என் மலர்
செய்திகள்

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
சென்னை:
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியைப் பெற்று மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ. 42 கோடி செலவில் தொலைக்காட்சி சேனல் வாங்கும் விவகாரத்தில் சாரதா குழுமத்துக்கு சட்ட உதவிகள் வழங்கியதற்காக நளினி சிதம்பரத்துக்கு ரூ.1.26 கோடி கட்டணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் நளினி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி உள்ளன.
இதற்கிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக நளினி சிதம்பரம் மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் நளினி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நளினி சிதம்பரத்தை கைதுசெய்ய தடை விதித்துள்ளது. #CBI #NaliniChidambaram
Next Story






