search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver murder"

    • தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தெற்கு ஏரந்தை பகுதியை சேர்ந்தவர் தேவபாலன் (வயது 50). லாரி டிரைவர்.

    இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள அம்மன் கோவில் ஓடையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் தேவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட தேவபாலன் மீது கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்தவர் துரைபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு இருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த அவர் பின்னர் விடுதலையானதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நேற்று இறந்துள்ளார். அந்த வீட்டிற்கு துரைபாண்டியின் உறவினர்கள் சிலர் வந்துள்ளனர். இந்நிலையில் தேவபாலன் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பழைய வழக்கு தொடர்பான முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக தேவபாலன் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் தகராறு காரணமாக தேவபாலன் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவர் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
    • கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது30). இவர் ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 மாதத்திற்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது உடலை உறவினர் வடிவேல் என்பவர் இரவோடு இரவாக மயானத்துக்கு கொண்டு சென்று எரித்தார். இது குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். அதில்சுரேஷ்குமார் ரூ.6 லட்சத்தை கையாடல் செய்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வடிவேல் தனது நண்பர்களுடன் சுரேஷ்குமாரை கொலை செய்து எரித்தது தெரிய வந்தது.

    வடிவேல் ஓடைப்பட்டி வி.ஏ.ஓ.விடம் சரண் அடைந்தார். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமறைவாக இருந்தார். அவரை தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக தேடி வந்தனர்.

    ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தலைமை யிலான தனிப்படையினர் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கோயம்பே ட்டில் பதுங்கி இருந்த நட ராஜனை கைது செய்தனர்.

    இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார்.இவரது மகன் காந்திராஜன் (வயது 28). வேன் டிரைவரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மதுரை தெற்குவாசல் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காந்தி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அந்த தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் காந்தி ராஜன் காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டதும், அவர் காதலித்து வந்த இளம் பெண்ணின் குடும்பத்தினரே அவரை தீர்த்து கட்டிய அதிர்ச்சி தகவலும் வெளியானது.

    மதுரை கீரைத்துறையை சேர்ந்த மாயழகு என்பவரின் மகளை காந்திராஜன் காதலித்து வந்தள்ளார். இதற்கு மாயழகுவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருந்த போதிலும் அந்த இளம் பெண்ணுடன் காந்திராஜன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த மாயழகின் மகன் காளிதாஸ் (21), 17 வயது சிறுவனான மற்றொரு மகன் ஆகிய இருவரும் காந்திராஜனை வெட்டி கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து காந்தி ராஜன் கொலை கொலை தொடர்பாக மாயழகு மற்றும் அவரது 2 மகன்களையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். கொலைக்கான காரணம் குறித்து 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
    • மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரிய சோரகை கிராமம் மாட்டுக்காரனூர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 53). டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

    தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய லாரியில் மணி டிரைவராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 8-ந்தேதி கசுவரெட்டிப்பட்டியில் உள்ள கிணற்றில் மணி பிணமாக மிதந்தார். அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடலை கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது. தாரமங்கலம் போலீசார், உடல் பாகங்களை மீட்டு, சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே கொலையாளிகளை கைது செய்யும்வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

    போலீசாரின் அதிரடி விசாரணையில், மணியின் நெருங்கிய நண்பரான தாரமங்கலம் அருகே உள்ள கருக்கப்பட்டி பகுதியை சேர்ந்த செல்லான் என்கிற செல்வராஜ் (வயது 55) என்பவர் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த செல்வராஜை நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள திடுக்கிடும் வாக்குமூலம் வருமாறு:-

    நான், மரங்கள் அறுத்து அவற்றை லாரிகளில் அனுப்பும் தொழில் செய்து வருகிறேன். கொலையுண்ட மணியும், நானும் மற்றும் துட்டம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரும் நண்பர்கள். நாங்கள் தாரமங்கலம் சைக்கிள் ஸ்டாண்ட் உரிமையாளர் குமார் என்பவருடைய தோட்டத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம். நாங்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம்.

