

கடலுார்:
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஆலடிரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மேலும் விசாரித்த போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரு பெண்கள் மற்றும் அங்கு வாடிக்கையாளராக இருந்த பிஞ்சனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராயர் (30) என்பவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.