search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • டெல்லிக்கு நேரில் அழைத்து அமீரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக துருவித் துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.
    • அமீரை போன்று அரசியல் பிரமுகரையும் டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருவதாக கூறிக் கொண்டு 'சூட்டோ பெட்ரின்' போதைப் பொருளை கடத்திய ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சுருட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள் கடத்தலில் நேரடியாக ஈடுபட்டவர்கள் ஆவர். இந்த 5 பேரை தவிர போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கலாம் என்கிற சந்தேகம் அமலாக்கத்துறையினருக்கு ஏற்பட்டது.

    இது தொடர்பாக அவரோடு தொடர்பில் இருந்தவர்களை அமலாக்கத்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து உள்ளனர். அந்த வகையில் இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    டெல்லிக்கு நேரில் அழைத்து அமீரிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக துருவித் துருவி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2-வது முக்கிய புள்ளிக்கும் அமலாக்கத்துறையினர் குறி வைத்துள்ளனர். சினிமா வட்டாரத்தில் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த மேலும் சிலர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் அடுத்த கட்ட விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    அமீரை தொடர்ந்து அடுத்து சிக்கப்போகும் நபர் அரசியல் பிரமுகர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக்குக்கு அரசியல் ஆசையை தூண்டி விட்டு கோடிக்கணக்கில் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படும் அந்த அரசியல் பிரமுகரிடம் அமலாக்கத்துறையினர் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    குறிப்பிட்ட அந்த அரசியல் பிரமுகரிடம் முறைப்படி விசாரணை நடத்த முடிவு செய்துள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் அவருக்கு விரைவில் சம்மன் அனுப்ப உள்ளனர். அமீரை போன்று அரசியல் பிரமுகரையும் டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பான ஆதாரங்களை திரட்டியுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த விசாரணையின் போது ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் இருக்கும் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கிறோம்.
    • பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காரணத்தை கூறி மாவட்ட கலெக்டர்களுக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும் அதன் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தை சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழகத்தில் 34 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையில் மணல் குவாரிகளின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்த தொழில் அதிபர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் வீடுகளில் இருந்து கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 24 கிராம் எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அப்போது தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட கலெக்டர்கள் பாஸ்போர்ட், ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் நேரில் ஆஜராகி மணல் குவாரிகள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், மணல் குவாரிகள் மூலமாக கிடைத்த தொகையில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து விசாரிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லையே? சில தகவல்களைத் தானே கலெக்டர்களிடம் அமலாக்கத்துறையினர் கேட்கின்றனர் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

    அந்த மாவட்டத்தில் நடைபெறும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஆனால் கரூர், திருச்சி, அரியலூர், வேலூர் மாவட்டங்களுக்கும், அமலாக்கத்துறையின் முதல் தகவல் அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எந்த புகாரும் கிடையாது. வழக்கும் கிடையாது.

    பின்னர் எந்த அடிப்படையில் சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு கலெக்டர்கள் ஆஜராக முடியும்? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜூ, மணல் குவாரிகள் மூலமாக சட்ட விரோதமாக பெற்ற தொகையை வேறு ஒரு மாவட்டத்தில் உள்ள குவாரியில் முதலீடு செய்திருந்தால் என்ன செய்வது? அதை கண்டறிய வேண்டும் என்பதே அமலாக்கத்துறை விசாரணையின் நோக்கம் என்றனர்.

    குற்றம் எங்கு நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து விசாரணை நடத்தும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறையின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசும், கூடுதல் தலைமைச் செயலாளரும் மாவட்ட கலெக்டர்களும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவு பெற்றிருப்பது விசித்திரமானது மட்டுமின்றி அசாதாரணமானது. இது முற்றிலும் தவறானது என நாங்கள் கருதுகிறோம்.

