என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வண்டலூரில் என்ஜினீயரிங் கல்லூரிக்குள் டிரைவர் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்
- கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கார் டிரைவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பிரபல தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு கீரப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது27) என்பவர் கார் டிரைவராக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த மர்மநபர்கள் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மணிகண்டனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் கிளாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை.
கல்லூரி வளாகத்திற்குள் வைத்தே கார் டிரைவரை மர்மநபர்கள் வெட்டி கொலை செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






