search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்தியில் ஆட்சியை மாற்றுவோம் - மம்தா பானர்ஜி போர்க்குரல்
    X

    மத்தியில் ஆட்சியை மாற்றுவோம் - மம்தா பானர்ஜி போர்க்குரல்

    கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, மத்தியில் ஆட்சியை மாற்றுவோம் என வலியுறுத்தினார். #Mamata #AntiBJPRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். 
     
    இந்த கூட்டத்தில் மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

    பாஜக ஒவ்வொரு மாநிலமாக ஆட்சியை இழந்து வருகிறது. மோடி அரசின் காலாவதி தேதி முடிந்து விட்டது. மோடி அரசில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. மோடி அரசு நாட்டை அழித்துவிட்டது.

    மோடி ஆட்சியின் முடிவுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது. புதிய விடியல் வர உள்ளது. நாங்கள் ஒன்றாக இணைந்திருப்போம், இது உறுதி. நாட்டின் தேவையைக் கருதி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
     


    பாஜகவை அகற்றுவதே எங்கள் நோக்கம். தேர்தலுக்கு பின் பிரதமர் குறித்து முடிவெடுப்போம். மத்தியில் ஆட்சியை மாற்றுவோம்.

    மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோருக்கு பாஜக உரிய மதிப்பு அளிப்பதில்லை என தெரிவித்தார்.  

    இந்த கூட்டத்தில் பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியும் அமித்ஷாவும் வெற்றி பெற்று வந்தால் சர்வாதிகாரி ஹிட்லர் பாணியில் இந்த நாட்டை நாசப்படுத்தி விடுவார்கள் என குறிப்பிட்டார். #Mamata #AntiBJPRally
    Next Story
    ×