என் மலர்
நீங்கள் தேடியது "Anil Ambani"
- அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
- சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று (பிப்ரவரி 11) எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் உரையாற்றினார்.
அமெரிக்கா - இந்தியா இடையே கடந்த வாரம் ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மக்களவையில் ராகுல் காந்தி பேசியதாவது, "நீங்கள் இந்தியாவை விற்றுவிட்டீர்கள். இந்தியாவை விற்றதில் உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்கள் எங்கள் தாய் பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிரதமர் பலனில்லாமல் இந்தியாவை விற்க மாட்டார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஏன் இந்தியாவை விற்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர்கள் அவரது கழுத்தைப் பிடித்திருக்கிறார்கள். பிரதமரின் கண்களில் பயத்தைக் காணலாம்.
ஒன்று அதானி மீதான அமெரிக்க வழக்கு, மற்றொன்று இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள 'எப்ஸ்டீன் கோப்புகள்'. 30 லட்சம் கோப்புகள் இன்னும் வெளியாகவில்லை, அதுவே பிரதமரின் பயத்திற்கு காரணம்.
அனில் அம்பானி என்ற ஒரு தொழிலதிபர் இருக்கிறார், அவர் ஏன் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை? காரணம், எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் உள்ளது.
அவரை எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்திய ஹர்தீப் புரியிடமும் நான் கேட்க விரும்புகிறேன். அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும், ஹர்தீப் புரியிடமும் அவரை யார் அறிமுகப்படுத்தினார்கள் என்பது எனக்குத் தெரியும்." என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுல் காந்தி முன்வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
ராகுல் காந்தி பேசுவது கோமாளித்தனம் என்றும் 2014-2015 காலகட்டத்தில் தான் 'சர்வதேச அமைதி கழக' (International Peace Institute - IPI ) ஆணையத்தின் செயலாளராகப் பணியாற்றியபோதுதான் எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும் பூரி கூறினார்.
எப்ஸ்டீனை தான் ஒரு குழுவாகவே சந்தித்ததாகவும், அதிகபட்சமாக 3 அல்லது 4 முறை மட்டுமே அவரைச் சந்தித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், "2014-ஆம் ஆண்டு 'லிங்க்ட்இன்' நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் இந்தியா வருவது குறித்து எப்ஸ்டீனுடன் மின்னஞ்சல் பரிமாற்றம் நடந்தது. அந்த மின்னஞ்சலில், இந்தியாவின் இணையப் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மட்டுமே பேசினேன்.
எப்ஸ்டீன் மற்றும் IPI தலைவர் டெர்ஜே ரோட்-லார்சன் ஆகியோர் தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சலில், என்னை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டிருப்பதை ராகுல் காந்தி படிக்க வேண்டும்.
அவர்களது சட்டவிரோதச் செயல்களுக்கு நான் ஒத்துழைக்காததால் தான் அவர்கள் என்னைப் பிடிக்காமல் அவ்வாறு கூறினார்கள்" என்று பூரி தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்க நீதித்துறை சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. இதில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த பல நாடுகளின் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் மோடி, அனில் அம்பானி, மத்திய அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. இதன் பின்ணனியிலேயே ராகுல் காந்தி இன்று மக்களவையில் பேசியுள்ளார்.
- 2019 ஆகஸ்டில் கடத்தல் வழக்கில் கைதான எப்ஸ்டீன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
- எப்ஸ்டீனனுடன் மற்றொரு உரையாடலில் தமக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜான்சன் என்று அனில் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.
அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையில் இருந்த தொடர்பு குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புகளை ஆய்வு செய்த ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில், 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் இருவருக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளன.
எப்ஸ்டீனை சந்திக்க வேண்டும் என அவருக்கு மெசேஜ் அனுப்பிய அனில் அம்பானி, "உங்களது ஆலோசனை என்ன?" என்று கேட்கிறார்.
அதற்கு எப்ஸ்டீன், சந்திப்பை இன்னும் சுவாரஸ்யமாக்க "உயரமான ஸ்வீடிஷ் blonde பெண்" ஒருவரைச் சேர்த்துக்கொள்ளலாம் என்று பதிலளிக்கிறார். அதற்கு அனில் அம்பானி, "அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று பதிலளித்துள்ளார்.
மற்றொரு மின்னஞ்சலில், ஜூன் 2017-ல் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளை ஆகியோரைச் சந்திக்க எப்ஸ்டீனின் உதவியை அனில் அம்பானி நாடியுள்ளார்.
மேலும், 2019 மே மாதம், அனில் அம்பானி நியூயார்க்கில் உள்ள எப்ஸ்டீனின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்ததாக கோப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019 ஆகஸ்டில் கடத்தல் வழக்கில் கைதான எப்ஸ்டீன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடதக்கது.
எப்ஸ்டீனனுடன் மற்றொரு உரையாடலில் தமக்கு மிகவும் பிடித்த ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜான்சன் என்று அனில் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவல்கள் குறித்து கருத்து தெரிவிக்க அனில் அம்பானியின் தரப்பு மறுத்துவிட்டது.
மத்திய வெளியுறவு அமைச்சகம், எப்ஸ்டீனின் இந்த ஆவணங்களை குற்றவாளியின் ஆதாரமற்ற உளறல்கள் என்று கூறி நிராகரித்துள்ளது.
- அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன் பின் இஸ்ரேல் சென்றார்.
- உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காக தனி தீவு ஒன்றையே எப்ஸ்டீன் வைத்திருந்தார்.
கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம் இடம்பெற்றுள்ளது.
2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அதன்பின் அதே வருடம் ஜூலை 4 - 6 வரை பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
எப்ஸ்டீன் கோப்புகளில், ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், "இந்திய பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார், இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காகத் தேவையான எல்லாவற்றையும் (danced and sanged) செய்தார். அது நல்ல பலனளித்தது" என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தொழிலதிபர் அனில் அம்பானி 2017 மார்ச் 16 அன்று எப்ஸ்டீனுக்கு அனுப்பிய செய்தியில், அதிபர் டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

மேலும், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, 2014 டிசம்பரில், எப்ஸ்டீனுக்கு, "உங்கள் அழகிய தீவிலிருந்து நீங்கள் திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் சிறிது நேரம் பேச விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து கேப்புகளில் உள்ள விவரங்களுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை, பிரதமர் மோடி, 2017 இல் இஸ்ரேலுக்கு பயணம் செய்தார் என்பது மட்டும் தான் உண்மை, மற்ற அனைத்தும் எப்ஸ்டீனின் கற்பனையே என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ், "குழந்தைகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் ஆழமான மற்றும் நீண்டகாலத் தொடர்பு தெளிவாகியுள்ளது. இது நாட்டுக்கே அவமானகரமானது.
பிரதமர் நரேந்திர மோடி எப்ஸ்டீனிடம் இருந்து என்ன மாதிரியான ஆலோசனைகளைப் பெற்றார்?, மோடியின் இஸ்ரேல் பயணத்தின் மூலம் டிரம்ப்புக்கு என்ன நன்மை கிடைத்தது?
அது பலனளித்தது! என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டிருந்ததன் பொருள் என்ன? ஆகிய மூன்று கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும். இது தேசத்தின் கண்ணியம் தொடர்பான விஷயம்" என தெரிவித்துள்ளது.
- மும்பையில் உள்ள போலி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தம் வழங்குவதாக கூறி இந்த மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டு இருந்தது.
- விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 13 வங்கிக்கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
மும்பை:
அனில் அம்பானிக்கு சொந்தமான ஆர்-இன்ப்ரா நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுமான திட்டங்களுக்கான பொது நிதியை மோசடி செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
மும்பையில் உள்ள போலி நிறுவனங்களுக்கு துணை ஒப்பந்தம் வழங்குவதாக கூறி இந்த மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டு இருந்தது. இது தொடர்பாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக ஆர்-இன்ப்ரா நிறுவனத்துக்கு சொந்தமான 13 வங்கிக்கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த கணக்குகளில் உள்ள ரூ.54.82 கோடியும் முடக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் கடந்த மாதம் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 18-க்கும் மேற்பட்ட சொத்து, நிலையான வைப்புத்தொகை உள்ளிட்டவை பறிமுதல்.
- ரூ.10,117 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல்.
தொழிலதிபர் அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.1,120 கோடி மதிப்பிலான 18-க்கும் மேற்பட்ட சொத்து, நிலையான வைப்புத்தொகை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.10,117 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
- 2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் மீது குற்றச்ட்டு எழுந்தது.
- பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடன் மோசடி வழக்கு மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதி அவர் முன்பு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அறிவுறுத்தி உள்ளது.
2010 மற்றும் 2012 க்கு இடையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் தொடர்புடைய துணை நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் 2025 இல் அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
- அனில் அம்பானிக்கு தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது
- அசோக் குமார் பால் என்பவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் பாலை அமலாக்கத்துறை கைது செய்தது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் அசோக் குமார் பால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசோக் பால், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் இருந்து நிதியைத் திசைதிருப்புவதிலும், பொதுத் துறை நிறுவனமான SECI- (Solar Energy Corporation of India) சிக்கவைக்க முக்கியப் பங்காற்றியதாக ED குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அசோக் பாலுக்கு 2 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் திங்கள்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்றது.
- மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நிறைவு பெற்றது.
இதனிடையே, ரூ.2,929 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறும் SBI வங்கி குற்றச்சாட்டுகளுக்கு அம்பானி மறுப்பு தெரிவித்துள்ளார்.
- 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்றது.
- மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை.
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அம்பானியும் அவரது குடும்பத்தினர் அனைவரும் உள்ளனர்.
- அனில் அம்பானிக்கு சொந்தமான அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.
- அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.
ஜூலை 24 ஆம் தேதி, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்காக அனில் அம்பானி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசா ரணை நடத்தினார்கள். 66 வயதான தொழில் அதிபர். அனில் அம்பானி மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள்.
- ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் அனுப்பப்பட்டது.
- பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மூன்று நாள் சோதனை நடத்தப்பட்டது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் இந்த மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை 24 ஆம் தேதி, அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
- அனில் அம்பானிக்கு சொந்தமான 50 நிறுவனங்களில் ED சோதனை நடத்தப்பட்டு வருகிறது
- அனில் அம்பானியின் பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி கடன் வழங்கி இருந்தது.
பணமோசடி வழக்கில் டெல்லி, மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
கடன் பெற்று திரும்ப செலுத்தாததால், மோசடியாளர் என SBI அறிவித்த நிலையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
அணில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்களில் உள்ள 50 நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 25க்கும் மேற்பட்ட நபர்களும் விசாரிக்கப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கி இருந்தது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்ற புகாரில் ED சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.






