search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money laundering case"

    • பெண்களை மிரட்டி பணம் பறித்ததாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு.
    • உதவியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஷேக் ஷாஜகான் தலைமறைவாக உள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள சந்தேஷ்காளி என்ற பகுதியில் ஷேக் ஷாஜகான் என்பவர் பெண்களின் சொத்துகளை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பெண்களை கூட்டு பாலியல் செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தியதால் இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    ஷேக் ஷாஜகானை திரிணாமுல் காங்கிரஸ் பாதுகாக்கிறது என பா.ஜனதா குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஷேக் ஷாஜகான் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது. அத்துடன் அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்பான ஆறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த மாதம் 5-ந்தேதி ரேசன் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது, ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சந்தேஷ்காளி விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் ஷேக் ஷாஜகானின் உதவியாளரக்ள் ஷிபு ஹஸ்ரா, உத்தம் சர்தார் ஆகியோரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த போதிலும் ஷேக் ஷாஜகான் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அமைக்கப்பட்டுள்ள முகாமில் புகார் அளிக்கலாம் என போலீசார தெரிவித்துள்ளனர்.

    • சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறையால் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.
    • வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிபதி முன் ஆஜரான அவர், உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பது நல்லது என்றார்.

    மும்பை:

    ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவராக நரேஷ் கோயல் இருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனம் திடீரென நிதி நெருக்கடியில் சிக்கி தவித்ததால் தனது செயல்பாட்டை நிறுத்தியது. தலைவர் பதவியில் இருந்து நரேஷ் கோயல் விலகினார்.

    இதற்கிடையே, அவர் கனரா வங்கியில் இருந்து ரூ.538 கோடி வாங்கி அதனை கட்டாமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக வங்கி சார்பில் நரேஷ் கோயல் மீது புகார் கொடுக்கப்பட்டது. அவர் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதால் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் அவர் மீதும், மனைவி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக அமலாக்கத் துறை நரேஷ் கோயலை கைதுசெய்தது. அதன்பின் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    தற்போது 71 வயதாகும் அவர் கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறார். உடலில் நடுக்கம், முழங்கால்களில் வீக்கம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வழியாக ரத்தம் வெளியேறுதல், 2 கால்களையும் மடக்கமுடியாமல் அவதி உள்பட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

    இந்நிலையில், வழக்கு தொடர்பாக நரேஷ் கோயல் சிறப்பு நீதிபதி மொஜிதேஷ்பாண்டே முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரால் சரிவர நிற்கக்கூட முடியவில்லை. உடல் நடுக்கத்துடன் காணப்பட்டது. நீதிபதி முன் அவர் கை கூப்பியபடி நின்றார்.

    விசாரணையின்போது அவர் தனது உடல்நிலையை எடுத்துச் சொல்லி நான் வாழ்க்கையின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். எனது மனைவி படுத்த படுக்கையாக உள்ளார். அவரைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. இனி நான் உயிரோடு இருப்பதை விட ஜெயிலில் இறப்பதே நல்லது எனக்கூறி கதறி அழுதார்.

    இதைக்கேட்ட நீதிபதி மனம் மற்றும் உடல்நலம் பாதுகாக்கப்படும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவரது வக்கீல்களுக்கு உத்தரவிட்டார்.

    • ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
    • இதில் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.

    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா. இவர் 2001 முதல் 2011 வரை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.112 கோடி அளவிற்கு மோசடி செய்ததாக பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே கையகப்படுத்தியது.

    இந்நிலையில், ஸ்ரீநகர் கோர்ட்டில் பரூக் அப்துல்லாவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பணமோசடி வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 27-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பரூக் அப்துல்லா ஏற்கனவே கடந்த மே மாதம் 31-ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது நில மோசடி வழக்கு உள்ளது.

    குர்கான், பீகானிரில் நிலம் வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக அவர் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

    இதேபோல லண்டனில் ரூ.19 கோடி மதிப்புடைய சொத்துக்களை வாங்கியதிலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா மீது உள்ளது.