    எனவே அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு மேற்கண்ட 5 மாவட்ட கலெக்டர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

    அப்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் காரணத்தை கூறி மாவட்ட கலெக்டர்களுக்கு எதிரான வழக்கை ஒத்தி வைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்தது. அதன்படி வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தேர்தலுக்கு பிறகு 5 மாவட்ட கலெக்டர்களும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏப்ரல் 25-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், கரூர் கலெக்டர் தங்கவேல், அரியலூர் கலெக்டர் ஆனி மேரி சொர்னா, தஞ்சை கலெக்டர் தீபக் ஜோக்கப், வேலூர் கலெக்டர் சுப்பு லட்சுமி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்.

    5 மாவட்ட கலெக்டர்களும் குவாரி அனுமதி ஆவணங்களுடன் உயர் அதிகாரி முன்பு ஆஜரான நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி அருகில் உள்ள கிளை மண்டல அலுவலகத்தில் இருப்பதால் அங்கு செல்லுமாறு விசாரணை இடத்தை திடீரென மாற்றினார்கள்.

    அதன்படி 5 மாவட்ட கலெக்டர்களும் ஒரே காரில் ஏறி பக்கத்தில் இருந்த அமலாக்கத்துறை கிளை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

    மணல் குவாரி டெண்டர் நடைமுறை விதிகளின்படி பின்பற்றப்பட்டதா? ஒவ்வொரு நாளும் விற்கப்படும் மணல் அளவு எவ்வளவு? அதற்கு முறையான அனுமதி கொடுக்கப்பட்டதா? குவாரியில் உள்ள கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டதா?

    எவ்வளவு பேருக்கு மணல் விற்கப்பட்டுள்ளது? அரசு அனுமதித்த அளவை விட கூடுதலாக மணல் எடுக்கப்பட்டு விற்கப்பட்டதா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் கலெக்டர்களிடம் கேட்கப்பட்டது.

    இதற்கு ஒவ்வொரு கலெக்டர்களும் சொன்ன பதில்கள் அனைத்தும் வாக்கு மூலமாக பதிவு செய்யப்பட்டது.

    • கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது.
    • கைது எதிராக உச்சநீதிமன்றம் மனு தாக்கல் செய்தபோது, உயர்நீதிமன்றம் மனுதாக்கல் செய்ய வலியுறத்தப்பட்டது.

    ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனுதாக்கல் செய்தார். அப்போது உச்சநீதிமன்றம் முதலில் அம்மாநில உயர்நீதிமன்றத்தை அணுகவும் எனக் கூறியது.

    இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி கைது செய்யப்பட்ட நிலையில், கைதை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான இறுதிகட்ட விசாரணை பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் நடைபெற்றது.

    அதன்பின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்காமல் உள்ளது. இதுவரை தீர்ப்பு வழங்காத நிலையில் தற்போது ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுள்ளார்.

    ஹேமந்த் சோரனிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கைது செய்வதற்கு முன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால், தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்ட நிலையில், நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

    • வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம்.
    • வருகிற 24-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது, நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து ரூ.4 கோடியும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் இருந்து ரூ.28 லட்சத்து 51 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த பணம் பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம். எனவே இது தொடர்பாக புகார் அளித்தும் அமலாக்கத்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், தேர்தலின் போது பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது.

    இருப்பினும், இது சம்பந்தமாக அமலாக்கத்துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, இந்த மனுவுக்கு வருகிற 24-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

    • சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன
    • டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

    "சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் பத்திரம், இந்து - முஸ்லீம், கோயில் - மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது" என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பாஜக தங்களை குறிவைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது.
    • கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

    கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கான இனிப்பு வகைகள் மற்றும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார் என அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இனிப்பு அதிகமாக சாப்பிட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து அதன்மூலம் ஜாமின் பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் சொல்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கு மிகப்பெரிய சதி நடக்கிறது என டெல்லி மாநில மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-

    பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். சர்க்கரையுடன் தேனீர் குடிப்பதாகவும், இனிப்புகள் சாப்பிடுவதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. அது முற்றிலம் பொய். கெஜ்ரிவால் கெஜ்ரிவால் செயற்கை இனிப்பை எடுத்து வருகிறார்.

