என் மலர்
நீங்கள் தேடியது "Nalini Chidambaram"
- சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகிறது.
- முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
புதுடெல்லி:
மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ ஆகியவை விசாரணை நடத்தின.
இந்நிலையில், இந்த வழக்கில் நடந்த பண மோசடியில் நளினி சிதம்பரம், முன்னாள் எம்.எல்.ஏ. திபேந்திரா பிஸ்வாஸ், முன்னாள் அசாம் எம்.எல்.ஏ., அஞ்சன் தத்தா ஆகியோருக்கு தொடர்பிருப்பதை அமலாக்கத்துறை உறுதி செய்தது. நேற்று நடந்த விசாரணையை அடுத்து நளினி சிதம்பரத்தின் ரூ. 3.30 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.


முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடிக்கும் சொத்துகள் வாங்கியதை வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறை புகார் கூறியது.
பின்னர். அவர்கள் 3 பேர் மீதும் கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் கோர்ட்டில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், விசாரணையின் போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்றும் நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செப்டம்பர் 14-ந் தேதி (அதாவது நேற்று வரை) நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் அந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்கள் நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்ததை அடுத்த மாதம் (அக்டோபர்) 12-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டனர். #PChidambaram
இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்துக்களின் விவரங்களை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது சென்னை எழும்பூர் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டது.
இவர்கள் மீது வருமான வரித்துறை, கருப்பு பணம் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை அல்லிக்குளத்தில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை கேட்டும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் அவரது மகன், மருமகள் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த 3 பேரும் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இந்த நிலையில், கருப்புப் பணம் தடுப்புச்சட்ட வழக்கு சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி மலர்விழி விசாரணையை அக்டோபர் 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #NaliniChidambaram
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துக்களை வாங்கியுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடிக்கும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடிக்கும் சொத்து வாங்கியுள்ளனர். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை.

நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் மட்டும் ஆஜராகினர். இதையடுத்து அவர்களுக்கு, வழக்கில் வருமான வரித்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ஆவணங்களின், குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #NaliniChidambaram #Srinidhi
மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த மிகப்பெரிய சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கு நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த இந்த சிட்பண்ட் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.

அந்த மனுவில் பெண்களை அவர்கள் இருப்பிடம் அன்றி வேறு இடத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப முடியாது என அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது கட்சிக்காரருக்காக வாதாடியதற்கு சம்பளம் பெற்றதற்காக வக்கீல்களை விசாரிக்க முடியாது என்றும் அதனை துவக்கத்திலேயே கிள்ளி எரிய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெண்களை வேறு பகுதிக்கு விசாரணைக்காக அழைக்க கூடாது என்பது அனைவருக்கும் பொருந்தாது என்றும், சூழ்நிலையைப் பொறுத்து மாறுபடும் எனவும் தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நளினி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த அசோக் புசான், ஏ.கே.ஷிக்ரி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. அதில் நளினி சிதம்பரத்துக்கு எதிராக பலவந்த நடவடிக்கைகள் எடுக்க கூடாது என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், நளினி சிதம்பரத்தின் இந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #SupremeCourt #NaliniChidambaram
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீது வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் ஜன் 25-ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகினர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, ஜூலை 23-ம் தேதி கார்த்திக் சிதம்பரத்தை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. #NaliniChidambaram #KartiChidambaram
மேற்கு வங்க மாநிலத்தில் நிறுவப்பட்ட சாரதா நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து மீண்டும் அவர்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ஈடுபட்டிருந்ததால் அம்மாநிலத்தின் ஆட்சியே ஆட்டம் கண்டது.
இந்த வழக்கு தொடர்பாக சாரதா நிதி நிறுவனத்தின் நிறுவனர் சுதீப்சா சென் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் மத்திய மந்திரியின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்தின் பெயர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தது. சாரதா சிட் பண்டு நிறுவனத்திடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோரஞ்சனா சிங் என்பவருக்கு அளிக்கப்பட்ட பண விவகாரத்தில் நளினி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக, ஏப்ரல் 7-ம் தேதி அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜரானார்.
இதையடுத்து, ஜூன் 20-ம் தேதி கொல்கத்தா அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. #EnforcementDirectorate #saradhachitprobe #nalinichidambaram






