என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க. நிர்வாகி கைது"

    • மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.
    • அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்.

    ஒட்டன்சத்திரம்:

    நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்ற ஒருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே புதுப்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான நல்லமுத்து என்ற கண்ணன் (வயது 40) மூலம் அந்த நோட்டுகளை பெற்று புதுச்சேரியில் மாற்றியதாக தெரிவித்தார்.

    போலீசார் விசாரணையில் மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நல்லமுத்து தரகராக செயல்பட்டு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புதுச்சேரியில் மாற்றி கொடுத்துள்ளார். இவருக்கு சேலம் மாவட்டம் சுந்தரம்வரதன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

    மேலும் புதுச்சேரியில் புதிய நோட்டுக்கு பழைய நோட்டு தருவதாக மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த ராமானுஜம் (48), பழைய ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற 20 சதவீதம் கமிஷன் பெற்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம்

    கன்னிவாடி அடுத்து புதுப்பட்டிக்கு வந்த புதுச்சேரி போலீசார் ரெட்டியார்சத்திரம் போலீசார் உதவியுடன் நல்லமுத்து என்ற கண்ணன் குறித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் ரெட்டியார்சத்திரம் கோபிநாதசுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதை அடுத்து அங்கு விரைந்து சென்று புதுச்சேரி போலீசார் நல்ல முத்து என்ற கண்ணனை கைது செய்து விசாரணைக்காக புதுச்சேரி அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நல்லமுத்து என்ற கண்ணன் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டிரைவர் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
    • கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). இவர் ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை உறவினர் வடிவேல் என்பவர் இரவோடு இரவாக மயானத்துக்கு கொண்டு சென்று எரித்தார். இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அதில்சுரேஷ்குமார் ரூ.6 லட்சத்தை கையாடல் செய்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேல் தனது நண்பர்களுடன் சுரேஷ்குமாரை கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.

    வடிவேல் ஓடைப்பட்டி வி.ஏ.ஓ.விடம் சரண் அடைந்தார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமறைவாக இருந்தார். அவரை தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக தேடி வந்தனர்.

    ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தலைமை யிலான தனிப்படையினர் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோயம்பே ட்டில் பதுங்கி இருந்த நட ராஜனை கைது செய்தனர்.

    இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×