    சர்க்கரை அளவு குறைவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அல்லது ஏதேனும் சாக்லேட் எடுத்துச் செல்லுமாறு டாக்டர்கள்களால் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். உருளைக்கிழங்குடன் பூரி சாப்பிடுவதாக அமலாக்கத்துறை சொல்கிறது. இவ்வளவு பொய் சொன்னதற்காக அமலாக்கத்துறை கடவுளுக்கு பயப்பட வேண்டும். நவராத்தியின் முதல் நாளில் மட்டும் பூரி சாப்பிட்டார். வீட்டு உணவை நிறுத்துவதற்காக இந்த பொய்கள் எல்லாம் அமலாக்கத்துறை மற்றும் பா.ஜனதாவல் பரப்பப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் இருந்து கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300 mg/dl-க்கு அதிகமாக உள்ளது. ஆனால் திஹார் ஜெயில் அதிகாரிகளால் இன்சுலின் மறுக்கப்படுகிறது. வீட்டில் சமைத்த உணவை நிறுத்தி கெஜ்ரிவாலை கொல்ல சதி நடக்கிறது.

    இவ்வாறு அதிஷி தெரிவித்துள்ளார்.

    • அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் அளிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.
    • இதுதொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    புதுடெல்லி:

    டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 21-ம் தேதி கைதுசெய்தனர்.

    இதற்கிடையே, தனக்கு ஜாமின் அளிக்க வேண்டும் என கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் பெறுவதற்கு வசதியாக மாம்பழங்கள் மற்றும் இனிப்புகளை அதிகளவில் சாப்பிட்டு வருகிரார். அதன்மூலம் சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் என்றும், அதன்மூலம் அவர் ஜாமின் பெற முயற்சி செய்கிறார் என்றும் அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறை வேண்டுமென்றே இதுபோன்ற புகார்களை முன் வைக்கிறது என கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

    இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்படும் உணவு குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

    • நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு உள்ளது.
    • அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

    மும்பை:

    நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு உள்ளது. அமலாக்கத்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ராவின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஜுகுவில் ஷில்பா ஷெட்டி பெயரில் உள்ள வீடு, புனேயில் உள்ள பங்களா மற்றும் ராஜ்குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.

    • போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளை பொறுத்தவரை இந்த வழக்கை மிகவும் சாதுர்யமாக எடுத்துச் செல்கிறார்கள்.
    • ஜாபர் சாதிக்கின் செல்போன் உரையாடல்களில் பண விவகாரங்கள், பணபரிமாற்றங்கள் பற்றியும் பேசப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    புதுடெல்லி:

    ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்குக்கு நீதிமன்ற காவல் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக முதல்கட்ட குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.

    இந்த வழக்கில், சூடோபெட்ரின் வேதிப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி இதில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், அதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலேயே போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவசரம் அவசரமாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

    போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளை பொறுத்தவரை இந்த வழக்கை மிகவும் சாதுர்யமாக எடுத்துச் செல்கிறார்கள். வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட இயக்குனர் அமீரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, வழக்கை வலுப்படுத்துவதற்கான ஆதாரங்களை அதிகரிக்க வேண்டிய சூழல் அவர்களுக்கு ஏற்பட்டது.

    இதன்பிறகுதான் ஜாபர் சாதிக்கின் குரல் மாதிரிகளை கோர்ட்டில் அனுமதி பெற்று பதிவு செய்துள்ளனர். அவை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. செல்போனில் பதிவானது அவரது குரல்தான் என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திய பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என காத்திருக்கிறார்கள். அதற்கு முன்னதாக செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகளிலும் கவனமாக இருக்கிறார்கள்.