    இந்த வழக்குகளில் கைதாகாமல் இருக்க அவர் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முன்ஜாமீன் பெற்று இருந்தார். அப்போது விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்க வேண்டும், அனுமதியின்றி வெளிநாடு செல்ல கூடாது என்பது போன்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இந்த முன்ஜாமீனை ரத்து செய்ய கோரியும், வெளிநாடு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை ஜூன் 3-ந்தேதி ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே வெளிநாட்டில் சட்ட விரோத சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக வதேராவுக்கு அமலாக்கத்துறை நேற்று புதிய சம்மனை அனுப்பி இருந்தது. இன்று ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து இன்று காலை10.30 மணியளவில் ராபர்ட் வதேரா டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன்பு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    முன்னதாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    நீதித்துறையை நான் மிகவும் மதிக்கிறேன். நான் இதுவரை 11 முறை ஆஜராகி இருக்கிறேன். 70 மணி நேரம் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. எதிர்காலத்திலும் நான் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். என் மீது கூறப்பட்டுள்ளது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

    இவ்வாறு வதேரா கூறியுள்ளார்.
    சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த முன்ஜாமீனை ரத்து செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வலியுறுத்தியது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேரா, லண்டனில் சுமார் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக பொருளாதார அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    இவ்வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கியபோது அனுமதி பெறாமல் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என நிபந்தனை விதித்திருந்தது.

    இதற்கிடையில், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு டெல்லி ரோவ்ஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா சமீபத்தில் மனு செய்திருந்தார்.


    லண்டன் பங்களா

    இந்நிலையில், ராபர்ட் வதேராவுக்கும் இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது நண்பர் மனோஜ் அரோராவுக்கும் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சட்டவிரோதமான பணப் பரிமாற்றம் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ராபர்ட் வதேரா சரியாக ஒத்துழைப்பு அளிப்பதில்லை. அதனால், அவரை விசாரணை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது.

    எனவே, இந்த வழக்கின் தன்மை அறியாமல்  ராபர்ட் வதேராவுக்கும் அவரது நண்பர் மனோஜ் அரோராவுக்கும் விசாரணை நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறையின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறையின் கோரிக்கை தொடர்பாக பதிலளிக்குமாறு ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி சந்திர சேகர் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
    சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களை ராபர்ட் வதேராவிடம் 5 நாளில் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #RobertVadra #ED
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனருமான ராபர்ட் வதேரா மீது 2 வழக்குகள் இருக்கிறது.

    லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது, ராஜஸ்தான் மாநிலம் பீகானிரில் நிலம் வாங்கியது ஆகிய 2 வழக்குகள் வதேரா மீது அமலாக்கத்துறை பதிவு செய்து உள்ளது.

    சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கு தொடர்பாக அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. டெல்லி, ஜெய்ப்பூரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும், தன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் அமலாக்கத்துறை வழங்க கோரி ராபர்ட் வதேரா டெல்லி கோர்ட்டில் கடந்த 23-ந்தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.



    இந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகலையும் 5 தினங்களில் ராபர்ட் வதேராவிடம் வழங்க வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. #RobertVadra #ED
    சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவத்தின் 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பொருளாதார அமலாக்கத்துறை இன்று முடக்கியது. #EDattaches #RobertVadra #Bikanerlandscam
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் நகரில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டில் மிகவும் குறைந்த விலையில் நிலங்களை வாங்கியது. பின்னர், அதிக விலைக்கு அந்த நிலம் ஒரு நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

    இதில் நடைபெற்றுள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



    இந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா தனது தாய் மவ்ரீனுடன் சமீபத்தில் தொடர்ந்து விசாரணைக்குஆஜரானார்.  அவர்களிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், இவ்விவகாரத்தில் புதிய திருப்பமாக ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி  நிறுவத்துக்கு சொந்தமான 4.62 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பொருளாதார முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் இன்றிரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.  #EDattaches #RobertVadra #Bikanerlandscam
    லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 3வது முறையாக இன்று விசாரணைக்கு ஆஜரானார். #RobertVadra

    புதுடெல்லி:

    சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது சட்ட விரோத பண மாற்ற வழக்குகள் உள்ளன. இதுபற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

    முதலில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்க மறுத்தார். டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் விசாரணைக்கு வர சம்மதித்தார்.

