என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 2019-இல் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு ரூ. 2,150 கோடி திரட்டியது.
    • இந்த நோட்டீஸ் ரூ.468 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை தொடர்பானதாகக் கூறப்படுகிறது.

    கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள அரசு 2019 ஆம் ஆண்டு மசாலாப் பத்திரங்களை வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டில் இதுபோன்ற பத்திரங்களை வெளியிட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா ஆனது.

    கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் 2019-இல் லண்டன் பங்குச்சந்தையில் மசாலா பத்திரங்களை வெளியிட்டு ரூ. 2,150 கோடி திரட்டியது.

    இந்த நிதியை சட்டவிரோதமாக திசை திருப்பியதாகவும், அந்நிய செலாவணி விதிமுறைகளை மீறியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீஸ் ரூ.468 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை தொடர்பானதாகக் கூறப்படுகிறது.

    அதே வழக்கில், பினராயி விஜயன், அவரது தனிச் செயலாளர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோருக்கும் பெமா சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அடுத்தாண்டு கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பினராயி விஜயனுக்கு அனுப்பப்பட்ட சம்மன்  பாஜகவின் அரசியல் விளையாட்டு என ஆளும் இடதுசாரி கூட்டணி விமர்சித்துள்ளது.  

    • யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இடம் பெற்றிருந்தனர்.
    • 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் ஏ.ஜே.எல். நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.

    2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'யங் இந்தியன்' நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா்.

    இதையடுத்து ஏ.ஜே.எல். நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து அந்தக் கடன் தொகைக்காக ஏ.ஜே.எல்.நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்றதா என்று கண்டறிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏ.ஜே.எல். நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடன் அளித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

    குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்காா் பொ்னாண்டஸ், யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர், ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் யங் இந்தியன் நிறுவனம் மீதும் சதி மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத்துறை முன்வைத்தது.

    இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக டெல்லி கோர்ட்டில் தொடா் விசாரணையை மேற்கொண் டது. அமலாக்கத் துறையிடம் சில விளக்கங்களையும் கேட்டது.

    இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

    ராகுல், சோனியா மீது புதிய வழக்கு

    இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கோர்ட்டில் இந்த வழக்கை ஒத்திவைத்த மறுநாள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

    • சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    • ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த வாரம் திங்கள்கிழமை நடந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இருவர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) விசாரித்து வருகிறது. இது தற்கொலைப்படை தாக்குதல் என NIA நேற்று அறிவித்தது. சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    குண்டுவெடிப்புக்குக் காரணமான டாக்டர் உமர் உன் நபி உட்படப் கைது செய்ப்பட்ட மருத்துவர்கள் பணியாற்றிய அரியானாவின் அல்பலா பல்கலைக்கழகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுத்தன.

    இந்நிலையில் டெல்லி போலீசார் பதிந்த எப்ஐஆரின் அடிப்படையில் நேற்று அல்பலா பல்கலைக்கழகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இதன்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் அல்பலா குழும தலைவர் ஜவாத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

    பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகம், யுஜிசி அங்கீகாரத்தைப் பொய்யாகக் கோரியுள்ளது என்றும் அல்பலா பல்கலைக்கழகம் யுஜிசி மானியங்களைப் பெற தகுதியற்றது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழக அறக்கட்டளையின் மூலம் திரட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிதி அவரது குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களுக்குத் திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

    • ஜேபி இன்ப்ராடெக் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானது.
    • மனோஜ் கவுருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

    பிரபல ஜேபி குழு (Jaypee Group) நிர்வாக இயக்குனர் மனோஜ் கவுர், ஜேபி இன்ப்ராடெக் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

    இந்நிலையில், மனோஜ் கவுர் இன்று அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஜேபி இன்ப்ராடெக் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு திவாலானது, அதன் பிறகு பல சட்ட சிக்கல்களை ஜேபி நிறுவனம் எதிர்கொண்டு வருகிறது.

    மேலும், மனோஜ் கவர் பலரிடம் வீடு வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை வசூலித்துவிட்டு வீடு வழங்காமல் ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது.

    அதன்படி, இந்த கைது நடவடிக்கை ஜேபி நிறுவனத்தின் நிதி மோசடி விசாரணையின் ஒரு பகுதியாகும்.

    முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதத்தில் டெல்லி, நொய்டா, காஜியாபாத் உள்பட மனோஜ் கவுருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.

    இதில், சுமார் ரூ.1.70 கோடி பணம், ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்து ஆணவங்கள் உள்ளிட்டவையை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

    இந்த நிலையில், நீண்டகாலமாக நடந்து வரும் ஜேபி குழுமத்தின் நிதி மோசடி விசாரணையின் கீழ், மனோஜ் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.
    • ஸ்ரீகாந்த் வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.

    சென்னை:

    போதை பொருட்களை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் நுங்கம்பாக்கம் லேக் வியூ பகுதியை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்தை கடந்த ஜூன் 23-ந்தேதி சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் போதை பொருள் பயன்படுத்தியதாக மற்றொரு நடிகரான கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்தனர்.