    வழக்கம்போல் கடந்த 7-ந்தேதி 3 பேரும் சேர்ந்து, பன்றிக்கறி சமைத்து எடுத்துச் சென்று எனது வீட்டில் வைத்து மது குடித்தோம். சிறிது நேரத்தில் சக்திவேல் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் நானும், மணியும் தொடர்ந்து மது குடித்தோம்.

    அப்போது போதையில் எனது மனைவி குறித்து தவறாக பேசினார். அதனை கண்டித்தும் கேட்காமல் ஆபாசமாக பேசினார். இதனால் எனக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த நான் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து மணியின் பின்தலையில் தாக்கினேன். இதனால் மணி சரிந்து விழுந்தார். பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் கொலையை மறைக்க முழு உடலையும் துண்டு துண்டாக வெட்டி முடிவு செய்தேன்.

    கத்தியை கொண்டு அவரது கை, கால்களை தனித்தனியாக வெட்டினேன். அவற்றை அப்படியே எடுத்துச் சென்று வெளியே வீசினால் பொதுமக்கள் பார்த்து விடுவார்கள் என கருதி உடல் பாகங்களை 3 சாக்குமூட்டைகளில் போட்டு கட்டினேன்.

    பின்னர் அந்த சாக்குமூட்டைகளை எடுத்து சென்று நாங்கள் பணியாற்றி வந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசினேன். மீண்டும் வீட்டிக்கு வந்து மது குடித்தேன்.

    இரவு நேரத்தில் பயமாகி விட்டதால், எனது மகள் வீட்டிற்கு சென்று மருமகனிடம் சம்பவத்தை கூறி கதறினேன். மறுநாள் மதியம் கிணற்றில் வீசப்பட்ட உடல் பாகங்கள் மிதக்க தொடங்கியதால் போலீசில் வசமாக சிக்கிக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    கைதான செல்வராஜை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இதையடுத்து மணியின் உடலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருநாழியை சேர்ந்தவர் மணிகண்டன் லாரி டிரைவர்.
    • ஆத்திரம் அடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மணிகண்டனை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்.

    தூத்துக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருநாழியை சேர்ந்தவர் மணிகண்டன்

    (வயது 35). லாரி டிரைவர்.

    டிரைவர்

    இவர் கடந்த 10-ந் தேதி தூத்துக்குடிக்கு லாரி ஓட்டிவந்தார். பின்னர் மணிகண்டன், அவரது நண்பர் பேரூரணி சமத்துவபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (31) மற்றும் 2 பேர் மது குடித்தனர். தொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மணிகண்டனை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்.

    இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் இறந்தார்.

    இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில், பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மணிகண்டனை தாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகம் கொலை வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை நேற்று கைது செய்தார்.

    மேலும் ஒருவர் கைது

    இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டையை சேர்ந்த வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அலங்காநல்லூர் அருகே ஆட்டோ டிரைவரை கொலை செய்த கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
    • அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை பெத்தானியா புரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 29), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா(24). ரவி கடந்த ஒரு வருடமாக கோவில்பாப்பாக்குடியில் வசித்து வந்தார். அவர் அங்கு சிலருடன் நட்பாக பழகி வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று ரவி கோவில்பாப்பாக்குடி பகுதியில் இருந்தபோது ஒரு கும்பல் வந்தது.

    அவர்கள் ரவியிடம் தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.இதில் படுகாயம் அடைந்த ரவியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியி லேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    கொலை சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், அலங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், மருதமுத்து ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி னர்.

    எதற்காக ரவி கொலை செய்யப்பட்டார்? என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையில் ஈடுபட்ட நபர்கள் யார்?யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆட்ேடா டிரைவர் ரவியை கொலை செய்த கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையில் 2 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ரவியை அவரது நண்பர்கள் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.
    • தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா புகார் அளித்திருந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே தென்கலம் கிராமம் அருகே உள்ள குளத்தின் கரைக்கு அருகே கடந்த மாதம் 20-ந்தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது.

    இதுதொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தார்.

    கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா(வயது 35) புகார் அளித்திருந்தார். இதனால் எரித்துக்கொல்லப்பட்ட நபர் ராஜா தானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக அவரது மனைவி வினிதாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கேரளா மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வினிதாவுடன் திருமணமாகி உள்ளது. ராஜா சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அங்கு தொழில் சரியாக இல்லாததால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ராஜா தனது குடும்பத்துடன் நெல்லையை அடுத்த தாழையூத்துக்கு வந்துவிட்டார்.

    அங்கு கயத்தாறு அருகே உள்ள வலசல் பகுதியை சேர்ந்த தர்மராஜா(25) என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து ராஜாவின் லாரியில் தர்மராஜா கிளீனராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் காரணமாக தர்மராஜா அடிக்கடி ராஜாவின் வீட்டுக்கு சென்றுவந்துள்ளார்.

    அப்போது அவருக்கு ராஜாவின் மனைவி வினிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் ராஜா இல்லாத நேரத்தில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜா அவர்களை கண்டித்துள்ளார்.

    ஆனாலும் 2 பேரும் கள்ளக்காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை ராஜா வீட்டில் இல்லாததை அறிந்த தர்மராஜா, அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வினிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த ராஜா, அதனைப்பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

    அப்போது ராஜாவுக்கும், தர்மராஜாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தர்மராஜா ஆத்திரம் அடைந்து ராஜாவை கொலை செய்தார். பின்னர் வினிதாவின் உதவியுடன் ராஜா உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கி, மானூர் குளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு வைத்து ராஜாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வினிதாவும், தர்மராஜாவும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். பின்னர் எதுவும் தெரியாததுபோல வினிதா தனது கணவரை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சபாபதி இந்த வழக்கில் வினிதா, தர்மராஜா ஆகியோரை கைது செய்தார்.

    • ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது.
    • டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கே.கே. நகரைச் சேர்ந்த கார் டிரைவர் ரவி கடத்தி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோயம்பேட்டைச் சேர்ந்த ஏட்டு செந்தில்குமார், டிரைவர் ரவியை கொலை செய்து ஆம்னி வேனில் உடலை கடத்திச் சென்று செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரிய வந்தது. ஏட்டு செந்தில்குமாரின் காதலியான கவிதாவுக்கும், கொலையுண்ட ரவியின் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் ஏற்பட்ட தகராறில் ரவி, செந்தில்குமாரை தாக்கி உள்ளார். இந்த மோதலே கொலையில் முடிந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    ஏட்டு செந்தில்குமார் டிரைவர் ரவியை கொலை செய்வதற்கு ஐசக் என்ற ரவுடியையும், அவரது கூட்டாளிகளையும் துணைக்கு சேர்த்துக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து ஏட்டு செந்தில் குமாரையும் ஐசக் உள்பட 4 ரவுடிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வநதனர். போலீஸ் பிடி இறுகியதால் ஏட்டு செந்தில்குமாரும், ரவுடி ஐசக்கும் நெல்லை கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

    மாஜிஸ்திரேட்டு ஆறுமுகம், 2 பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். வருகிற 16-ந்தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து ஏட்டு செந்தில் குமாரும், ரவுடி ஐசக்கும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் இருவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். செங்கல்பட்டு கோர்ட்டில் வருகிற 16-ந்தேதி ஏட்டு செந்தில்குமாரும், ஐசக்கும் ஆஜர்படுத்தப்படும் போது படாளம் போலீசார் இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த மனு அளிக்க உள்ளனர்.

