search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "person arrested"

    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருநாழியை சேர்ந்தவர் மணிகண்டன் லாரி டிரைவர்.
    • ஆத்திரம் அடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மணிகண்டனை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்.

    தூத்துக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருநாழியை சேர்ந்தவர் மணிகண்டன்

    (வயது 35). லாரி டிரைவர்.

    டிரைவர்

    இவர் கடந்த 10-ந் தேதி தூத்துக்குடிக்கு லாரி ஓட்டிவந்தார். பின்னர் மணிகண்டன், அவரது நண்பர் பேரூரணி சமத்துவபுரத்தை சேர்ந்த பாலமுருகன் (31) மற்றும் 2 பேர் மது குடித்தனர். தொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்தவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மணிகண்டனை பிடித்து கீழே தள்ளி உள்ளனர்.

    இதில் காயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் இறந்தார்.

    இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில், பாலமுருகன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மணிகண்டனை தாக்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சண்முகம் கொலை வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை நேற்று கைது செய்தார்.

    மேலும் ஒருவர் கைது

    இந்நிலையில் இன்று காலை புதுக்கோட்டையை சேர்ந்த வேல்முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சுற்றுலா பயணிகள் கார் கண்ணாடியை உைடத்து திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • லேப்டாப், பாஸ்போர்ட், ஏ.டி.எம்.கார்டுகள் பறி முதல் செய்யப்பட்டது.

    கொடைக்கானல்:

    லக்னோ இந்திராநகரை சேர்ந்தவர் சுபானா க்ஸ்ரீவத்சவா(31). தற்போது இவர் பெங்களூர் பொம்மனஹள்ளி பகுதியில் வசித்து வருகிறார். தனது குடும்பத்துடன் கொடை க்கானலுக்கு சுற்றுலா வந்தார். பிரையண்ட் பூங்கா பகுதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுலா இடங்களுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு லேப்டாப் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சிஅடைந்தார்.

    இதுகுறித்து கொடை க்கானல் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த நிலையில் பைன்பாரஸ்ட் பகுதியில் உள்ள காரின் கண்ணாடிகள் உடைக்க ப்பட்டு திருடப்பட்டது குறித்து வனக்காவலர்கள் விசாரித்தனர். அப்போது தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அப்துல்ரசீத்(42) என்பவர் நூதனதிருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரிடமிருந்து லேப்டாப், பாஸ்போர்ட், ஏ.டி.எம்.கார்டுகள் பறி முதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை அருகே மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே குருந்தம்பட்டி பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 19). அய்யலூர் பகுதியில் உள்ள குளிர்பான கடையில் வேலை பார்த்து வருகிறார். இப்பகுதியில் உள்ள பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலகிருஷ்ணன், கடத்திச் சென்றார்.

    இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் வடமதுரை போலீசில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி. சிவக்குமார் உத்தரவின் பேரில் வடமதுரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போலீசார் 2 பேரையும் கரூர் அருகே மடக்கி பிடித்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். மேலும் சிறுமியை கடத்திய பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    விருத்தாசலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த ஆலடி சப்இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடியப்பட்டு கிராமத்தில் இருந்து லாரியில் அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி வந்த லாரியின் உரிமையாளர் பாலமுருகன் (வயது 30), டிரைவர் பாலகிருஷ்ணன் (26) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

    பின்னர் பாலகிருஷ்ணனை கைது செய்து கூழாங்கற்கள் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×