடரப்பட்ட வழக்குகள் அடிப்படையில் தலைமறைவு குற்றவாளிகளாக இருப்பவர்கள் பற்றி தகவல் தெரிந்த பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு தெரிவிக்கலாம்.

    பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல், உறுதியாக இருப்பின் அவர்களுக்கு தக்க சன்மானம், ரொக்கப்பரிசு வழங்கப்படும். தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று இரவு கூறும்போது, 'இதுபோன்ற மோசடி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைபட்டு, பொது மக்கள் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேற்கண்ட 3 மோசடி நிறுவனங்களிலும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் முதலீடு செய்து ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 9 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும் கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நியாயமான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முதலீட்டு தொகையை இழந்த பொது மக்களுக்கு அவற்றை திருப்பி பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

    • மதுரையில் வீடு வாங்குவது தொடர்பாக மோசடி நடந்துள்ளது.
    • 2 பெண்கள் உள்பட 4 பேர்மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை தனக்கன்குளம் கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் திருநகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், "நான் சண்முகம் தெருவில் உள்ள ஒரு வீட்டை விலைக்கு வாங்க விரும்பினேன். இதற்காக குணசேகரன், ராஜபாண்டி, குணசேகரன் மனைவி பாண்டி மீனா, ராஜபாண்டி மனைவி பிரியா ஆகியோரிடம் ஒப்பந்தம் செய்திருந்தேன்.

    அப்போது செக் பவுன்ஸ் மூலம் எனக்கு வீட்டை விற்காமல் மோசடி செய்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சின்னசாமியிடம் மேற்கண்ட 4 பேரும் ஒப்பந்தம் வாயிலாக பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் திருநகர் போலீசார் கைது செய்தனர்.

    ×