    ஜாபர் சாதிக்கின் செல்போன் உரையாடல்களில் பண விவகாரங்கள், பணபரிமாற்றங்கள் பற்றியும் பேசப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுபற்றி அவருடன் பேசிய நபர்களை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    குரல் மாதிரி பரிசோதனை முடிவுகள் வந்ததும் சம்பந்தப்பட்ட அந்த நபர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறார்கள். இதன்படி இயக்குனர் அமீரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளும் இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் குரல் பரிசோதனை அறிக்கைகளைப் பெற்று, அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை பிடிக்க பூனைபோல காத்திருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மதுபான கொள்கை மூலம் பெற்ற பணத்தை கோவா, பஞ்சாப் தேர்தல் பயன்படுத்தியதாக ஆம் ஆத்மி மீது குற்றச்சாட்டு.
    • கோவா தேர்தலின்போது ஆம் ஆத்மியின் நிதியை நிர்வகித்தவர் சன்பிரீத் சிங் என அமலாக்கத்துறை குற்றச்சாட்டு.

    டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். லைசென்ஸ் வழங்குவதற்கு பதிலாக சுமார் 100 கோடி ரூபாய் பணம் பெற்றதாகவும் இந்த பணம் கோவா, பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக செலவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் நேற்று அமலாக்கத்துறை சன்பிரீத் சிங் என்பரை கைது செய்துள்ளது. இவர் கோவா தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சியின் நிதியை நிர்வகித்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சன்பிரீத் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவலில் எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால் சன்பிரீத் சிங் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜனதா கட்சிகளுக்காக வேலை செய்துள்ளார். தற்போது ஆம் ஆத்மி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில மந்திரி சவுரப் பரத்வாஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக சவுரப் பரத்வாஜ் கூறுகையில் "அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சன்பிரீத் சிங் கடந்த வருடம் ஏற்கனவே சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர். அவர் தானாகவே சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த வருடம் ஜாமின் பெற்றார். தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சன்பிரீத் வெளியில் இருந்து கொண்டு (freelancer) பல கட்சிகளுக்கு வேலைப்பார்த்துள்ளார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு, அதையும் தாண்டி பா.ஜனதாவுக்காகவும் வேலைப் பார்த்துள்ளார். இதை நான் இங்கே சொல்லவிலை. சிபிஐ ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

    இது ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை களங்கப்படுத்தும் முயற்சியாகும். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கட்சிக்கு எதிராக உருவாக்கும் குற்றச்சாட்டை நம்ப மக்கள் தயாராக இல்லை. பா.ஜனதா அரவிந்த் கெஜ்ரிவால் பெயரை இழிவுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது" என்றார்.

    • டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார்
    • கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் இன்று (ஏப்ரல் 15) வரை நீடிக்கப்பட்டுள்ளது.

    திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு கடந்த 9-ந்தேதி தள்ளுபடி செய்தது.

    மேலும் கைது நடவடிக்கையில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், உரிய காரணங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் அமலாக்கத் துறை காவலுக்கு உத்தரவிட்டதாகவும் டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்தது.

    கைது செய்யப்பட்டதை உறுதி செய்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 10-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். மேல் முறையீடு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் முறையிடப்பட்டது.

    இந்த நிலையில் கெஜ்ரிவாலின் மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி, தற்போது இந்த கைது காரணமாக கேஜ்ரிவாலால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை. ஆகவே விரைவாக இவ்வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக வரும் 19-ம் தேதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கைதுக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு இவ்வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 23ம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
    • முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.

    2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி இருந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடி மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை தெரிவித்தது.

    இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்திற்கான தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.

    இதை விசாரித்த தீர்ப்பாயம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் சொத்துக்கள் மற்றும் பங்குகளை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை முடக்கிய நடவடிக்கை செல்லும் என உத்தரவிட்டது.

    எனவே டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்த எவ்வித தடையும் இல்லை என தீர்ப்பாய உத்தரவின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

    ×