    நடிகர் ஸ்ரீகாந்த் அடிக்கடி கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரிடம் அதிகளவில் பணம் கொடுத்து போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதனால் சட்டவிரோத பணம் அதிகளவில் பரிமாற்றம் செய்து இருந்ததும் போலீசார் நடத்திய விசாரணை மூலம் உறுதியானது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதற்கட்டமாக கடந்த மாதம் 28-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்துக்கும் 29-ந்தேதி நடிகர் கிருஷ்ணாவுக்கும் அமலாக்கத்துறை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினர்.

    அந்த சம்மனை ஏற்று கிருஷ்ணா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரி முன்பு நேரில் ஆஜரானார்.

    இதற்கிடையே கடந்த 28-ந்தேதி உடல் நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராக முடியவில்லை என்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கத்துறைக்கு தெரிவித்திருந்தார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வரும் 11-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்த் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு வங்கி கணக்கு விபரங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று 2-வது முறையாக சம்மன் அனுப்பி இருந்தனர்.

    இந்த சம்மனை தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை விசாரணைக்காக நேரில் ஆஜர் ஆனார்.

    அவரிடம் எந்தந்த நடிகைகளுக்கு போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது. அதன் மூலம் கிடைத்த பணம் எவ்வளவு என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளைக் கேட்டு விசரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
    • விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு ஸ்ரீகாந்த் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    போதைப் பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமீனில் உள்ள அவர்கள் இருவர் மீதும் முறைகேடான பண பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    அவர்களை கடந்த 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் கேட்டு நடிகர் ஸ்ரீகாந்த் சார்பில் அமலாக்கத் துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நடிகர் கிருஷ்ணா அமலாக்கத் துறையின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்துக்கு மேல் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், நவம்பர் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2-வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இந்த சம்மனை ஏற்று நடிகர் ஸ்ரீகாந்த் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
    • ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்தது.

    சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

    சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்தது.

    இந்நிலையில், சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்திய வழக்கில் சுரேஷ் ரெய்னாவின் ரூ.6.64 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும், ஷிகர் தவானின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

    • 2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் மீது குற்றச்ட்டு எழுந்தது.
    • பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    கடன் மோசடி வழக்கு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

    நவம்பர் 14 ஆம் தேதி அவர் முன்பு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதுகுறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 2025 இல் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

    • ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
    • எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

    தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு 2,538 பணியாளர்கள் நியமன ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

    ஒவ்வொரு பணிக்கும் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.

    அரசு வேலை பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகாரில், எந்தத் தவறும் செய்யவில்லை என அந்த துறையின் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறைக்கு ஆள்தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது தொடர்பான வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அமலாக்கத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    • தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.
    • அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மத்திய வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி ஆலோசனை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்தபின் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும், அது குறித்து ஆய்வு செய்யுமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.

    முறைகேடு நடந்ததா? என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை. விசாரணையில் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்து காட்டுவோம்.

    தி.மு.க.வை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தி.மு.க.வில் மூத்த தலைவர்களை ஓரங்கட்டும் வேலையை யாரும் செய்யவில்லை.

    தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவ்வளவுதான். எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை தி.மு.க.வின் பி.டீம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமி அவர் வாயில் வந்ததை பேசிக்கொண்டு உள்ளார்.

    சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேர்மையாக நடந்தால் சரியாக இருக்கும். ஆனால் வேண்டுமென்றே பல வாக்காளர்களை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், நீக்குவதையும் தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

    • சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.
    • அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.

    தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.

    * அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?

    * சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?

    * சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா?

    * மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது.

    * மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? என்று கேள்வி எழுப்பியது.

    டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் குற்றம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்த ஊழல் குறித்து மாநில போலீஸ் விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.

    ஊழியர்களின் செல்போன் தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல்.

    அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்நிலையில், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

    • சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?
    • டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.

    தமிழக அரசின் மது விற்பனை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டுபிடித்து இருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

    அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க கோரி தமிழக அரசு சார்பிலும், 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்தும், சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியது.

    * அமலாக்கத்துறை விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது இல்லையா?

    * சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா?

    * சந்தேகம் இருந்தாலே அரசு அலுவலகத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்து செல்வீர்களா?

    * மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது.

    * மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்று சந்தேகம் எழுந்தால் உடனடியாக அமலாக்கத்துறை தலையிடுமா? என்று கேள்வி எழுப்பியது.

    டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் குற்றம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்த ஊழல் குறித்து மாநில போலீஸ் விசாரிக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

    டாஸ்மாக் நிறுவனத்திற்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன்களை வலுக்கட்டாயமாக அமலாக்கத்துறையினர் பறித்துள்ளனர்.

    ஊழியர்களின் செல்போன் தரவுகளை அனுமதியின்றி பதிவிறக்கம் செய்தது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல்.

    அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட் பலமுறை அறிவுறுத்தியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுப்படுவதில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

    ×