என் மலர்
நீங்கள் தேடியது "kolkatta"
- மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருக்கிறது என கூறியுள்ளார்.
- சுகந்தா மஜும்தார் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சுகந்தா மஜும்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதாவது, மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருப்பதாக கூறியுள்ளார். சோனாகாச்சி பகுதி, பாலியல் தொழிலுக்கு புகழ்பெற்ற இடமாகும். எனவே அவரது இந்தக் கருத்து மாநில அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, சோனாகாச்சியை சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் அங்குள்ள போலீசில் சுகந்தா மஜும்தாருக்கு எதிராக புகார் செய்துள்ளார். அதாவது, பாலியல் தொழிலாளர்களை இழிவுபடுத்தி இருப்பதாக அந்தப் புகாரில் அவர் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சுகந்தா மஜும்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, மஜும்தாரின் கருத்துக்கு மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர் மன்னிப்பு கேட்கவும் வலியுறுத்தினர்.
- கொல்கத்தாவில் சக ஓட்டுநர்கள் உடனான வாக்குவாதத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
- ராகுல் கழுத்தில் கொல்கத்தாவை சேர்ந்த நபர் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
கொல்கத்தாவில் தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் படியூர் ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்த ராகுல் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் சக ஓட்டுநர்கள் உடனான வாக்குவாதத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
ராகுல் கழுத்தில் கொல்கத்தாவை சேர்ந்த நபர் கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வௌியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