    கடந்த புதன்கிழமை முதன் முதலாக ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அன்று அவரிடம் அதிகாரிகள் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினார்கள். லண்டனில் சட்ட விரோதமாக வாங்கி உள்ள  சொத்துக்கள் பற்றி ராபர்ட் வதேராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

    மறுநாள் வியாழக்கிழமையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வதேரா ஆஜரானார். அன்றைய தினம் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அன்று ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரியுடன் உள்ள தொடர்பு பற்றி தகவல் பரிமாற்ற ஆதாரங்களை காட்டி அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    ராபர்ட் வதேராவிடம் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அவர் கைப்படவே பதில் எழுதி தரவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் முதல் கட்டமாக நடந்த விசாரணை சுமார் 14 மணி நேரம் நீடித்தது.

    இந்த நிலையில் நேற்று ராபர்ட் வதேரா விசாரணைக்கு அழைக்கப்பட வில்லை. ஆனால் இன்று அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது. அதை ஏற்று 3-வது நாளாக இன்று (சனிக் கிழமை) ராபர்ட் வதேரா ஆஜரானார்.

    காலை 10.45 மணிக்கு அவர் தனது காரில் மத்திய டெல்லியில் உள்ள ஜாம்நகர் அவுஸ் அலுவலகத்துக்கு வந்தார். 11 மணிக்கு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினார்கள்.

    லண்டனில் சொத்துக்கள் வாங்கியது எப்படி என்று அதிகாரிகள் இன்று மீண்டும் விசாரணை நடத்தினார்கள். அதற்கான பண பரிமாற்றம் நடந்தது பற்றியும் கேட்டனர். மேலும் பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்களின் ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்டனர்.

    ஆனால் தனக்கு லண்டனில் எந்த சொத்தும் இல்லை என்று ராபர்ட் வதேரா தொடர்ந்து கூறி வருகிறார். இது தொடர்பான அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

    இதற்கிடையே வருகிற 12-ந்தேதி ராபர்ட் வதேரா ராஜஸ்தான் மாநிலம் சென்று ஜெய்ப்பூரில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் நில மோசடி தொடர்பான வழக்கில் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடத்தும் அடுத்தடுத்து விசாரணைகளால் ராபர்ட் வதேரா கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று அவர் அமலாக்கத்துறை விசாரணைக்கு வந்தபோது சற்று சோர்வாக காணப்பட்டார்.

    இந்த நிலையில் ராபர்ட் வதேராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்துவது பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அதற்கு ராகுல் கூறுகையில், “எனக்கு அதுபற்றி கவலையில்லை. ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தட்டும் அல்லது சிதம்ரபத்திடம் விசாரணை நடத்தட்டும் அதுபோல ரபேல் போர் விமான ஒப்பந்த மோசடி பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்.” என்றார். #RobertVadra

    சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். #RobertVadra #ED
    புதுடெல்லி:

    மன்மோகன்சிங் தலைமையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது.

    இந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா காங்கிரஸ் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அரசு நிலத்தை தனது நிறுவனத்துக்கு வாங்கி ராபர்ட் வதேரா அதிக விலைக்கு விற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பிறகு அவர் ராணுவம், பெட்ரோலியம், நிலக்கரி உள்பட பல்வேறு அமைச்சகங்களில் ஒப்பந்தம் பெற்றுக் கொடுக்க பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    மேலும் அவர் லஞ்சப் பணத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக லண்டனில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    சமீபத்தில் இந்த விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சார்பில் ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வந்தார்.