    டிரைவர் ரவி கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டியது இருப்பதால் 5 நாட்கள் வரை 2 பேரையும் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுக்கும் போது, ஏட்டு செந்தில்குமார், ரவுடி ஐசக் இருவரையும் கொலை நடந்த வீடு, உடல் எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த கொலை வழக்கில் ஐசக்கின் கூட்டாளிகளான எட்வின், மகி, கார்த்தி ஆகிய 3 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள 3 ரேையும் பிடிக்க போலீஸ் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கே.கே.நகர் மற்றும் படாளம் போலீசார் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏட்டு செந்தில்குமாரின் காதலி கவிதா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுவை முதலியார் பேட்டை லாரி டிரைவர் கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை 100 அடி சாலை சாக்கடை கால்வாயில் நேற்று முன்தினம் சாக்கு மூட்டையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. அது, நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த லாரி டிரைவர் கமலக்கண்ணன் என்பது தெரியவந்தது. கமலக்கண்ணனை அவரது மனைவி ஸ்டெல்லா கொலை செய்து சத்தியா நகரை சேர்ந்த ரவுடி தமிழ் மணி உதவியுடன் பிணத்தை அங்கு கொண்டு வந்து போட்டது தெரியவந்தது.

    இதையடுத்து ஸ்டெல்லாவை போலீசார் கைது செய்தனர். தமிழ்மணி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகிறார்கள். இந்த நிலையில் பிணத்தை மறைப்பதற்கு தேங்காய்திட்டை சேர்ந்த ஒருவரும், மற்றும் ஒருவரும் உதவியாக இருந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    பிணத்தை முதலில் வீட்டில் இருந்து ஆட்டோவில் எடுத்து வந்துள்ளனர். பின்னர் ஸ்கூட்டியில் ஏற்றி கால்வாயில் போட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

    இதற்கிடையே கமலக்கண்ணனை அவரது மனைவி கொலை செய்ததில் வேறு சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. கமலக்கண்ணன் குடிக்கும் மதுவில் மனைவி விஷத்தை கலந்து இருந்ததாகவும், அதை குடித்து மயங்கி கிடந்த அவரை காலால் மிதித்து கொன்றதாகவும் தெரிய வந்துள்ளது. அதுபற்றியும் விசாரித்து வருகிறார்கள்.
    பண்ருட்டி அருகே வேன் டிரைவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை சண்முகா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 21) வேன் டிரைவர்.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் விஜயகுமார் கிடைக்கவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை அதே பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகே விஜய குமார் கடப்பாரையால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விஜயகுமாரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    விஜயகுமாரை கொலை செய்து ரெயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் கொலை செய்த மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஒட்டன்சத்திரத்தில் ஆட்டோ டிரைவரை அடித்துக்கொன்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காந்தி நகர் வண்ணாம்பாறையை சேர்ந்தவர் முனுசாமி(வயது42). ஆட்டோ டிரைவர். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

    முனுசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வெயில் காலம் என்பதால் வீட்டின் முன்புறம் படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது முனுசாமி எழுந்திருக்காமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அருகே சென்று பார்த்த போது முனுசாமியின் மர்ம உறுப்பில் பலமாக தாக்கப்பட்டு ரத்தக்களறியாக காட்சியளித்தது. எனவே மர்மநபர்கள் இரவில் இவரை அடித்து கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முனுசாமி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிபோதையில் தகராறில் டிரைவரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பம்மலை சேர்ந்தவர் மணிகண்டன் (38). டிரைவர். நேற்று இரவு மணிகண்டன் குடித்துவிட்டு நாகல்கேணி பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் வந்த மற்றொரு வாலிபருடன் தகராறு ஏற்பட்டது.

    வாய்தகராறு கைகலப்பாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அருகில் உள்ள காய்கறி கடையில் இருந்தகத்தியை எடுத்து வந்து மணிகண்டனை சரமாரியாக குத்தினார். இதில் அவர் உயிர் இழந்தார்.

    சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வந்தனர். விசாரணையில் நாகல்கேணி பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (37) என்பவர் இந்த கொலையை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் இருந்த போது மணிகண்டன் தன்னை தாக்கியதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து வாலிபர் அருள்ராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ×