என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருமானவரித் துறை"

    • அமலாக்கத்துறை 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது 6,444 பணமோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
    • 3,345 வழக்குகளை வருமான வரி துறையே திரும்பப்பெற்றது.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் என்டிஏ அரசு 2014-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்த புள்ளிவிரங்களை மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    அதன்படி 2014 முதல் தற்போதுவரை, அமலாக்கத்துறை 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது 6,444 பணமோசடி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. அதில் 2,416 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. அதே காலகட்டத்தில் 11,106 சோதனைகளை நடத்தியுள்ளது.

    ஆனால் இந்த 11 ஆண்டுகளில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றங்கள் 56 வழக்குகளில் 121 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

    அதேநேரம் வருமான வரி துறை, இந்த 11 ஆண்டுகளில், 13,877 வழக்குகளைப் பதிவு செய்து 9,657 சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த வழக்குகளில் 522 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டனர். 963 பேர் குற்றவாளி அல்ல என விடுவிக்கப்பட்டனர். மேலும் 3,345 வழக்குகளை வருமான வரி துறையே திரும்பப்பெற்றது.

    பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ரூ.30,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும், 2025-26 நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரூ.15,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 2005 முதல் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 8,100 வழக்குகளில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

    வருமானவரித் துறையினர், அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தும்போது கட்சி பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. #ElectionCommission
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டு வாடாவைத் தடுக்க வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபடுகிறார்கள்.

    பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அளிக்கும் தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளை மட்டுமே குறி வைத்து இந்த சோதனை நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    முதலில் கர்நாடகாவில் குமாரசாமி உறவினர், கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை நடந்தது. அதில் பல கோடி ரூபாய் சிக்கியது.

    இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடந்தது. அதில் ரூ.11 கோடி கணக்கில் வராத பணம் கிடைத்தது.

    நேற்று மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி கமல்நாத் உதவியாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. அதில் ரூ.14 கோடி பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இத்தகைய சோதனைகள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வருவாய் துறை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

    அதில், “வருமானவரித் துறையினர், அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தும்போது கட்சி பாகுபாடின்றி நடந்து கொள்ள வேண்டும். மேலும் யார் வீட்டில் சோதனை நடந்தாலும் நடுநிலையை கடை பிடிக்க வேண்டும்“ என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

    இது தவிர இனி சோதனை நடத்தும்போது தேர்தல் அதிகாரிகளிடம் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. #ElectionCommission
    ×