    இதையடுத்து அமலாக்கத்துறை அவரை கைது செய்யும் என்று தகவல் வெளியானது. உடனடியாக ராபர்ட் வதேரா டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு செய்தார். கடந்த 2-ந்தேதி இந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட்டு பிப்ரவரி 16-ந்தேதி வரை ராபர்ட் வதேராவை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.

    அதே சமயத்தில் அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலை அவருக்கு ஏற்பட்டது.

    நேற்று பிற்பகல் 3.47 மணிக்கு டெல்லி ஜாம் நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார்.

    கடந்த மாதம் 23-ந் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா தனது வெள்ளை நிற டொயட்டோ காரில் ராபர்ட் வதேராவை அழைத்து வந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் விட்டு சென்றார். இதுபற்றி அவர் கூறுகையில், ராபர்ட் வதேரா எனது கணவர். அவர்தான் என் குடும்பம். அவருக்கு ஆதரவாக நான் இருப்பேன்” என்றார்.

    இதற்கிடையே அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சென்ற ராபர்ட் வதேராவை அமலாக்கத்துறை இணை இயக்குனர் மற்றும் இரண்டு உதவி இயக்குனர்கள் தலைமையிலான குழு ஒன்று விசாரிக்க தொடங்கியது. ராபர்ட் வதேராவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் நேற்று கேட்கப்பட்டன.


    ஒவ்வொரு கேள்விக்கும் ராபர்ட் வதேரா தன் கைப்பட எழுத்துப்பூர்வமாக பதில் எழுதி தரும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் விசாரணை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. ராபர்ட் வதேராவிடம் அதிகாரிகள் லண்டனில் உள்ள 9 சொத்துக்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

    இதில் 2 சொத்துக்களின் மதிப்பு ரூ.85 கோடியாகும். மற்ற 7 சொத்துக்களின் மதிப்பு தெரியவில்லை. ஆனால் ராபர்ட் வதேரா தனக்கு லண்டனில் எந்த சொத்தும் இல்லை என்று மறுத்தார். இதுபற்றி அவர் விரிவாக எழுதி கொடுத்துள்ளார்.

    ஆயுத புரோக்கர் சஞ்சய் பண்டாரி பற்றி தெரியுமா? என்றும் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கும் அவர் தெரியாது என்றே பதில் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து சட்ட விரோத பணப்பரிமாற்றங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. நேற்று இரவு 9.40 மணிக்குதான் விசாரணை முடிந்தது. அதன் பிறகு ராபர்ட் வதேரா தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அதே வெள்ளை நிற டொயட்டோ கார் அவரை அழைத்து சென்றது.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) ராபர்ட் வதேரா 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். இதற்காக அவர் 11.25 மணிக்கு ஜாம்நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தார்.

    அவருக்கு முன்னதாக அவரது வக்கீல்கள் அங்கு வந்து காத்திருந்தனர். அவர்களுடன் அதிகாரிகள் முன்பு ராபர்ட் வதேரா ஆஜரானார். அதன்பிறகு வதேராவை அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    இன்றும் அவரிடம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்து அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள். லண்டனில் உள்ள 9 சொத்துக்களும் வேறு வேறு பெயர்களில் எப்படி வாங்கப்பட்டது என்று இன்றும் அவரிடம் துருவி துருவி விசாரணை நடந்தது.

    இன்று மதியத்துக்கு பிறகும் வதேராவிடம் விசாரணை நீடித்தது. அவர் அளித்த சில தகவல்கள் வாக்குமூலமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சொத்துக்கள் வாங்கியதற்கு பணம் எங்கிருந்து வந்தது? என்பதுதான் அமலாக்கத்துறையின் முக்கியமான கேள்வியாக உள்ளது. அதற்கு வதேரா எத்தகைய பதில் அளித்து உள்ளார் என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே ராபர்ட் வதேரா வருகிற 12-ந்தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நடந்த அரசு நிலம் மோசடி தொடர்பாக வதேராவிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது.

    இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகி உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் வதேராவை மத்திய அரசு துன்புறுத்துவதாக கூறி பிரியங்கா பிரசாரத்தை தீவிரப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. #RobertVadra #ED
    அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசியது தொடர்பாக கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். #Karnataka #JanardhanaReddy
    பெங்களூரு:

    அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க நிதி நிறுவன அதிபரிடம் ரூ.20 கோடி பேரம் பேசி 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே கனகநகரில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சையத் அகமது பரீத். இவர், தான் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்திருந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருந்தார்கள்.

    இதுதொடர்பாக பரீத் மீது அமலாக்கத்துறையில் வழக்கும் பதிவானது. இந்த வழக்கில் இருந்து விடுபடவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும், பா.ஜனதாவை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டியின் உதவியை பரீத் நாடியுள்ளார். அமலாக்கத்துறை வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க பரீத்திடம் ரூ.20 கோடி பேரம் பேசியதுடன், பணத்திற்கு பதிலாக 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தனரெட்டி பெற்றுவிட்டு, தலைமறைவானதும் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நிதி நிறுவன அதிபர் பரீத் மீது அமலாக்கத்துறையில் பதிவான வழக்கில் இருந்து, அவரை விடுவிக்க தனது உதவியாளர் அலிகான் மூலம் ரூ.18 கோடிக்கு 57 கிலோ தங்க கட்டிகளை ஜனார்த்தன ரெட்டி பெற்றிருப்பது உறுதியாகி உள்ளது.

    ஜனார்த்தன ரெட்டி, உதவியாளர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தற்போது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனார்த்தன ரெட்டியின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

    இவ்வாறு சுனில்குமார் கூறினார்.

    இதற்கிடையில், நிதி நிறுவன அதிபருடன், ஜனார்த்தன ரெட்டி பேசும் புகைப்படங்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
    மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது புதிதாக 21 பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டார். #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது 7 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதையடுத்து இன்று 21 புதிய பண மோசடி வழக்குகள் அவர் மீது பதியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இன்று காலை ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரால் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.

    இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி நூர் ரஷித் இப்ராகீம் கூறுகையில், நஜீப் ரசாக்கின் வங்கி கணக்கில் 681 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முறையற்ற முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அவர் மீது 21 வழக்குகள் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    இன்று காலை கைது செய்யப்பட்ட நஜீப் ரசாக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,  இன்று மதியத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Malaysia #NajibRazak
    ஊழல் பணத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் 60 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.), கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். உடனே அவர் மீதான ஊழல் புகார்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    ‘1 எம்.டி.பி.’ என்று அழைக்கப்படுகிற 1 மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் அங்கமான எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் நிதி 10.3 மில்லியன் டாலரை ( சுமார் ரூ.69 கோடி) தன் வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி ஊழலில் ஈடுபட்டார் என்பதுதான் நஜிப் ரசாக் மீது உள்ள முக்கிய குற்றச்சாட்டு.

    இந்த ஊழல் பணத்தை அவர் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்து உள்ளதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வழக்கு, கோலாலம்பூர் ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நஜிப் ரசாக் மீது நீதிபதி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை வாசித்துக் காட்டி பதிவு செய்தார்.

    அப்போது கோர்ட்டில் குற்றவாளிக்கூண்டில் அமைதியாக நின்ற நஜிப் ரசாக், பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

    இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து வந்த நீதிபதியின் சகோதரர், நஜிப் ரசாக் கட்சியில் முக்கிய பதவி வகித்தவர். எனவே அவர் இப்போது மாற்றப்பட்டு, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு நேற்று விசாரணை நடந்தது குறிப்பிடத்தக்கது.  #Malaysia #NajibRazak #Tamilnews 
    ×