search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lawyer arrested"

    • இந்திய வம்சாவளியான அபிஜித் தாஸ் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு அபிஜித் தாஸ் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் இவர் தன்னிடம் வழக்கு தாக்கல் செய்ய வந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.40 கோடி) தனது வங்கி கணக்கு மாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து அபிஜித்தை போலீசார் கைது செய்தனர். பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கி உள்ளதால் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.2 கோடி அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரசார விதிகளை மீறுதல், தவறான அறிக்கை தாக்கல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விருத்தாசலத்தில் விபசார வழக்கில் வக்கீல் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஆலடிரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மேலும் விசாரித்த போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரு பெண்கள் மற்றும் அங்கு வாடிக்கையாளராக இருந்த பிஞ்சனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராயர் (30) என்பவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேலம் பெரியபுதூரில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் அவரது காரை அடித்து உடைத்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் இளமாறன் (வயது 41). வக்கீலான இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த இளமாறன், ராஜேஷ்குமாரின் காரை அடித்து உடைத்தார்.

    இது குறித்து ராஜேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த அழகாபுரம் போலீசார் இளமாறனை கைது செய்தனர்.

    ×